#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Friday, February 04, 2011

ஆ.ராசா எந்த நிறுவனத்துக்கும் சாதகமாக செயல்படவில்லை: கபில்சிபல்

2 ஜி விவகாரத்தில் ஆ.ராசாவும், மத்திய அரசும் எந்த நிறுவனத்துக்கும் சாதகமாக செயல்படவில்லை என்று த்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் கபில்சிபல் விளக்கமளித்துள்ளார்.


2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பின்பற்றப்பட்ட கொள்கைகள் குறித்து விசாரிக்க, மத்திய அரசால் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமையிலான ஒரு நபர் கமிட்டி, கடந்த மாதம் 31-ஆம் தேதி அமைச்சர் கபில் சிபலிடம் அளித்திருந்தது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சி.பி.ஐ, ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் 2 நிறுவனங்களுக்கு ஆ.ராசா சாதகமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு அறிக்கையை தாக்கல் செய்தது.

இந்நிலையில், நீதிபதி சிவராஜ் பாட்டீலின் அறிக்கை குறித்து டில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கபில்சிபல், 2 ஜி விவகாரத்தில் ஆ.ராசாவும், மத்திய அரசும் எந்த நிறுவனத்துக்கும் சாதகமாக செயல்படவில்லை என்றார். 1991 ஆம் ஆண்டு தொலைத்தொடர்பு கொள்கையை பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பின்பற்றவில்லை என்றும் அவர் கூறினார். பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சியில் இருந்தே ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் விதிகள் மீறப்பட்டதாகவும் 2003ஆம் ஆண்டுக்கு பின் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் வெளிப்படை தன்மை பின்பற்றப்படவில்லை என்றும் கபில்சிபல் தெரிவித்தார். விதி மீறல் தொடர்பாக பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் அமைச்சர்கள் பதில் கூற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Read more...

சாதனை செய்த ஆ.ராசாவை மனதார பாராட்டுகிறேன்: கலைஞர்

செல்வந்தர்கள் பயன்படுத்திய மொபைல் போனை கோடான கோடி ஏழை எளியவர்கள் பயன்படுத்த உதவியதற்காக சிறை சென்ற முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவை பாராட்டுகிறேன் என முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.


சென்னையில் வியாழக்கிழமை இரவு நடந்த தி.மு.க., பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், கேரளத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட ஒரு வரலாறு உண்டு. அந்த பண்டிகை ஆய்த பூஜை, தீபாவளி போன்று கொண்டாடுகின்றனர் என நான் நினைத்தேன். மாவலி சக்கரவர்த்தி என்ற மன்னன் நீண்ட காலமாக கேரளாவில் நல்லாட்சி புரிந்தான். இதில், ஒரு சில உயர் ஜாதியினர், நாங்களும் ஆட்சிக்கு வர வேண்டாமா என விஷ்ணுவிடம் வரம் கேட்டனர். அதன் அடிப்படையில், மாவலி சக்கரவர்த்தியை விஷ்ணு அழிக்கும் போது, மன்னன் சக்கரவர்த்தி ஒரு வரம் கேட்டான். என்னால் வாழ்ந்து வளம் பெற்ற குடிமக்கள், ஆண்டுக்கு ஒரு முறையாவது என்னை பார்த்து வாழ்த்து பெற வேண்டும் என்ற வரம் கொடுத்தால் சாகத் தயார் எனக் கூறினான். இந்த வரத்தை கடவுள் கொடுத்த பின், மன்னன் இறந்தார். இதனால் தான் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆனால், கொடுமை புரியும் அசுரர்களைத் தான் தேவர்கள் அழிப்பர் என்பதை புராணங்கள் கூறுகின்றன. ஆனால், நல்லவனாக ஆண்ட மாவலி மன்னனை அழித்ததாக இந்த கதை வருகிறது. நான் மாவலி மன்னன் அல்ல; மாவலி மன்னனின் மரபு வழி ஆட்சி செய்கிறவன். ந்த மாவலி மன்னனுக்கு நடந்தது போல், இன்றைக்கும் நமக்கு நடக்கிறது. ஆ.ராசா போன்றவர்களுக்கு இதே கொடுமை தான் நடக்கிறது. என்ன செய்வது இதுபோன்ற கொடுமைகளை நாம் அனுபவித்து ஆக வேண்டியுள்ளது என்றார்.

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் .ராசா என்ன குற்றம் புரிந்தார். செல்வனும், சீமாட்டியும் மட்டுமே பயன்படுத்திய மொபைல் போன் சேவையை, கோடான கோடி ஏழைகள் குறைந்த விலையில் பயன்படுத்துகின்றனர். இது .ராசா செய்த சாதனை. இதைத் தான் .ராசா செய்திருக்கிறார். இன்று டில்லி சிறையில் இருக்கும் .ராசாவின் சாதனைக்காக மனமார பாராட்டுகிறேன்; வாழ்த்துகிறேன் என்றும் முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.

தி.மு.க. ஆட்சியின் மூலம் எத்தகைய வரங்களை மக்கள் பெற்றனர் என்பதை சொல்கிறேன். கிராமங்கள், நகரங்களில் குடிசையில்லாத நிலையை ஏற்படுத்த வீட்டு வசதி திட்டம் கொண்டு வந்தோம். இத்திட்டத்தை செயல்படுத்தும்போது, சிலர் கேட்டனர்; அதற்கு பிறகும் திட்டம் வருமா, என சிலர் கேட்டனர். ஆனால், இத்திட்டம் தொடரும்: நாங்களும் தொடர்வோம். இத்தனை ஆண்டு காலத்தில் பல்வேறு சிறப்புமிக்க திட்டங்களை கொடுத்துள்ளோம். இதைப் பற்றி பாராட்டாவிட்டாலும் கவலைப்படவில்லை. என்னை பொறுத்தவரை நான் இல்லாத காலத்தில், நான் ஆற்றிய பணிகள் பல நூறு ஆண்டுகள் கழித்து என்றாவது நிலைக்கும். அவற்றை யாரும் அழிக்க முடியாது. தமிழ் சமுதாயத்திற்கும், திராவிட இயக்கத்திற்கும் நான் பல பணிகள் ஆற்றியிருக்கிறேன். அதை தொண்டர்கள் ஏற்று நடத்த வேண்டும் என்றும் தி.மு.க.தலைவர் கலைஞர் தெரிவித்தார்.

Read more...

கொள்கை பரப்பு செயலாளராக ஆ.ராசா நீடிக்கிறார்: தி.மு.க. விளக்கம்

.ராசா கட்சி பதவியை ராஜினாமா செய்யவில்லை, அவர் கொள்கை பரப்பு செயலாளராக நீடிக்கிறார் என்று தி.மு.. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.


தி.மு.க.வின் கொள்கை பரப்பு செயலாளராக இருக்கும் ஆ.ராசா தனது கட்சி பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும், அந்த கடிதம் தி.மு.க. பொதுக்குழுவில் வாசிக்கப்பட்டதாகவும் தகவல்கள் பரவின.

பொதுக்குழு முடிவில் இது குறித்து தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவனிடம் கேட்டபோது, இது முற்றிலும் தவறானது, அடிப்படை ஆதாரமற்றது. கட்சிக்கு அதுபோன்ற ராஜினாமா கடிதம் எதுவும் வரவில்லை. பொதுக்குழுவில் கடிதத்தை வாசித்ததாகவும் என் காதில் எதுவும் விழவில்லை. இப்போது வரை ஆ.ராசா தான் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக இருக்கிறார். அவர் அந்த பதவியில் தொடர்ந்து நீடிப்பார். அவர் குற்றமற்றவர் என்று நிரூபித்து வெளியில் வருவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என்றும் கூறினார்.

Read more...

  ©Template by Dicas Blogger.

TOPO