#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }
Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts

Friday, February 04, 2011

கொள்கை பரப்பு செயலாளராக ஆ.ராசா நீடிக்கிறார்: தி.மு.க. விளக்கம்

.ராசா கட்சி பதவியை ராஜினாமா செய்யவில்லை, அவர் கொள்கை பரப்பு செயலாளராக நீடிக்கிறார் என்று தி.மு.. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.


தி.மு.க.வின் கொள்கை பரப்பு செயலாளராக இருக்கும் ஆ.ராசா தனது கட்சி பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும், அந்த கடிதம் தி.மு.க. பொதுக்குழுவில் வாசிக்கப்பட்டதாகவும் தகவல்கள் பரவின.

பொதுக்குழு முடிவில் இது குறித்து தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவனிடம் கேட்டபோது, இது முற்றிலும் தவறானது, அடிப்படை ஆதாரமற்றது. கட்சிக்கு அதுபோன்ற ராஜினாமா கடிதம் எதுவும் வரவில்லை. பொதுக்குழுவில் கடிதத்தை வாசித்ததாகவும் என் காதில் எதுவும் விழவில்லை. இப்போது வரை ஆ.ராசா தான் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக இருக்கிறார். அவர் அந்த பதவியில் தொடர்ந்து நீடிப்பார். அவர் குற்றமற்றவர் என்று நிரூபித்து வெளியில் வருவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என்றும் கூறினார்.

Read more...

Monday, November 29, 2010

ஆ.ராசா எம்.பிக்கு தொகுதி மக்களின் உற்சாக வரவேற்பு

ஸ்பெக்ட்ரம் 2 ஜி அலைவரிசையை அமைச்சர் ஆ.ராசா, குறைந்த தொகைக்கு ஒதுக்கீடு செய்ததால் செல்போன் மற்றும் தொலைப்பேசி கட்டணம் மிக கணிசமாக குறைந்தது. இதனால், ஆத்திரமடைந்த சில அதிகார நிறுவன தொழிலதிபர்களின் தூண்டுதலின் பேரில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக கூக்குரலிட்டனர். அந்த ஆவேசப் பழித் தூற்றலுக்கு தகுந்த ஆதாரங்கள் இல்லை என்றாலும், ஜனநாயக நடைமுறைகள் சுமூகமாக நடைபெறுவதற்காக அமைச்சர் பதவியில் இருந்து ஆ.ராசா விலகினார்.


பதவி விலகிய பின் முதல் முறையாக தனது சொந்த தொகுதியான, நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தார். காலை 9.40 மணிக்கு சென்னையில் இருந்து கோவை பீளமேடு விமான நிலையத்திற்கு வந்த ஆ.ராசா எம்.பியை, தமிழக கதர் துறை அமைச்சர் ராமச்சந்திரன், குன்னூர் எம்.எல்.ஏ., சவுந்திரபாண்டியன், கோவை மாநகர தி.மு.க., செயலர் வீரகோபால், முன்னாள் எம்.பி., ராமநாதன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
நீலகிரி மாவட்ட கிராமங்களிலிருந்து 50க்கும் மேற்பட்ட வேன், கார் உள்ளிட்ட வாகனங்களில் வந்திருந்த தி.மு.க., காங்கிரஸ், திராவிடர் கழகம், பெரியார் இளைஞர் நற்பணி மன்றம், ஆதிதமிழர் பேரவை, அவினாசி – அத்திக்கடவு நிலத்தடிநீர் பிடிப்பு திட்டக் கூட்டமைப்பு, விழுதுகள் அமைப்பு, முத்திரையர் சங்கம், தொழிலாளர் முன்னேற்றச் சங்கம், அமைப்புச்சாரா தொழிலாளர் முன்னேற்றச்சங்கம், ஆதிவாசிகள் கூட்டமைப்பு, தோட்டத் தொழிலாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் விமான நிலையத்தில் திரண்டு நின்று வரவேற்பளித்தனர்.

மேலும் கோவையிலிருந்து உதகை வரை ஆங்காங்கே 10க்கும் மேற்பட்ட இடங்களில் கொட்டும் மழையில் மக்கள் திரண்டு வரவேற்பளித்தனர். பின், அவர் ஊட்டி புறப்பட்டு சென்றார்.

Read more...

Friday, November 19, 2010

பதவியை துறந்து விட்டு சென்னை திரும்பிய ஆ.ராசாவுக்கு எழுச்சிமிகு வரவேற்பு

சென்னை, நவ. 18 -

புதுடில்லியில் இருந்து திரும்பிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசாவுக்கு சென்னை விமான நிலையத்தில் மாநில அமைச்சர்கள் மற்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் தலைமையில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது.

நாடாளுமன்ற அலுவல்கள் முடங்கக் கூடாது என்ற நோக்கில் தி.மு.. தலைமை அறிவுறுத்தியதை ஏற்று மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்த .ராசா சென்னை திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் மேளதாளங்கள் முழங்க எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, அமைச்சர்கள் பரிதி இளம்வழுதி, என்.செல்வராஜ், தமிழக அரசின் புதுடில்லி பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன் உள்ளிட்டோரும் ராசாவை வரவேற்றனர்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற தொண்டர்கள் ராசாவுக்கு ஆதரவாகவும், ஜெயலலிதாவை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர்.



Read more...

Monday, November 15, 2010

கலைஞர் விளக்கம்: ஆ.ராசா பதவி விலகல்

தி.மு.. தலைமைக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளரும், பிள்ளை பிராயத்தில் இருந்து தன்மான இயக்கத்தின் வழி பற்றி நடந்து வருபவரும், ந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, அண்ணல் அம்பேத்கர் போன்ற அரசியல் சமுதாய சீர்த்திருத்த தலைவர்கள் காட்டிய வழியில் தொடர்ந்து செல்பவரும், என் உள்ளம் கவர்ந்த தம்பிமார்களில் ஒருவராக விளங்கி வருபவரும்; பழைய திருச்சி மாவட்டம் - பெரம்பலூர்ப் பகுதியில் பட்டிக்காட்டுப் பொட்டலில் பூத்து குலுங்கிவரும் புரட்சியாளருமான அருமைத் தம்பி இராசா அவர்கள் - தன்னை வெற்றி பெற வைத்த தொகுதி மக்களுக்கும், அந்த வாய்ப்பை வழங்கிய தலைமைக் கழகத்திற்கும் என்றேன்றும் நம்பிக்கைக்குரியவராகவும்; ஏற்றுக் கொண்ட பணியில் நேர்மை, நியாயம், கடமையுணர்வு ஆகியவற்றை தொடர்ந்து கடைப்பிடித்து; “தலித்” இனத்தின் தகத்தகாய கதிரவனாகவும் விளங்குபர் என்பதை இந்த நாட்டு மக்கள் அனைவரும் தெளிவாக அறிவார்கள்.


அவரை மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலக்க வேண்டுமென்று திட்டமிட்ட முயற்சி பல நாட்களாக நடைபெற்று; ஜனநாயகக் கூடங்களில் சந்தைக் கடை இரைச்சல் மேலிடவும்; நாட்டு மக்களுடைய பிரச்சினைகளை விவாதித்திடவும், அணுகிடவும் முடியாத அளவிற்கு ஜனநாயக மன்றங்களின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்திடவுமான செயல்கள் தொடர்ந்து ஓராண்டுக் காலமாக நிகழ்த்தப் பெற்று வருகின்றன.

அவர் மீது என்ன பழி சுமத்தப்படுகிறது என்று பார்த்தால்; 1999 முதல் மத்தியில் உள்ள தகவல் தொழில்நுட்பத் துறை 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை எந்த முறையை கையாண்டு அளித்து வந்ததோ. அதே முறையைத்தான் தம்பி இராசா பின்பற்றினார் என்றெல்லாம் அளிக்கப்பட்ட விளக்கங்கள் எதையும் ஏற்றுக் கொள்ளாமல், அவர் இராஜினாமா செய்தே தீர வேண்டும் என்றும் பிடிவாதம் செய்து - நாடாளுமன்ற அவைகளையே நடக்க விடாமல் செய்து வருகிறார்கள். எல்லோராலும் நடத்தப்படுகிற குழப்பம் அல்ல; குழப்பத்தை உருவாக்க பலர் தேவையில்லை; சிலரே போதும்; அந்தச் சிலரால் இன்று இந்தியாவில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் நிர்வாகத்தையும், பாராளுமன்ற நடவடிக்கைகளையும் தடைப்படுத்துவதன் மூலம் முழுவதும் ஸ்தம்பித்துப் போகக் கூடிய சூழலை உருவாக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் பாராளுமன்ற ஜனநாயகத்தை - அதன் மாண்பை, அதன் நடுநிலையைத் தழைத்திடச் செய்யவும், தக்க வைத்திடவுமான பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது. பேரறிஞர் அண்ணா அவர்கள் அந்த ஜனநாயக நெறியிலேயேதான் நம்மையெல்லாம் வளர்த்து ஆளாக்கியிருக்கிறார். அந்த நெறிக்கே விபத்து ஏற்படும்போது, அந்த விபத்திலேயிருந்து இந்திய ஜனநாயகத்தை, குறிப்பாக, பாராளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாக்கும் பொறுப்பு நமக்கிருகிறது.

அதனை நிலைநாட்டிடும் வகையில் பாராளுமன்ற உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் இருக்கின்ற தம்பி ஆ.இராசா அவர்கள்; அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதென்று முடிவெடுத்து அவருக்கும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இன்றிரவே (14.11.2010) தனது அமைச்சர் பதவி விலகல் கடிதத்தை இந்திய பிரதமரிடத்திலே தம்பி இராசா அவர்கள் வழங்கிடுவார் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.


Read more...

Friday, November 12, 2010

தில்லியில் இந்திய மொழிகள் தொழில்நுட்ப பரவல் மையம் தொடங்கியது


இந்திய மொழிகளை மேலும் பல துறைகளில் பயன்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள இந்திய மொழிகள் தொழில்நுட்ப பரவல் மையத்தை தில்லியில் மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசா இன்று (12.11.2010) தொடங்கி வைத்தார்.
==========================================================

புதுதில்லி:

தில்லியில் தேசிய இ நிர்வாகம் ஆலோசனைக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.இராசா, இந்திய மொழிகள் தொழில்நுட்ப பரவல் மையத்தை தொடங்கி வைத்தார்.

www.tdil-dc.in என்ற புதிய இணையதளத்தையும் தொடக்கிவைத்து பேசிய அமைச்சர், இந்திய மொழிகள் தொழில்நுட்ப பரவல் மையம் வாயிலாக மொழிகள் மேம்பாட்டுக்கான வாய்ப்புகள் அதிகமாகும். பொது மக்களுக்கு இது மிகுந்த பயனளிக்கும். பல்வேறு துறைகளில் இந்திய மொழிகளை பயன்படுத்தும் வாய்ப்பும் இந்திய மொழிகள் தொழில்நுட்பம் மேலும் விரிவடையவும் இது உதவிகரமாக இருக்கும் என்று கூறினார்.

இந்த விழாவில் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் சச்சின் பைலட்டும் கலந்து கொண்டு பேசினார்.

Read more...

ஜெயலலிதாவுக்கு தகுதி இல்லை: ஆ.ராசா

தொலைத்தொடர்புத்துறை கொள்கை வழிகாட்டுதல் படியே ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கப்பட்டதால், பதவியை ராஜினாமா செய்ய முடியாது என்று மத்திய அமைச்சர் ஆ.ராசா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேச ஜெயலலிதாவுக்கு தகுதி இல்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக கூறப்படுவது தொடர்பாக அமைச்சர் ஆ.ராசாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ராசா, 2 ஜி ஸ்பெக்ட்ராம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்ட போது 1999-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட புதிய தொலை தொடர்பு கொள்கை வழிகாட்டுதல்களை கடை பிடித்தோம். சட்டத்தின்படி தான் அலைக்கற்றை ஒதுக்கீடு நடந்தது. சட்டத்துக்கு உட்பட்டே இதில் நான் பணியாற்றி உள்ளேன். அதை நாங்கள் நீதிமன்றத்தில் தெரிவிப்போம், நிரூப்பிபோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நான் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை. நான் பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை என்றார்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா என்னை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறி வருகிறார். இப்படி சொல்வதற்கு அவருக்கு எந்த தார்மீக உரிமையும் தகுதியும் கிடையாது. ஏனெனில் அவர் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாற்றுக்கள் உள்ளன. ஜெயலலிதா தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவே இப்படி கூறி வருகிறார். இந்தியாவிலேயே தன் மீதான ஊழல் குற்றச்சாட்டு வழக்கு விசாரணைகளை 10,12 ஆண்டுகளாக இழுத் தடித்து வரும் ஒரே தலைவர் ஜெயலலிதாதான். எனவே என்னை பதவியில் இருந்து நீக்க சொல்லும் அதிகாரம் அவருக்கு இல்லை என்றும் ஆ.ராசா தெரிவித்தார்.

2ஜி ஸ்பெக்ட்ராம் அலைக் கற்றை ஒதுக்கீடு தொடர்பாக மத்திய கணக்குத் தணிக்கைத் துறை தனது அறிக்கையில் என்ன சொல்லியுள்ளது என்று எனக்கு தெரியாது. அந்த அறிக்கை இன்னும் என் கைக்கு வரவில்லை. அந்த அறிக்கையை பார்த்த பிறகு கருத்துக்களை சொல்ல முடியும் என்றும் அவர் கூறினார்.

Read more...

Tuesday, November 02, 2010

கலைஞர் ஆட்சியில்தான் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை: அமைச்சர் ஆ.இராசா பேச்சு

ஊட்டி அண்ணா கலையரங்கில் நடந்த உள்ளாட்சி தின விழாவில் நல திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு மத்திய அமைச்சர் ஆ.இராசா வழங்கினார். மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் உட்பட பலர் கலந்துகொண்டனர்
===================================================================
ஊட்டி:

ஊட்டி அண்ணா கலையரங்கில் உள்ளாட்சி தின விழா மற்றும் நகராட்சி பூங்காக்கள் திறப்பு விழா நடந்தது.

உள்ளாட்சி அமைப்புகள், மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்களுக்கு ரூ.1 கோடியே 12 இலட்சத்து 32 ஆயிரத்து 623 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசிய மத்திய அமைச்சர் ஆ.இராசா, தமிழகம் சிறந்த முதல்வரை பெற்றுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக கடந்த 1989ம் ஆண்டில் தான் சுய உதவிக்குழு தொடங்கப்பட்டது. கலைஞர் ஆட்சியில்தான் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்கப்பட்டது. சுய உதவிக்குழுக்கள் மூலம் பெண்களுக்கு சுழல்நிதி மற்றும் வங்கி கடன் உதவி வழங்கி பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வருகின்றனர் என்று தெரிவித்தார்.

கடந்த 2006ம் ஆண்டு தேர்தலின் போது கலைஞர் தனது வாக்குறுதியில் தெரிவித்ததை விட பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்துவிட்டார். குறிப்பாக கலைஞர் காப்பீடு திட்டம், கலைஞர் வீட்டு வசதி திட்டம், ரூ.1க்கு அரிசி மற்றும் இலவச கலர் டிவி போன்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். கலைஞர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் தகரம் மற்றும் பிளாஸ்டிக் வேய்ந்த குடிசை வீடுகள் கான்கிரிட் வீடுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஊட்டியில் மின் மயானம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து தமிழகத்தின் முன்னோடி மாவட்டமாக திகழ என்றும் உறுதுணையாக இருப்பேன் என்றார்.

விழாவில் விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் தலைமை வகித்து பேசினார். நகராட்சி ஆணையாளர் இராமமூர்த்தி வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் குப்புசாமி, முன்னாள் அரசு கொறடா முபாரக், எம்.எல்.ஏ.க்கள் சவுந்திரபாண்டியன், கோபாலன், துணை தலைவர் ரவிக்குமார், மாவட்ட வேளாண் விற்பனை குழு தலைவர் இளங்கோ, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் முஸ்தபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Read more...

ஈழுவாதியா மக்களுக்கு ஜாதிசான்றுகள் கிடைக்க நடவடிக்கை : அமைச்சர் ஆ.இராசா உறுதி

ஊட்டி:
ஈழுவாதியா மக்களுக்கு ஜாதிசான்றுகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.இராசா தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மலையாள மொழி பேசும் கேரள மக்களின் பல்வேறு சங்கங்களின் சார்பில் ‘கேரளியம் 2010’ விழா ஊட்டி அண்ணா கலையரங்கில் நடந்தது. விழா குழு தலைவர் கிரியன் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் விஜயன் தலைமை வகித்தார். செயலாளர் கோபாலகிருஷ்ணன், முஸ்தபா, நகராட்சி துணை தலைவர் ரவிக்குமார், எம்.எல்.ஏ.,க்கள் சவுந்திரபாண்டியன், கோபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் பேசிய மத்திய அமைச்சர் ஆ.இராசா, நீலகிரி மாவட்டத்தில் சாதி, இனம் வேறுபாடுகள் இன்றி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கலாசாரத்தால் வேறுபட்ட மக்கள் இருந்த போதிலும் உணர்வால் ஒன்றுபட்டு வாழ்கின்றனர். நீலகிரி மாவட்ட மக்களிடையே ஏற்று தாழ்வு இல்லை என்றார்.

நீலகிரி மாவட்டத்தில் வாழும் ஈழுவாதியா இனத்தை சேர்ந்த மக்களுக்கு ஜாதிச்சான்றிதழ் வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளீர்கள். கடந்த 4 மாதங்களுக்கு முன்பே தமிழக முதலமைச்சர் கருணாநிதி, பிற்படுத்தப்பட்டோர் ஆணைய அதிகாரிகளுக்கு சான்றிதழ்கள் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்துள்ளேன். பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் ஈழுவாதியா இனத்தை சேர்ப்பது குறித்து பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தான் முடிவு செய்ய முடியும். ஒரு சாதியை சேர்ந்த மக்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சாதிச்சான்று வழங்க வேண்டும் எனில் கல்வி, பொருளாதாரம் கொண்டே வழங்க முடியும். ஈழுவாதியா மக்களுக்கு சாதிச்சான்று கிடைக்க பாடுபடுவேன். தமிழக முதலமைச்சரும் சாதிச் சான்று வழங்க பரிந்துரை செய்வார். கட்டாயமாக சாதிச்சான்று கிடைக்கும் என்றும் அமைச்சர் ஆ.இராசா தெரிவித்தார்.

விழாவில் கேரள மக்களின் பாரம்பரிய நடனங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடந்தன.

Read more...

Monday, November 01, 2010

உச்ச நீதிமன்ற கருத்து இறுதித் தீர்ப்பு அல்ல: ஆ.இராசா


உதகை:

ஸ்பெக்ட்ரம் 2 ஜி ஒதுக்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அண்மையில் தெரிவித்துள்ள கருத்துகள் இறுதித் தீர்ப்பல்ல என்று மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ. ராசா கூறினார்.

நீலகரி மாவட்ட வளர்ச்சிப் பணிகள் கண்காணிப்பு ஆணையம் சார்பில் உதகையில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சர் ஆ.இராசா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஊழல் நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் மத்தியப் புலனாய்வு அமைப்பின் நடவடிக்கைகளை உச்சநீதி மன்றம் கண்டித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஆ.ராசா, உச்ச நீதிமன்றத்தில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகள் இறுதித் தீர்ப்பு அல்ல என்றார்.

உச்சநீதிமன்ற கருத்து தொடர்பாக தமது வழக்கறிஞர்களுடன் ஆலோசித்த பின்னரே கருத்து கூற முடியும் என்று ஆ.ராசா குறிப்பிட்டார்.

Read more...

Monday, October 11, 2010

ரஷ்யாவில் மத்திய அமைச்சர் ஆ.ராசா...

இந்திய தொலைதொடர்பு மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் .ராசா 5 நாள் சுற்றுப்பயணமாக 10 ஆம் தேதி காலை ரஷ்யாவுக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் அதிகாரிகள் குழுவும் சென்றுள்ளது.


இரு நாடுகளுக்கு இடையே தகவல் தொழில் நுட்ப மேம்பாடு மற்றும் தொழில் நுட்பங்களை பகிர்ந்து கொள்வது குறித்து ரஷிய தொலை தொடர்பு துறை அமைச்சர் இகோர் செகோலேவுடன் அமைச்சர் ஆ.இராசா பேச்சு நடத்தி ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறார்.

இதனைத் தொடர்ந்து, ரஷிய நாட்டின் தகவல் தொழில்நுட்ப கருவிகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளையும் பார்வையிடும் ஆ.ராசா 16-ந்தேதி டெல்லி திரும்புகிறார். அவரது ரஷ்ய பயணம் இந்திய அரசின் தொழில்நுட்பத் துறைக்கு பேருதவியாக அமையும் என அத்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Read more...

Monday, September 27, 2010

ராஜராஜ சோழனை உலக சரித்திரம் அங்கீகரிக்கவில்லை: தஞ்சை விழாவில் ஆ.இராசா பேச்சு

தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் நிறைவு அடைந்ததை கொண்டாட அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவின் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது.


விழாவில் பெரியகோவில் உருவம் பொறித்த சிறப்பு தபால் தலையை முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் மத்திய தொலைத் தொடபு துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ.ராசா வெளியிட்டார். அதை மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் பெற்றுக்கொண்டார்.

பின்னர் உரையாற்றிய அமைச்சர் ஆ.ராசா, சரித்திரம் படைத்த தமிழருக்கு அஞ்சல் தலை வெளியிடும் மரபில் ராஜராஜசோழனை நினைவு கூர்ந்து சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை வழங்கிய தலைவர் கலைஞருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். விழாவில் எனக்கு முன்பு பேசியவர்கள் அனைவரும் மண்னன் ராஜராஜனின் பெருமைகளை பேசி, அவற்றோடு தலைவர் கலைஞரை ஒப்பிட்டார்கள். ராஜராஜன் பல சாதனைகளை படைத்த போதிலும், உலக சரித்திரம் அவரை அங்கீகரிக்கவில்லை என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், கணக்கு பார்க்கும் நாள் அல்லது கணக்கு தீர்க்கும் நாள் என்ற ஒன்று உள்ளதென்று அண்ணாவை படித்தவர்களுக்கும், பெரியாரை படித்தவர்களுக்கும் நன்றாக தெரியும். அதன்படி இன்று கணக்கு தீர்க்கும் நாள். 1956 ஆம் ஆண்டிலே நடந்த அரசியல் மாநாடொன்றில், தலைவர் கலைஞர் தனது 30-ஆவது வயதில் திராவிடத்தின் உலகத் தொடர்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். அதில், தமிழன் சிங்களத்தை வென்றான்; சோழ தேசம் என்று சொல்லவைத்தான். உலக சரித்திரத்தில் நாகரீகம் கொடி கட்டி பறந்திட்ட தமிழர்கள் இன்று அதை இழந்து தவிக்கிறோம். இழந்த பண்பாட்டை , செங்கோலை மீண்டும் பிடிப்போம் என்று ஆவேசத்துடன் பேசியுள்ளார். பின்பு ஆட்சியில் அமர்வோம் என்பதை அறியாத வயதில் அது பற்றி தலைவர் கலைஞர் பேசியுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கவியரங்கம் ஒன்றில், சோழன் அழைக்கிறேன் வா; சோழ நில கவிஞனே வா என்று தலைவர் கலைஞர் குறிப்பிட்டார். ஆவணப்படுத்துதல், பல்கலைகள் அமைத்தல் ஆகியவை ராஜராஜனுக்கு சொந்தம் அவை கலைஞருக்கும் சொந்தம். கணக்கு தீக்கும் நாள் ஒன்று இனி உண்டு என்றும் தெரிவித்தார்.

Read more...

Sunday, September 19, 2010

அனைத்து கிராமங்களிலும் ‘பிராட் பேண்ட்’ வசதி: அமைச்சர் ஆ.ராசா தகவல்

இந்தியாவின் அனைத்து கிராமங்களிலும் இன்னும் இரு ஆண்டுகளில் "பிராட் பேண்ட்" இணைப்பு வழங்கப்பட்டு விடும் என்று மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் அவினாசி அருகே பழங்கரையில் உள்ள ஐ.கே.எப். வளாகத்தில், பி.எஸ்.என்.எல். சார்பில் “வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தினருக்கு இலவச செல்போன் வழங்கும் திட்டம்” தொடக்க விழா 18ஆம் தேதி நடைபெற்றது. இத்திட்டத்தை தொடக்கிவைத்து பயனாளிகளுக்கு இலவச செல்போன்களை வழங்கி பேசிய மத்திய அமைச்சர் ஆ.இராசா,“. நான் 2007ஆம் ஆண்டு தொலைத்தொடர்பு துறை அமைச்சராக பதவியேற்கும் போது 30 கோடியாக இருந்த இணைப்பு, தற்போது 70 கோடியாக அதிகரித்துள்ளது. கிராமங்களில் இருந்த தொலைத்தொடர்பு அடர்த்தி 8லிருந்து 28 சதவீதமாகவும். நாட்டில் ஒட்டு மொத்தமாக 23லிருந்து 59 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது” என்றார்.

அடுத்த இரு ஆண்டுகளில் உள்ளூர் அழைப்புகளுக்கான கட்டணம் வெறும் 10 பைசாவாக குறையும். கடந்த மூன்றாண்டில் பல்வேறு வகையிலும் தொலைத்தொடர்புத் துறை ஒட்டுமொத்த வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் காரணமாக நாட்டிலுள்ள ஆறு இலட்சம் கிராமங்களில் 5.90 இலட்சம் கிராமங்கள் முழுவதும் தரைத் தொடர்பு வழியுடன் இணைத்துள்ள ஒரே நிறுவனம் பி.எஸ்.என்.எல். மட்டுமே ஆகும். சமீபத்தில் காஷ்மீரில் பெய்த அடைமழையின் காரமாக 'லே' என்ற நகரமே அழிவில் சிக்கியது. அப்போது அங்கு பல வகையில் உதவி செய்தது பி.எஸ்.என்.எல். தான் என்பது அப்பகுதி மக்களே கூறுகின்றனர் என்றும் அவர் கூறினார்.

”மத்திய தொலைத்தொடர்பு துறையின் விதிமுறைகளை தளர்த்தியதன் பயனாக தனியார் நிறுவனங்கள் தங்களுடைய லாபத்தில் 5 சதவீதத்தை கிராமப்புற தொலைத்தொடர்பு மேம்பாட்டுக்கு அளிக்க வேண்டும் என்ற விதி அமுல்படுத்தப்பட்டதால், தற்போது 18 ஆயிரத்து 500 கோடி ரூபாய் சேமிப்பாக உள்ளது. இதன் மூலம் அடுத்த இரு ஆண்டுக்குள் நாட்டிலுள்ள அனைத்து கிராமங்களும் கண்ணாடி இழை (ஆப்டிக் பைபர்) மூலம் இணைக்கப்பட்டு “பிராட் பேண்ட்” சேவை வழங்கப்படும். தற்போது அவினாசியில் முன்னோடி, சோதனை திட்டமாக வழங்கப்பட்டுள்ள இலவச மொபைல் போன் திட்டத்தின் தாக்கம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, படிப்படியாக நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்” என்று அமைச்சர் ஆ.இராசா தெரிவித்தார்.

Read more...

Friday, September 17, 2010

ஊட்டியில் தி.மு.க. இளம் சொற்பொழிவாளர்கள் பயிற்சி பட்டறை தொடங்கியது

தி.மு.. இளம் சொற்பொழிவாளர்கள் பயிற்சி பட்டறை ஊட்டியில் உள்ள மோனார்க் ஹோட்டலில் 16-ஆம் தேதி தொடங்கியது. தி.மு. கழகத்தின் மாநில கொள்கைப்பரப்பு செயலாளரும், மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சருமான ஆ.ராசா வரவேற்புரையாற்றினார்.

தொடக்கிவைத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”இந்த பயிற்சி முகாம் திமுகவின் கொள்கைகளை எப்படி மக்களிடத்தில் கொண்டுபோய் மிக எளிதாக சேர்க்க வேண்டும் எனபதே இந்த முகாமின் குறிக்கோள். பெரியாரும் அண்ணாவும் வளர்த்தெடுத்த இந்தக் கழகத்தை எல்லோரும் இணைந்து மென்மேலும் வளர்க்க வேண்டும். திமுகவின் வரலாறுகளையும், கழகத்தினுடைய தியாகங்களையும் மக்களிடத்தில் எடுத்து வைக்க வேண்டும்” என்றார்.

திராவிட இயக்கம், பெண்ணுரிமை, சமூக நீதி திராவிட இயக்க பார்வை ஆகிய தலைப்புகளில் அமைச்சர் பொன்முடி, அமைச்சர் துரைமுருகன், கோவை மு.ராமநாதன், வழக்கறிஞர் அருள்மொழி, பேராசிரியர் நெடுஞ்செழியன், சுப.வீரபாண்டியன் ஆகியோர் உரையாற்றினர்.

Read more...

Sunday, September 12, 2010

(வீடியோ) ஊட்டியில் ரோப் கார் அமைக்க அமைச்சர் ஆ.ராசா ஆய்வு


நீலகிரியில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ரோப் கார் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்திற்கான இடங்களை தேர்வு செய்ய மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசா சனிக்கிழமை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

பின்னர் உதகை படகு இல்லத்தில் அமர்ந்தபடி செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், ரோப் கார் அமைக்க நீலகிரியில் 9 இடங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.




Read more...

Saturday, August 14, 2010

வேதாந்திரி மகரிஷி அஞ்சல் தலை வெளியீட்டு விழாவில் அமைச்சர் ஆ.ராசா பேச்சு

சென்னை, ஜவஹார்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று வேதாத்திரி மகரிஷி நூற்றாண்டு மற்றும் சிறப்பு அஞ்சல்தலை வெளியீட்டு விழா நடைபெற்றது. வேதாத்திரி மகரிஷி உருவம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலையை முதலமைச்சர் கருணாநிதி வெளியிட, மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ.ராசா பெற்றுக்கொண்டார்.


இந்த விழாவில் அமைச்சர் ஆ.இராசா ஆற்றிய சிறப்புரை:

தத்துவஞானி வேதாந்தி மகரிஷி நூற்றாண்டு விழாவின் தலைவர் தமிழர்களின் தனிப்பெரும் தலைவர் கலைஞர் அவர்களே... இந்த விழாவில் முன்னிலை உரையாற்றிய அருள் செல்வர் பொள்ளாச்சி மக்கலிங்கம் அவர்களே... மதிப்பிற்குரிய அண்ணண் டாக்டர் பாலசுப்பிரமணி அவர்களே..., மேடையில் வீட்டிருக்கின்ற சான்றோர் பெருமக்களே...., விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்துள்ள அமைச்சர் பெருமக்களே.... அனைவருக்கும் வணக்கம்.

நாட்டுக்கு தன்னை அர்பணித்து கொண்ட அரசியல் தலைவர்கள், இந்தியாவின் பண்பாட்டு கலாசாரத்தின் அடையாள சின்னங்களாக விளங்கின்ற தொல்நிறுவனங்கள். இவைகளை நினைவூட்டுகின்ற விதமாகவும் பெருமை சேர்க்கின்ற விதமாகவும் தலைவர்களுக்கும் நிறுவனங்களுக்கும் அஞ்சல் தலை வெளியீட்டு விழாக்களை இந்திய அஞ்சல் துறை நடத்தி வருகிறது என்பதை அறிவீர்கள்.

அந்த வகையில் இந்திய தத்துவ மரபு என்ற பொருளில் இந்திய தத்துவத்துக்கும் மரபியலுக்கும் வலுசேர்க்கும் வகையில் பல்வேறு தத்துவங்களை வழங்கி இருக்கின்ற பல்வேறு தலைவர்களுக்கும் கடந்த காலங்களில் அஞ்சல் தலையை இந்திய அஞ்சல் துறை வெளியிட்டு மகிழ்ந்திருக்கிறது. இந்திய சிந்தனை மரபு போக்கில் வேதாந்தம் - சித்தாந்த என்ற இரண்டு பிரிவுகளில் வேதாந்தங்களை ஏற்றுக்கொண்டிருக்கின்ற வேதாந்தங்களாக இருந்தாலும், சாங்கியமாக இருந்தாலும், யோகமாக இருந்தாலும், பவுத்தமாக இருந்தாலும், ஜெயினமாக இருந்தாலும், இவைகளுக்கெல்லாம் மதிப்பளிக்க வேண்டும் என்ற உன்னத கொள்கை இந்திய அஞ்சல்துறைக்கு உண்டு. அந்த கொள்கையோடு, இந்த அஞ்சல் தலையை இந்திய அஞ்சல் துறை வழங்கியிருக்கிறது. இதில் சிறப்பு என்னவென்றால், வேதாந்திரி மகரிசிக்கு அஞ்சல் தலையை வெளியிடுகின்ற வாய்ப்பை பகுத்தறிவு தத்துவத்தின் தலைவர் கலைஞர் பெற்றிருக்கிறார்.

இங்கே பேசிய நிறுவன முன்னணி தலைவர்களெல்லாம் இந்த தத்துவம் கடவுள் கொள்கை சாராதது என்று குறிப்பிட்டு சொன்னார்கள். பெயரள்ளவோ கண்ணுக்குதான் கண்ணாடி. ஆனால், மூக்கு கண்ணாடி என்றாகிவிட்டது என ஒரு கவிஞன் சொன்னதை போல, வேதங்களை சார்ந்திருந்தாலும் சாராவிட்டாலும் பெயரென்னவொ வேதாந்திரி மகரிசி என ஆகிவிட்ட காரணத்தாலும் அது இந்திய பண்பாட்டு கூறுகளில் ஒன்றாக ஆகவேண்டும் என்ற அவசியத்தினாலும் இந்த அஞ்சல் தலை வெளியிடப்படுகிறது.

உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பே ஆலயமாம், தெள்ளத் தெளிந்தார்க்கு ஜீவன் சிவலிங்கம், கல்லபுலனைந்தும் காலா மணி விளக்கே என்ற தத்துவத்தை உலகிற்கே முன்மொழிந்தவர்கள் தமிழர்கள். அந்த தத்துவத்தை சார்ந்து இன்றைக்கு மகரிசிக்கு அஞ்சல் தலையை தலைவர் கலைஞர் வெளியிட்டிருக்கிறார்.

அத்வைதம் பெரிதா துவைதம் பெரிதா? வசிஸ்டா துவைதம் பெரிதா? என்ற ஆராய்ச்சிக்கு நான் போக விரும்பவில்லை. பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்று என்கிறது ஒரு தத்துவம். பரமாத்மாவும் ஜீவாத்மாவும் வெவ்வேறு என்கிறது ஒரு தத்துவம். சில நேரங்களில் பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்றாகவும் சில நேரங்களில் விலகி இருப்பதற்கும் பெயர் இன்னொரு ஒரு தத்துவம். எனவே அந்த தத்துவங்களுக்குள்ளே ஒற்றுமை இல்லாத போது, நான் மனிதர்களின் ஒற்றுமைக்காக கவலைபட்டு கொண்டிருக்கிற ஒருவன், அந்த தத்துவங்களை பற்றி கவலைப்படவில்லை என்று சொன்ன தலைவர்தான் நமது தலைவர் கலைஞர். அவர் இன்றைக்கு மனிதர்கள் புரிந்துகொள்ளவேண்டிய தத்துவத்தின் அடையாளமாக திகழ்ந்த மகரிசி அவர்களுக்கு அஞ்சல் தலையை வெளியிட்டிருக்கிறார்கள்.

அன்புதான் கடவுள் என்று சொன்னாலும், மனிதனுக்கு மனிதன் இடையே காட்டும் இரக்க உணர்வுதான் கடவுள் என்று சொன்னாலும், கள்ளமில்லா உள்ளம் அதுதான் கடவுளின் இல்லம் என்று சொன்னாலும், ஏழையின் சிரிப்பிலே காண்போம் என்று அண்ணா சொன்னாரே அதுதான் கடவுள் என்று சொன்னாலும், அப்படி பட்ட கடவுளோடு எனக்கு சமரசம் உண்டு என்று சொன்னவர் கலைஞர். அவரின் கரங்களால் இந்த அஞ்சல் தலை வெளியிடப்பட்டிருக்கிறது. உலக அமைதிக்கான நிகழ்ச்சி இது.

தொலைதொடர்பு வளர்ந்திருக்கிறது; தகவல் தொழில்நுட்பம் இன்றைக்கு வளர்ந்திருக்கிறது. இந்த வளர்ச்சியில் தொலைவிலுள்ள துருவங்கள் அருகே வந்துவிட்டன. கூப்பிட முடியாத தூரத்தில் இருக்கும் துருவங்கள் இணைந்து விட்டன. ஆனால் அண்டை வீட்டுக்காரன் அந்நியப்பட்டு போய் விட்டான். எனவே அமைதி இல்லை என்று ஒரு புது கவிஞன் சொன்னான். அந்த அமைதி வருவதற்கு இந்த அஞ்சல் தலை வெளியீடு பயன்படும் என்ற நம்பிக்கையில், தலைவர் கலைஞர் அவர்களை வணங்கி விடைபெறுகின்றேன்.

Read more...

Thursday, August 12, 2010

ஸ்பெக்ட்ரம் விவகாரம் : தம்பிதுரைக்கு அமைச்சர் ஆ.ராசா பதில்

மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, 3 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஏல முறையில் ஒதுக்கீடு செய்ததில் 70 ஆயிரம் கோடி வசூலாகி இருக்கிறது எனவும், 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை குறைந்த விலைக்கு அனுமதித்ததன் மூலம் அரசுக்கு 1 லட்சம் கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும் அதிமுக எம்.பி. தம்பிதுரை குற்றம் சாட்டினார்.


தம்பிதுரையின் குற்றச்சாட்டை மறுத்து பேசிய மத்திய தொலை தொடர்புத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஆ.ராசா, ’’பாஜக ஆட்சி நடைபெற்ற கடந்த 1999-ஆம் ஆண்டில் இருந்தே 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு ஏல முறையில் நடைபெறவில்லை. தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில்தான் ஒதுக்கீடு நடைபெற்றது. டிராய் அமைப்பின் சமீபத்திய பரிந்துரையில்கூட ஏல முறையை பரிந்துரைக்கவில்லை. 3 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு ஏல நடைமுறைகள், கடந்த மே மாதம் 19-ஆம் தேதியுடன் முடிவடைந்தது” என்று குறிப்பிட்டார்.

”பொதுத்துறை நிறுவனங்களான பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல். ஆகியவற்றுக்கு அதிக பட்ச ஏலத்தொகைக்கு சமமாக செலுத்தவேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்கூட்டியே ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதன்படி எம்.டி.என்.எல். நிறுவனம் டெல்லி மற்றும் மும்பை 3ஜி சேவையை ஏற்கனவே தொடங்கிவிட்டது. பி.எஸ்.என்.எல். நிறுவனம் 463 நகரங்களில் தனது சேவையை தொடங்கி உள்ளது. ஏலத்தில் எடுத்த நிறுவனங்கள், தங்கள் சேவையை தொடங்கியதும் 3ஜி சேவை கட்டணமும் குறையத்தொடங்கும். இரண்டு அலைவரிசைகளுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு என்னவென்றால், 2 ஜி அலைவரிசை குரல் சேவைக்கும், 3ஜி அலைவரிசை வீடியோ மற்றும் புள்ளிவிவர பரிமாற்ற சேவைக்கும் பயன்படுத்தப்படுகிறது’’ என்றும் அமைச்சர் ஆ.இராசா தெரிவித்தார்.

Read more...

Saturday, August 07, 2010

செல்போன்களில் வரும் தேவையற்ற அழைப்புகளை தடுக்க நடவடிக்கை : அமைச்சர் ஆ.ராசா உத்தரவு

புதுடெல்லி:


செல்போன்களில் வரும் தேவையற்ற அழைப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தொலை தொடர்பு துறை செயலாளருக்கு மத்திய அமைச்சர் ஆ.ராசா உத்தரவிட்டுள்ளார்.

செல்போன்களை வைத்திருப்பவர்கள். முக்கியமான வேலையில் இருக்கும்போது இன்சூரன்ஸ் வேண்டுமா?, கார் வேண்டுமா?, நிலம் வாங்குகிறீர்களா? என யாராவது பேசி தொந்தரவு செய்கின்றனர். இதுபோல, எண்ணற்ற எஸ்.எம்.எஸ். தகவல்களும் வருவது வழக்கம். சதாரண மக்கள் அனைவரும் இதை சகித்துக் கொண்டுள்ளனர். ஆனால், மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கே அத்தகைய அனுபவம் ஏற்பட்டது.

விலைவாசி பிரச்சினையால் பாராளுமன்றம் முடங்கியதால் அது குறித்து எதிர்க்கட்சி தலைவர்களுடன் திங்கள்கிழமையன்று காலையில் விவாதித்துக் கொண்டு இருந்தார். அப்போது, அவருடைய செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசியவர், வீட்டு கடனுதவி வேண்டுமா? என கேட்டார். இதனால், பிரணாப் முகர்ஜி கடுமையாக ஆத்திரம் அடைந்தார். எனினும், `இப்போது முக்கிய கூட்டத்தில் இருக்கிறேன். வேண்டாம்' என தெரிவித்தார். அவருடைய கோபமான தோற்றத்தை பார்த்து மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நிதி அமைச்சரிடமே வீட்டுக் கடன் வேண்டுமா? என கேட்டது போலவே, மத்திய அமைச்சர் அம்பிகா சோனி, பாரதிய .ஜனதா கட்சியின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடு, பிஜு ஜனதா தளம் எம்.பி. கலிகேஷ், காங்கிரஸ் எம்.பி. ரஷீத் ஆல்வி என பல்வேறு கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் எம்.பி.க்களும் பாதிக்கப்பட்டதாக புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து, வேண்டாத தொலைபேசி அழைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு தொலைத் தொடர்பு செயலாளர் பி.ஜே.தாமசுக்கு மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசா கடிதம் அனுப்பினார்.

அதில், ”உற்பத்திப் பொருட்கள் மற்றும் சேவைகள் போன்றவை டெலி மார்க்கெட்டிங் மூலமாக வழங்குவது, தற்போதைய காலகட்டத்தில் அதிகமாக இருக்கிறது. இதன் விளைவாக, தொலைபேசி வாடிக்கையாளர்களுக்கு தொந்தரவும், அசவுகரியமும் ஏற்படுகிறது. ஒவ்வொரு செல்போன் வாடிக்கையாளருக்கும் தேவையற்ற அழைப்புகள் வராமல் இருக்க தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் கண்காணித்து வருகிறது. எனினும், இத்தகைய தேவையற்ற அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ். தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. எனவே, இது தொடர்பாக அவசர கூட்டத்தை கூட்டி, தேவையற்ற அழைப்புகளை உடனடியாக தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்”. - என்று அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

Read more...

Tuesday, August 03, 2010

ஊட்டியில் ரூ.50 கோடியில் தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி பூங்கா: மத்திய அமைச்சர் ஆ.ராசா தகவல்

கோவை:


நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ரூ.50 கோடி செலவில் உலகத்தரம் வாய்ந்த தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி பூங்கா அமைக்கப்படும் என்று மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் .ராசா கூறினார்.

கோவை பீளமேட்டில் ரூ. 380 கோடி மதிப்பில் கட்டப்பட்ட "டைடல் பார்க்' பிரமாண்ட கட்டடத்தை தமிழக முதலமைச்சர் கருணாநிதி திங்கட்கிழமை மாலை திறந்து வைத்தார். இந்த விழாவுக்கு துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்றார். மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசா, மாநில தொழில்நுட்பத் துறை அமைச்சர் பூங்கோதை, தமிழக அரசின் தலைமை செயலாளர் சிறீபதி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

விழாவி்ல் பேசிய மத்திய அமைச்சர் ஆ.இராசா, ”மத்திய தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சராக பணியாற்ற வாய்ப்பு வழங்கியதற்காக முதலில் முதலமைச்சருக்கு நான் நன்றி கூறவே விரும்புகிறேன். கொங்கு மண்டலத்தில் தலைவர் கலைஞரின் ஆட்சி களத்திலும், அரசியல் களத்திலும் பதிவான பதிவுகள் எத்தனையோ இருந்தாலும், இந்த மாவட்டத்திற்கு இந்த தகவல் தொழில்நுட்ப பூங்காவை தந்த முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவில் நான் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக பொறுப்பு ஏற்றபோது, மத்திய அரசின் சார்பில் ஒரு தகவல் தொழில் நுட்ப திட்டம் வடிவமைக்கப்பட்டது. இந்த திட்டத்தை இந்தியாவில் எந்த மாநிலத்தில் நிறைவேற்றலாம் என்றபோது எந்த மாநிலத்தில் அதிகமான தொழில்நுட்ப பூங்காக்கள் உள்ளதோ? அதிலும் எந்த மாவட்டத்தில் அதிக அளவு தகவல் பரிமாற்றம், -கவர்னஸ் இருகிறதோ? அங்கு அமைக்கலாம் என்றபோது, அது தானாகவே தமிழ்நாடு பக்கம் வந்தது. அதிலும் இந்த மாவட்டத்தில் அமைத்து இருப்பது மிகவும் சிறப்பு. மேலும் இந்தியாவில் உள்ள அனைத்து தகவல் தொழில்நுட்பபூங்காக்களையும் இணைத்து இதன்காரணமாக உலகத்தரம் வாய்ந்த ஒரு ஆராய்ச்சி மையத்தை இந்தியாவில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த ஆராய்ச்சி மையம் ரூ.50 கோடி செலவில் ஊட்டியில் அமைக்கப்பட உள்ளது. அந்த மையத்தையும் நீங்கள் தான் திறக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

Read more...

தி.மு.க. ஒரு சமுதாய இயக்கம்: கலைஞர்

திராவிட முன்னேற்ற கழகம் என்பது ஒரு அரசியல் இயக்கம் மாத்திரம் மட்டும் அல்ல. அது ஒரு சமுதாய இயக்கம் என்று கோவையில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் கலைஞர் தெரிவித்தார்.


"டைடல் பார்க்' கை திறந்து வைப்பதற்காக தனி விமானம் மூலம் கோவைக்கு வந்த முதலமைச்சருக்கு விமான நிலையத்தில் இருந்து விழா நடைபெற்ற இடம் வரை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சாலையின் இரு புறங்களிலும் வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. ஏராளமான தொண்டர்கள் மேளம் கொட்டினார்கள்.

பிறகு மாலை 6.00 மணிக்கு கோவை வ.உ.சி., பூங்கா மைதானத்தில் நடந்த தி.மு.க.,வின் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் கலைஞர் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், யாராலும் நம்மை வீழ்த்த முடியாது. நாம் வீழ்த்தப்பட்டாலும் மீண்டும் எழக்கூடிய ஆற்றல் பெற்றவர்கள். திராவிட முன்னேற்ற கழகம் என்பது ஒரு அரசியல் இயக்கம் மாத்திரம் மட்டும் அல்ல. அது ஒரு சமுதாய இயக்கம். திராவிட முன்னேற்ற கழகம் நடத்துவது அரசியல் நிகழ்ச்சிகள் அல்ல. சரித்திர சுவடுகள். வரலாற்று ஏடுகள். அந்த வரலாற்று ஏடுகளிலேதான், கடந்த மாதம் அந்த ஏடு செம்மொழி ஏடாக இங்கே வெளிவந்தது. அந்த ஏடு மீண்டும் அரசியல் ஏடாக, திராவிடத்தை தட்டி எழுப்புகின்ற ஏடாக, இன்றைக்கு உங்களுக்கு படிக்க கொடுக்கப்பட்டு இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

இந்த பொதுக்கூட்டத்தில், துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் ஆ.ராசா, மாநில அமைச்சர் பொன்முடி, தி.மு.க.வில் அண்மையில் இணைந்த முத்துசாமி, சின்னசாமி உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.

முன்னதாக, மாலை 4 மணிக்கு கோவை பீளமேட்டில் நடந்த விழாவில் ரூ. 380 கோடி மதிப்பில் கட்டப்பட்ட "டைடல் பார்க்' பிரமாண்ட கட்டடத்தை தமிழக முதலமைச்சர் கருணாநிதி வைத்தார். இந்த விழாவுக்கு துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்றார். மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசா, மாநில தொழில்நுட்பத் துறை அமைச்சர் பூங்கோதை, தமிழக அரசின் தலைமை செயலாளர் சிறீபதி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

விழாவி்ல் பேசிய முதல்வர் கலைஞர், அரசியல் ஆனாலும், கலைத்துறையானாலும் என்னை வளர்த்தது கோவை என்று குறிப்பிட்டார். மேலும், தமிழகத்தில் அரசு விழாக்கள் எங்கு நடந்தாலும் ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் தமிழில் பேச வேண்டும் என்றும், தமிழ் தெரியாத வடமாநில அதிகாரிகள் தமிழில் பேச பயிற்சி எடுத்து கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

Read more...

Sunday, July 18, 2010

ஏமாறுபவர்கள் பற்றி நாம் கவலைப்பட வேண்டும் : கலைஞர் பேட்டி


சென்னை:

போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரிப்பு விவகாரத்தில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஏமாற்றுபவர்கள் பற்றி நமக்கு கவலையில்லை. ஏமாறுபவர்கள் பற்றித்தான் நாம் கவலைப்படவேண்டும் என்று தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்தார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களில் மாணவர்களுக்கு சேர்க்கை இடம் வழங்கப்பட்டு வருகிறது. சில மாணவர்கள் போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து கலந்தாய்வில் பங்கேற்றது தெரியவந்தது.

இந்நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்துவரும் கலந்தாய்வை தமிழக முதல்வர் கலைஞர் ஞாயிற்றுக்கிழமை காலை பார்வையிட்டார். கலந்தாய்வு நடைபெறும் அரங்கம் முழுவதையும் சுற்றிப்பார்த்து விட்டு, துணைவேந்தர் மன்னர் ஜவகரிடம் கலந்தாய்வு பற்றி கேட்டறிந்தார்.

பின்னர் கலைஞர் செய்தியாளர்களுக்கு அளித்த நேர்காணலில், ”பொறியியல் படிப்பில் தமிழ்வழிக் கல்வியில் இதுவரை 149 பேர் சேர்ந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் உயரும். குடும்பத்தில் தாத்தா, பாட்டி, தாய், தந்தை, அக்கா, அண்ணன் உள்பட யாரும் படிக்காமல் முதல் தலைமுறையாக படிக்க வரும் மாணவருக்கு இலவச கல்வி உள்பட பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. முதல் தலைமுறை மாணவர்கள் இதுவரை 76 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், 13,437 பேர் கல்லூரிகளை தேர்வு செய்துள்ளனர். போலி மதிப்பெண் சான்றிதழ் விவகாரத்தில் உயர்கல்வி அமைச்சர், துணைவேந்தர் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். கல்வி வளாகங்களில் சுற்றித்திரியும் தரகர்களை விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஏமாற்றுபவர்கள் பற்றி நமக்கு கவலையில்லை. ஏமாறுபவர்கள் பற்றித்தான் நாம் கவலைப்படவேண்டும். எனவே, மோசடி பேர்வழிகளிடம் ஏமாறாமல் இருக்கவேண்டும். போலி மதிப்பெண் பட்டியல் மோசடியில் மாணவர்கள், தரகர்கள் உள்பட யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

இந்த ஆய்வின்போது, மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ஆ.இராசா, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழக உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு, மாநில உயர்கல்வித்துறை செயலாளர் கணேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Read more...

  ©Template by Dicas Blogger.

TOPO