#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Friday, January 07, 2011

CAG அறிக்கை முற்றிலும் தவறானது: அமைச்சர் கபில் சிபல் பேட்டி

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் கபில்சிபல், ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக வெளியிடப்பட்ட அறிக்கை முற்றிலும் தவறானது. மத்திய அரசுக்கு இழப்பு எதுவும் ஏற்படவில்லை. ஸ்பெக்டரம் ஒதுக்கீடு தொடர்பான தணிக்கை குழு (CAG) அறிக்கை அடிப்படை ஆதாரமற்றது. அந்த குழுவின் கணக்கீட்டு முறை மத்திய அரசுக்கு மிகுந்த வேதனை தருகிறது. மத்திய அரசு ஒதுக்கீடு செய்த ஸ்பெக்ட்ரம் அலைவரிசையால் வாடிக்கையாளர்கள் பயனடைந்துள்ளனர் என்று தெரிவித்தார்.

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற முறையை கொண்டு வந்த பா.ஜ.க., தற்போது நாடாளுமன்றத்தை முடக்குகிறது, இதன் மூலம் சாதாரண மக்களுக்கு பா.ஜ.க அநீதி இழைத்துவருகிறது. தணிக்கை குழு (CAG) வெளியிட்ட மிக மோசமான அறிக்கையே, எதிர்கட்சிகள் மக்களிடம் தவறானதை சொல்வதற்கு காரணமாக அமைந்து விட்டது என்றும் அமைச்சர் கபில் சிபல் கூறினார்.

1999ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த பா.ஜ.க. கொண்டு வந்த முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற பாலிசியை ஆ.ராசா செயல்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

Read more...

  ©Template by Dicas Blogger.

TOPO