வேதாந்திரி மகரிஷி அஞ்சல் தலை வெளியீட்டு விழாவில் அமைச்சர் ஆ.ராசா பேச்சு
சென்னை, ஜவஹார்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று வேதாத்திரி மகரிஷி நூற்றாண்டு மற்றும் சிறப்பு அஞ்சல்தலை வெளியீட்டு விழா நடைபெற்றது. வேதாத்திரி மகரிஷி உருவம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலையை முதலமைச்சர் கருணாநிதி வெளியிட, மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ.ராசா பெற்றுக்கொண்டார்.
இந்த விழாவில் அமைச்சர் ஆ.இராசா ஆற்றிய சிறப்புரை:
தத்துவஞானி வேதாந்தி மகரிஷி நூற்றாண்டு விழாவின் தலைவர் தமிழர்களின் தனிப்பெரும் தலைவர் கலைஞர் அவர்களே... இந்த விழாவில் முன்னிலை உரையாற்றிய அருள் செல்வர் பொள்ளாச்சி மக்கலிங்கம் அவர்களே... மதிப்பிற்குரிய அண்ணண் டாக்டர் பாலசுப்பிரமணி அவர்களே..., மேடையில் வீட்டிருக்கின்ற சான்றோர் பெருமக்களே...., விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்துள்ள அமைச்சர் பெருமக்களே.... அனைவருக்கும் வணக்கம்.
நாட்டுக்கு தன்னை அர்பணித்து கொண்ட அரசியல் தலைவர்கள், இந்தியாவின் பண்பாட்டு கலாசாரத்தின் அடையாள சின்னங்களாக விளங்கின்ற தொல்நிறுவனங்கள். இவைகளை நினைவூட்டுகின்ற விதமாகவும் பெருமை சேர்க்கின்ற விதமாகவும் தலைவர்களுக்கும் நிறுவனங்களுக்கும் அஞ்சல் தலை வெளியீட்டு விழாக்களை இந்திய அஞ்சல் துறை நடத்தி வருகிறது என்பதை அறிவீர்கள்.

இங்கே பேசிய நிறுவன முன்னணி தலைவர்களெல்லாம் இந்த தத்துவம் கடவுள் கொள்கை சாராதது என்று குறிப்பிட்டு சொன்னார்கள். பெயரள்ளவோ கண்ணுக்குதான் கண்ணாடி. ஆனால், மூக்கு கண்ணாடி என்றாகிவிட்டது என ஒரு கவிஞன் சொன்னதை போல, வேதங்களை சார்ந்திருந்தாலும் சாராவிட்டாலும் பெயரென்னவொ வேதாந்திரி மகரிசி என ஆகிவிட்ட காரணத்தாலும் அது இந்திய பண்பாட்டு கூறுகளில் ஒன்றாக ஆகவேண்டும் என்ற அவசியத்தினாலும் இந்த அஞ்சல் தலை வெளியிடப்படுகிறது.
உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பே ஆலயமாம், தெள்ளத் தெளிந்தார்க்கு ஜீவன் சிவலிங்கம், கல்லபுலனைந்தும் காலா மணி விளக்கே என்ற தத்துவத்தை உலகிற்கே முன்மொழிந்தவர்கள் தமிழர்கள். அந்த தத்துவத்தை சார்ந்து இன்றைக்கு மகரிசிக்கு அஞ்சல் தலையை தலைவர் கலைஞர் வெளியிட்டிருக்கிறார்.

அன்புதான் கடவுள் என்று சொன்னாலும், மனிதனுக்கு மனிதன் இடையே காட்டும் இரக்க உணர்வுதான் கடவுள் என்று சொன்னாலும், கள்ளமில்லா உள்ளம் அதுதான் கடவுளின் இல்லம் என்று சொன்னாலும், ஏழையின் சிரிப்பிலே காண்போம் என்று அண்ணா சொன்னாரே அதுதான் கடவுள் என்று சொன்னாலும், அப்படி பட்ட கடவுளோடு எனக்கு சமரசம் உண்டு என்று சொன்னவர் கலைஞர். அவரின் கரங்களால் இந்த அஞ்சல் தலை வெளியிடப்பட்டிருக்கிறது. உலக அமைதிக்கான நிகழ்ச்சி இது.
தொலைதொடர்பு வளர்ந்திருக்கிறது; தகவல் தொழில்நுட்பம் இன்றைக்கு வளர்ந்திருக்கிறது. இந்த வளர்ச்சியில் தொலைவிலுள்ள துருவங்கள் அருகே வந்துவிட்டன. கூப்பிட முடியாத தூரத்தில் இருக்கும் துருவங்கள் இணைந்து விட்டன. ஆனால் அண்டை வீட்டுக்காரன் அந்நியப்பட்டு போய் விட்டான். எனவே அமைதி இல்லை என்று ஒரு புது கவிஞன் சொன்னான். அந்த அமைதி வருவதற்கு இந்த அஞ்சல் தலை வெளியீடு பயன்படும் என்ற நம்பிக்கையில், தலைவர் கலைஞர் அவர்களை வணங்கி விடைபெறுகின்றேன்.