#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Friday, February 04, 2011

ஆ.ராசா எந்த நிறுவனத்துக்கும் சாதகமாக செயல்படவில்லை: கபில்சிபல்

2 ஜி விவகாரத்தில் ஆ.ராசாவும், மத்திய அரசும் எந்த நிறுவனத்துக்கும் சாதகமாக செயல்படவில்லை என்று த்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் கபில்சிபல் விளக்கமளித்துள்ளார்.


2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பின்பற்றப்பட்ட கொள்கைகள் குறித்து விசாரிக்க, மத்திய அரசால் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமையிலான ஒரு நபர் கமிட்டி, கடந்த மாதம் 31-ஆம் தேதி அமைச்சர் கபில் சிபலிடம் அளித்திருந்தது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சி.பி.ஐ, ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் 2 நிறுவனங்களுக்கு ஆ.ராசா சாதகமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு அறிக்கையை தாக்கல் செய்தது.

இந்நிலையில், நீதிபதி சிவராஜ் பாட்டீலின் அறிக்கை குறித்து டில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கபில்சிபல், 2 ஜி விவகாரத்தில் ஆ.ராசாவும், மத்திய அரசும் எந்த நிறுவனத்துக்கும் சாதகமாக செயல்படவில்லை என்றார். 1991 ஆம் ஆண்டு தொலைத்தொடர்பு கொள்கையை பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பின்பற்றவில்லை என்றும் அவர் கூறினார். பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சியில் இருந்தே ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் விதிகள் மீறப்பட்டதாகவும் 2003ஆம் ஆண்டுக்கு பின் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் வெளிப்படை தன்மை பின்பற்றப்படவில்லை என்றும் கபில்சிபல் தெரிவித்தார். விதி மீறல் தொடர்பாக பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் அமைச்சர்கள் பதில் கூற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Read more...

சாதனை செய்த ஆ.ராசாவை மனதார பாராட்டுகிறேன்: கலைஞர்

செல்வந்தர்கள் பயன்படுத்திய மொபைல் போனை கோடான கோடி ஏழை எளியவர்கள் பயன்படுத்த உதவியதற்காக சிறை சென்ற முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவை பாராட்டுகிறேன் என முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.


சென்னையில் வியாழக்கிழமை இரவு நடந்த தி.மு.க., பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், கேரளத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட ஒரு வரலாறு உண்டு. அந்த பண்டிகை ஆய்த பூஜை, தீபாவளி போன்று கொண்டாடுகின்றனர் என நான் நினைத்தேன். மாவலி சக்கரவர்த்தி என்ற மன்னன் நீண்ட காலமாக கேரளாவில் நல்லாட்சி புரிந்தான். இதில், ஒரு சில உயர் ஜாதியினர், நாங்களும் ஆட்சிக்கு வர வேண்டாமா என விஷ்ணுவிடம் வரம் கேட்டனர். அதன் அடிப்படையில், மாவலி சக்கரவர்த்தியை விஷ்ணு அழிக்கும் போது, மன்னன் சக்கரவர்த்தி ஒரு வரம் கேட்டான். என்னால் வாழ்ந்து வளம் பெற்ற குடிமக்கள், ஆண்டுக்கு ஒரு முறையாவது என்னை பார்த்து வாழ்த்து பெற வேண்டும் என்ற வரம் கொடுத்தால் சாகத் தயார் எனக் கூறினான். இந்த வரத்தை கடவுள் கொடுத்த பின், மன்னன் இறந்தார். இதனால் தான் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆனால், கொடுமை புரியும் அசுரர்களைத் தான் தேவர்கள் அழிப்பர் என்பதை புராணங்கள் கூறுகின்றன. ஆனால், நல்லவனாக ஆண்ட மாவலி மன்னனை அழித்ததாக இந்த கதை வருகிறது. நான் மாவலி மன்னன் அல்ல; மாவலி மன்னனின் மரபு வழி ஆட்சி செய்கிறவன். ந்த மாவலி மன்னனுக்கு நடந்தது போல், இன்றைக்கும் நமக்கு நடக்கிறது. ஆ.ராசா போன்றவர்களுக்கு இதே கொடுமை தான் நடக்கிறது. என்ன செய்வது இதுபோன்ற கொடுமைகளை நாம் அனுபவித்து ஆக வேண்டியுள்ளது என்றார்.

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் .ராசா என்ன குற்றம் புரிந்தார். செல்வனும், சீமாட்டியும் மட்டுமே பயன்படுத்திய மொபைல் போன் சேவையை, கோடான கோடி ஏழைகள் குறைந்த விலையில் பயன்படுத்துகின்றனர். இது .ராசா செய்த சாதனை. இதைத் தான் .ராசா செய்திருக்கிறார். இன்று டில்லி சிறையில் இருக்கும் .ராசாவின் சாதனைக்காக மனமார பாராட்டுகிறேன்; வாழ்த்துகிறேன் என்றும் முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.

தி.மு.க. ஆட்சியின் மூலம் எத்தகைய வரங்களை மக்கள் பெற்றனர் என்பதை சொல்கிறேன். கிராமங்கள், நகரங்களில் குடிசையில்லாத நிலையை ஏற்படுத்த வீட்டு வசதி திட்டம் கொண்டு வந்தோம். இத்திட்டத்தை செயல்படுத்தும்போது, சிலர் கேட்டனர்; அதற்கு பிறகும் திட்டம் வருமா, என சிலர் கேட்டனர். ஆனால், இத்திட்டம் தொடரும்: நாங்களும் தொடர்வோம். இத்தனை ஆண்டு காலத்தில் பல்வேறு சிறப்புமிக்க திட்டங்களை கொடுத்துள்ளோம். இதைப் பற்றி பாராட்டாவிட்டாலும் கவலைப்படவில்லை. என்னை பொறுத்தவரை நான் இல்லாத காலத்தில், நான் ஆற்றிய பணிகள் பல நூறு ஆண்டுகள் கழித்து என்றாவது நிலைக்கும். அவற்றை யாரும் அழிக்க முடியாது. தமிழ் சமுதாயத்திற்கும், திராவிட இயக்கத்திற்கும் நான் பல பணிகள் ஆற்றியிருக்கிறேன். அதை தொண்டர்கள் ஏற்று நடத்த வேண்டும் என்றும் தி.மு.க.தலைவர் கலைஞர் தெரிவித்தார்.

Read more...

கொள்கை பரப்பு செயலாளராக ஆ.ராசா நீடிக்கிறார்: தி.மு.க. விளக்கம்

.ராசா கட்சி பதவியை ராஜினாமா செய்யவில்லை, அவர் கொள்கை பரப்பு செயலாளராக நீடிக்கிறார் என்று தி.மு.. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.


தி.மு.க.வின் கொள்கை பரப்பு செயலாளராக இருக்கும் ஆ.ராசா தனது கட்சி பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும், அந்த கடிதம் தி.மு.க. பொதுக்குழுவில் வாசிக்கப்பட்டதாகவும் தகவல்கள் பரவின.

பொதுக்குழு முடிவில் இது குறித்து தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவனிடம் கேட்டபோது, இது முற்றிலும் தவறானது, அடிப்படை ஆதாரமற்றது. கட்சிக்கு அதுபோன்ற ராஜினாமா கடிதம் எதுவும் வரவில்லை. பொதுக்குழுவில் கடிதத்தை வாசித்ததாகவும் என் காதில் எதுவும் விழவில்லை. இப்போது வரை ஆ.ராசா தான் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக இருக்கிறார். அவர் அந்த பதவியில் தொடர்ந்து நீடிப்பார். அவர் குற்றமற்றவர் என்று நிரூபித்து வெளியில் வருவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என்றும் கூறினார்.

Read more...

Friday, January 07, 2011

CAG அறிக்கை முற்றிலும் தவறானது: அமைச்சர் கபில் சிபல் பேட்டி

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் கபில்சிபல், ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக வெளியிடப்பட்ட அறிக்கை முற்றிலும் தவறானது. மத்திய அரசுக்கு இழப்பு எதுவும் ஏற்படவில்லை. ஸ்பெக்டரம் ஒதுக்கீடு தொடர்பான தணிக்கை குழு (CAG) அறிக்கை அடிப்படை ஆதாரமற்றது. அந்த குழுவின் கணக்கீட்டு முறை மத்திய அரசுக்கு மிகுந்த வேதனை தருகிறது. மத்திய அரசு ஒதுக்கீடு செய்த ஸ்பெக்ட்ரம் அலைவரிசையால் வாடிக்கையாளர்கள் பயனடைந்துள்ளனர் என்று தெரிவித்தார்.

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற முறையை கொண்டு வந்த பா.ஜ.க., தற்போது நாடாளுமன்றத்தை முடக்குகிறது, இதன் மூலம் சாதாரண மக்களுக்கு பா.ஜ.க அநீதி இழைத்துவருகிறது. தணிக்கை குழு (CAG) வெளியிட்ட மிக மோசமான அறிக்கையே, எதிர்கட்சிகள் மக்களிடம் தவறானதை சொல்வதற்கு காரணமாக அமைந்து விட்டது என்றும் அமைச்சர் கபில் சிபல் கூறினார்.

1999ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த பா.ஜ.க. கொண்டு வந்த முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற பாலிசியை ஆ.ராசா செயல்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

Read more...

Monday, December 20, 2010

முன் ஜாமீன் வாங்க மாட்டேன்: ஆ.ராசா பேட்டி

சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர தயாராக இருப்பதாகவும், ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக முன் ஜாமீன் பெறப்போவதில்லை என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் .ராசா கூறியுள்ளார்.


2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பாக மத்திய அரசில் தகவல்தொடர்பு மற்றும் தொழில்நுட்பக் துறையின் அமைச்சராக இருந்த ஆ.ராசாவுக்கு சிபிஐ விசாரணை நடத்தவுள்ளது. இந்நிலையில், உடல் நலக்குறை காரணமாக உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்த ஆ.ராசா மருத்துவ பரிசோதனைக்கு பிறகு வீடு திரும்பினார்.

அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த ஆ.ராசா, 2 ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையை கண்டு ஓடி ஒளியப்போவதில்லை என்றும், சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர தயாராக இருக்கிறேன் என்றும் தெரிவித்தார்.

சட்டம் பயின்றுள்ள நான் எந்தவொரு சட்ட விதிமுறைகளையும் புறக்கணிக்க மாட்டேன் என்றும், நான் எந்த குற்றமும் செய்யவில்லை என்பதால் முன் ஜாமீன் எதுவும் கோரப்போவதில்லை என்றும் கூறினார்.

செய்தியாளர்கள் வீணாக குழப்பிக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட ஆ.ராசா, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நான் பயப்படுவதாக சில ஊடகங்கள் மக்கள் மத்தியில் செய்தி வெளியிட்டு வருவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று தெரிவித்தார்.
==================================================

சி.பி.ஐ. முன் ஆ.ராசா விளக்கமளிப்பார்: கலைஞர்
...............................................................................................................

சென்னையில் செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்த தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான கலைஞர், காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி பலமாக உள்ளது என்றும், இந்தக் கூட்டணியை யாரும் கலைக்க நினைத்தாலும் முடியாது என்றும் கூறினார். முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு சி.பி.ஐ. நோட்டீஸ் அனுப்பியதாக கூறுவது வழக்கமானதுதான் என்றும், சி.பி.ஐ. முன் ஆ.ராசா விளக்கமளிப்பார் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

Read more...

Monday, December 13, 2010

ஆ.ராசா மீது ஆக்‌ஷன்?!: கலைஞர் சிறப்பு பேட்டி

தி.மு.க.வுக்கு சவாலாகவும், நெருக்கடியாகவும் உள்ள ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை கலைஞர் எப்படி சமாளிக்கப் போகிறார் என்று தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவே எதிர்பார்க்கிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், அவருடைய மனநிலையை படம் பிடிக்கும் வகையில் எடுக்கப்பட்ட பேட்டி இது.....


கேள்வி
: ஜெயின் கமிஷன் அறிக்கை வெளியானபோது, அகில இந்திய அளவில் தி.மு.க.வை தனிமைப்படுத்தும் முயற்சிகள் நடந்தன. அப்போது அதை வெற்றிகரமாக எதிர்கொண்டீர்கள். அரசியல் ராஜதந்திரி எனப்படும் நீங்கள் இந்த ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எத்தகைய நிலை எடுக்கவிருக்கிறீர்கள்?

கலைஞர்:

ஜெயின் கமிஷன் அறிக்கை மட்டுமல்ல, தி.மு.கழகத்தைத் தனிமைப்படுத்த எத்தனையோ சூழ்ச்சிகள் யார் யாராலோ நடத்தப்பட்டு, ஒவ்வொன்றில் இருந்தும் தி.மு.கழகம் எவ்வாறு வெற்றிகரமாக தலைநிமிர்ந்து நின்றதோ, அதைப் போலவே இந்தப் பிரச்சனையிலும் தி.மு.கழகம் தலைநிமிர்ந்து நிற்கும்.

ஸ்பெக்ட்ரம் பிரச்சனையைப் பொறுத்தவரை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படும் இழப்பு என்பது யூகத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட கருத்தியலான இழப்பாகும். இந்த இழப்பினை கணக்கிடப்பட்ட முறையே விவாதத்திற்குரியது. இதைத் தான் நான் ஒரு விழாவில் பேசும்போது, அந்தக் காலத்தில் பேசாப் படம் ஓடிக்கொண்டிருக்கும்போது திரையில் நடப்பதை வர்ணிக்கும் ஒருவர் அதோ பார் பகாசூரன் வருகிறான். அவனுக்கு பல்லுக்கு பல் இரு காதம், பல்லிடுக்கு முக்காதம் என்றேல்லாம் சொல்வான். ஐந்து காதம் என்றால் ஐம்பது மைல். அந்த அளவுக்கு ஒருவன் இருக்க முடியுமா என்றெல்லாம் யாரும் எண்ணிப் பார்ப்பதில்லை என்றெல்லாம் பேசினேன்.

தற்போது கிடைக்கின்ற வருவாயைப் போல இந்த முயற்சியை பத்தாண்டுகளுக்கு முன்பு மேற்கொண்டிருந்தால் இதே அளவிற்கு கிடைத்திருக்கும் என்று கற்பனையில் ஒரு தொகையை தாங்களே நிர்ணயித்துக் கொண்டு, அந்தத் தொகை இழப்பாகி விட்டது, அந்தத் தொகை யாருக்கோ போய்விட்டது, அந்தத் தொகை அளவுக்கு ஊழல் நடந்துவிட்டது என்றெல்லாம்தான் அனுமானித்து ஏடுகளும், ஊடகங்களும் அதனை பெரிதுப்படுத்தி பூதாகரமாக்குகின்றன. உண்மை ஒருநாள் வெளிவரும்போது உண்மையான இழப்பு எவ்வளவு, அந்த இழப்புக்கு காரணம் யார் அல்லது எது என்பது வெளிவரத் தான் போகிறது.

கேள்வி: மத்திய அரசுக்கு தி.மு.க. ஆதரவளித்து அதில் பங்கேற்றுள்ள நிலையில் சில நாட்கள் முன்புவரை மத்திய அமைச்சராக இருந்தவரின் வீடு, அலுவலகம், உறவினர்களுக்கு சொந்தமான இடங்கள் என பல இடங்களிலும் சி.பி.ஐ. ரெய்டு நடந்திருப்பது ஏன் என்று பொதுமக்களிடம் கேள்வி எழுந்துள்ளதே?
கலைஞர்:
சி.பி.ஐ. ரெய்டுகளுக்கும் மத்திய அரசுக்கும் அல்லது காங்கிரஸ் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. உச்சநீதிமன்றத்தால் இந்தப் பிரச்சனையில் புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.க்கு வழங்கப்பட்ட அறிவுரைகளின் அடிப்படையிலும் ஆணைகளின் அடிப்படையிலும்தான் இந்தச் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். சி.பி.ஐ. ரெய்டு நடத்தியதாலேயே ஒருவரை குற்றவாளி என்று கருதிட முடியாது.

கேள்வி: 60 ஆயிரம் கோடி இழப்பு என்று தொடங்கிய எதிர்க்கட்சிகள் தற்போது 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி என்கிற அளவுக்கு கணக்கை உயர்த்தியுள்ளன. மத்திய தணிக்கைத் துறையின் அறிக்கையும் இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. உலகிலேயே இந்தளவுக்கு எங்குமே முறைகேடு நடந்ததில்லை என தி.மு.க. மீதும் அதன் சார்பில் அமைச்சராக இருந்த ஆ.ராசா மீதும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு கட்சியின் தலைவர் என்ற முறையில் உங்கள் பதில் என்ன?

கலைஞர்:

1 இலட்சத்து 80 ஆயிரம் கோடி என்பதெல்லாம் பூதாகரமாக பெரிதுபடுத்தப்படுகிற புள்ளி விவரம்தான். கடந்த ஆண்டுகளில் - கடந்த கால அமைச்சர்கள் கையாண்ட அதே நடைமுறையை அந்தத் துறையின் பின்பற்றியிருப்பதாகத்தான் அந்தத் துறையின் அமைச்சராக இருந்த ராசா திரும்பத் திரும்ப சொல்கிறார். அதனால்தான் கடந்த காலத்தில் என்ன நடைமுறை பின்பற்றப்பட்டது என்பதை அறிய உச்சநீதிமன்றம், கடந்த பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் இருந்தே சி.பி.ஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கின்றது. அத்தகைய விசாரணை நடைபெற்றால் உண்மை வெளிச்சத்துக்கு வந்துவிடும்.

கேள்வி: மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ஆ.ராசா மீது கட்சியும் நடவடிக்கை எடுக்கப் போகிறது என்று வெளியாகும் செய்திகள்...?

கலைஞர்:

இந்தக் கேள்விக்கு விளக்கமாக நான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியிலே பதில் கூறியிருக்கிறேன். ராசா குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், அதற்கு பிறகு கட்சி தயவு தாட்சண்யம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கும். அதுவரையில், நான் எதுவும் சொல்வதற்கில்லை. ராசா எந்தத் தவறும் செய்யவில்லை என்று தி.மு.க நம்புகிறது. அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கபடுகிற வரையில் நாங்கள் ராசாவை கைவிட தயாராக இல்லை என்று நான் கூறி, அது ஏடுகளில் வெளிவந்துள்ளது. ஆனால் குற்றவாளி என்று நிரூபிக்கபடாத நிலையிலேயே அவரை கட்சியிலிருந்து ஓரம் கட்டிவிட மாட்டார்களா என்று ஒருசிலர் நினைப்பதையும் நான் அறிவேன்.

கேள்வி: தேசியக் கட்சிகள் - மாநிலக் கட்சிகள் என அனைத்துத் தரப்பிலும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை தீவிரமாக கையில் எடுத்திருப்பதால், தமிழக சட்டமன்ற தேர்தலில் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறதே?

கலைஞர்:

சட்டமன்ற தேர்தலில் ஸ்பெக்டரம் பிரச்சனை தாக்கத்தை ஏற்படுத்தாதா, ஏற்படுத்த வேண்டும் என்று எதிர்கட்சிகள் ஆசைப்படுகின்றன. தமிழ்நாட்டில் கழக ஆட்சி தொடர்ந்து நிறைவேற்றி வரும் பல்வேறு நலத் திட்டங்களாலும், ஏழையெளியோர், நலிந்த பிரிவினர்க்கு செய்யப்படும் சலுகைகளாலும் கழக அரசுக்கு மக்களிடம் பேராதரவு இருப்பதை கண்டு, இதை எப்படி கெடுக்கலாம் என்று யோசித்து கொண்டிருந்த எதிர்கட்சியினர் ஸ்பெக்ட்ரம் பிரச்சனையைப் பயன்படுத்தியாவது ஏதாவது நடக்காதா என்று எண்ணுகிறார்கள். ஆனால் அவர்களின் எண்ணம் நிறைவேறாது.

உதாரணம் வேண்டுமென்றால், ஒரு சில மாதங்களுக்கு முன்பு அதாவது ஜூலையில் பிகார் மாநில முதலமைச்சர் மீது 1500 கோடி ரூபாய் ஊழல் புகார் சொல்லி சட்டசபையையே நடக்க விடாமல் ஸ்தம்பிக்க செய்த பிறகும் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மக்கள் எந்த அளவிற்கு அவருக்கு வாக்குகளை வழங்கினார்கள் என்பதை எண்ணிப் பார்த்தால், ஸ்பெக்ட்ரம் பிரச்சனை சட்டமன்ற தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.

கேள்வி:
மீண்டும் ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு தி.மு.க. அரசின் திட்டங்கள், தமிழகத்தின் பெரும்பான்மையான மக்களை அடைந்துள்ளதா? மக்களிடம் இத்திட்டங்களுக்கு கிடைத்துள்ள ஆதரவு, வரும் தேர்தலில் தி.மு.க.வை பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் அமர்த்தும் என நம்புகிறீர்களா?

கலைஞர்:

விலையை குறைக்க ஒரு அரசினால் என்னென்ன முயற்சிகள் எடுக்க முடியுமோ அத்தனையையும் தி.மு.கழக அரசு எடுத்து வருவதை நாட்டு மக்கள் நன்றாகவே அறிவார்கள். அலுவலர்களுக்கு, தொழிலாளர்களுக்கு விலைவாசி உயர்வை சமாளிப்பதற்காக ஊதிய உயர்வையும் சலுகைகளையும் அவ்வப்போது அளித்தும் வருகின்றோம். எனவே, தேர்தலில் எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடாது.

மக்களுக்கு தொடர்ந்து நன்மை செய்யும் நல்லாட்சி - மக்களின் நல்வாழ்வுக்காகவும், மேம்பாட்டுக்காகவும் திட்டங்களை தீட்டி செயல்படுத்தும் ஆட்சி - கழக ஆட்சி என்பதை தமிழ்நாட்டு அனைத்துத் தரப்பு மக்களும் நன்றாகவே அறிந்துள்ளார்கள், புரிந்துள்ளார்கள். எனவே, நல்லாட்சி மேலும் தொடர வேண்டுமென்ற நல்லெண்ணத்தோடு வரும் தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியை பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் அமர்த்துவார்கள் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
===============================================
(நன்றி: நக்கீரன் - டிசம்பர் 2010)
===============================================

Read more...

Monday, November 29, 2010

ஆ.ராசா எம்.பிக்கு தொகுதி மக்களின் உற்சாக வரவேற்பு

ஸ்பெக்ட்ரம் 2 ஜி அலைவரிசையை அமைச்சர் ஆ.ராசா, குறைந்த தொகைக்கு ஒதுக்கீடு செய்ததால் செல்போன் மற்றும் தொலைப்பேசி கட்டணம் மிக கணிசமாக குறைந்தது. இதனால், ஆத்திரமடைந்த சில அதிகார நிறுவன தொழிலதிபர்களின் தூண்டுதலின் பேரில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக கூக்குரலிட்டனர். அந்த ஆவேசப் பழித் தூற்றலுக்கு தகுந்த ஆதாரங்கள் இல்லை என்றாலும், ஜனநாயக நடைமுறைகள் சுமூகமாக நடைபெறுவதற்காக அமைச்சர் பதவியில் இருந்து ஆ.ராசா விலகினார்.


பதவி விலகிய பின் முதல் முறையாக தனது சொந்த தொகுதியான, நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தார். காலை 9.40 மணிக்கு சென்னையில் இருந்து கோவை பீளமேடு விமான நிலையத்திற்கு வந்த ஆ.ராசா எம்.பியை, தமிழக கதர் துறை அமைச்சர் ராமச்சந்திரன், குன்னூர் எம்.எல்.ஏ., சவுந்திரபாண்டியன், கோவை மாநகர தி.மு.க., செயலர் வீரகோபால், முன்னாள் எம்.பி., ராமநாதன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
நீலகிரி மாவட்ட கிராமங்களிலிருந்து 50க்கும் மேற்பட்ட வேன், கார் உள்ளிட்ட வாகனங்களில் வந்திருந்த தி.மு.க., காங்கிரஸ், திராவிடர் கழகம், பெரியார் இளைஞர் நற்பணி மன்றம், ஆதிதமிழர் பேரவை, அவினாசி – அத்திக்கடவு நிலத்தடிநீர் பிடிப்பு திட்டக் கூட்டமைப்பு, விழுதுகள் அமைப்பு, முத்திரையர் சங்கம், தொழிலாளர் முன்னேற்றச் சங்கம், அமைப்புச்சாரா தொழிலாளர் முன்னேற்றச்சங்கம், ஆதிவாசிகள் கூட்டமைப்பு, தோட்டத் தொழிலாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் விமான நிலையத்தில் திரண்டு நின்று வரவேற்பளித்தனர்.

மேலும் கோவையிலிருந்து உதகை வரை ஆங்காங்கே 10க்கும் மேற்பட்ட இடங்களில் கொட்டும் மழையில் மக்கள் திரண்டு வரவேற்பளித்தனர். பின், அவர் ஊட்டி புறப்பட்டு சென்றார்.

Read more...

  ©Template by Dicas Blogger.

TOPO