#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Monday, December 20, 2010

முன் ஜாமீன் வாங்க மாட்டேன்: ஆ.ராசா பேட்டி

சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர தயாராக இருப்பதாகவும், ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக முன் ஜாமீன் பெறப்போவதில்லை என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் .ராசா கூறியுள்ளார்.


2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பாக மத்திய அரசில் தகவல்தொடர்பு மற்றும் தொழில்நுட்பக் துறையின் அமைச்சராக இருந்த ஆ.ராசாவுக்கு சிபிஐ விசாரணை நடத்தவுள்ளது. இந்நிலையில், உடல் நலக்குறை காரணமாக உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்த ஆ.ராசா மருத்துவ பரிசோதனைக்கு பிறகு வீடு திரும்பினார்.

அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த ஆ.ராசா, 2 ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையை கண்டு ஓடி ஒளியப்போவதில்லை என்றும், சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர தயாராக இருக்கிறேன் என்றும் தெரிவித்தார்.

சட்டம் பயின்றுள்ள நான் எந்தவொரு சட்ட விதிமுறைகளையும் புறக்கணிக்க மாட்டேன் என்றும், நான் எந்த குற்றமும் செய்யவில்லை என்பதால் முன் ஜாமீன் எதுவும் கோரப்போவதில்லை என்றும் கூறினார்.

செய்தியாளர்கள் வீணாக குழப்பிக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட ஆ.ராசா, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நான் பயப்படுவதாக சில ஊடகங்கள் மக்கள் மத்தியில் செய்தி வெளியிட்டு வருவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று தெரிவித்தார்.
==================================================

சி.பி.ஐ. முன் ஆ.ராசா விளக்கமளிப்பார்: கலைஞர்
...............................................................................................................

சென்னையில் செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்த தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான கலைஞர், காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி பலமாக உள்ளது என்றும், இந்தக் கூட்டணியை யாரும் கலைக்க நினைத்தாலும் முடியாது என்றும் கூறினார். முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு சி.பி.ஐ. நோட்டீஸ் அனுப்பியதாக கூறுவது வழக்கமானதுதான் என்றும், சி.பி.ஐ. முன் ஆ.ராசா விளக்கமளிப்பார் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

Read more...

Monday, December 13, 2010

ஆ.ராசா மீது ஆக்‌ஷன்?!: கலைஞர் சிறப்பு பேட்டி

தி.மு.க.வுக்கு சவாலாகவும், நெருக்கடியாகவும் உள்ள ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை கலைஞர் எப்படி சமாளிக்கப் போகிறார் என்று தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவே எதிர்பார்க்கிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், அவருடைய மனநிலையை படம் பிடிக்கும் வகையில் எடுக்கப்பட்ட பேட்டி இது.....


கேள்வி
: ஜெயின் கமிஷன் அறிக்கை வெளியானபோது, அகில இந்திய அளவில் தி.மு.க.வை தனிமைப்படுத்தும் முயற்சிகள் நடந்தன. அப்போது அதை வெற்றிகரமாக எதிர்கொண்டீர்கள். அரசியல் ராஜதந்திரி எனப்படும் நீங்கள் இந்த ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எத்தகைய நிலை எடுக்கவிருக்கிறீர்கள்?

கலைஞர்:

ஜெயின் கமிஷன் அறிக்கை மட்டுமல்ல, தி.மு.கழகத்தைத் தனிமைப்படுத்த எத்தனையோ சூழ்ச்சிகள் யார் யாராலோ நடத்தப்பட்டு, ஒவ்வொன்றில் இருந்தும் தி.மு.கழகம் எவ்வாறு வெற்றிகரமாக தலைநிமிர்ந்து நின்றதோ, அதைப் போலவே இந்தப் பிரச்சனையிலும் தி.மு.கழகம் தலைநிமிர்ந்து நிற்கும்.

ஸ்பெக்ட்ரம் பிரச்சனையைப் பொறுத்தவரை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படும் இழப்பு என்பது யூகத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட கருத்தியலான இழப்பாகும். இந்த இழப்பினை கணக்கிடப்பட்ட முறையே விவாதத்திற்குரியது. இதைத் தான் நான் ஒரு விழாவில் பேசும்போது, அந்தக் காலத்தில் பேசாப் படம் ஓடிக்கொண்டிருக்கும்போது திரையில் நடப்பதை வர்ணிக்கும் ஒருவர் அதோ பார் பகாசூரன் வருகிறான். அவனுக்கு பல்லுக்கு பல் இரு காதம், பல்லிடுக்கு முக்காதம் என்றேல்லாம் சொல்வான். ஐந்து காதம் என்றால் ஐம்பது மைல். அந்த அளவுக்கு ஒருவன் இருக்க முடியுமா என்றெல்லாம் யாரும் எண்ணிப் பார்ப்பதில்லை என்றெல்லாம் பேசினேன்.

தற்போது கிடைக்கின்ற வருவாயைப் போல இந்த முயற்சியை பத்தாண்டுகளுக்கு முன்பு மேற்கொண்டிருந்தால் இதே அளவிற்கு கிடைத்திருக்கும் என்று கற்பனையில் ஒரு தொகையை தாங்களே நிர்ணயித்துக் கொண்டு, அந்தத் தொகை இழப்பாகி விட்டது, அந்தத் தொகை யாருக்கோ போய்விட்டது, அந்தத் தொகை அளவுக்கு ஊழல் நடந்துவிட்டது என்றெல்லாம்தான் அனுமானித்து ஏடுகளும், ஊடகங்களும் அதனை பெரிதுப்படுத்தி பூதாகரமாக்குகின்றன. உண்மை ஒருநாள் வெளிவரும்போது உண்மையான இழப்பு எவ்வளவு, அந்த இழப்புக்கு காரணம் யார் அல்லது எது என்பது வெளிவரத் தான் போகிறது.

கேள்வி: மத்திய அரசுக்கு தி.மு.க. ஆதரவளித்து அதில் பங்கேற்றுள்ள நிலையில் சில நாட்கள் முன்புவரை மத்திய அமைச்சராக இருந்தவரின் வீடு, அலுவலகம், உறவினர்களுக்கு சொந்தமான இடங்கள் என பல இடங்களிலும் சி.பி.ஐ. ரெய்டு நடந்திருப்பது ஏன் என்று பொதுமக்களிடம் கேள்வி எழுந்துள்ளதே?
கலைஞர்:
சி.பி.ஐ. ரெய்டுகளுக்கும் மத்திய அரசுக்கும் அல்லது காங்கிரஸ் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. உச்சநீதிமன்றத்தால் இந்தப் பிரச்சனையில் புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.க்கு வழங்கப்பட்ட அறிவுரைகளின் அடிப்படையிலும் ஆணைகளின் அடிப்படையிலும்தான் இந்தச் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். சி.பி.ஐ. ரெய்டு நடத்தியதாலேயே ஒருவரை குற்றவாளி என்று கருதிட முடியாது.

கேள்வி: 60 ஆயிரம் கோடி இழப்பு என்று தொடங்கிய எதிர்க்கட்சிகள் தற்போது 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி என்கிற அளவுக்கு கணக்கை உயர்த்தியுள்ளன. மத்திய தணிக்கைத் துறையின் அறிக்கையும் இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. உலகிலேயே இந்தளவுக்கு எங்குமே முறைகேடு நடந்ததில்லை என தி.மு.க. மீதும் அதன் சார்பில் அமைச்சராக இருந்த ஆ.ராசா மீதும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு கட்சியின் தலைவர் என்ற முறையில் உங்கள் பதில் என்ன?

கலைஞர்:

1 இலட்சத்து 80 ஆயிரம் கோடி என்பதெல்லாம் பூதாகரமாக பெரிதுபடுத்தப்படுகிற புள்ளி விவரம்தான். கடந்த ஆண்டுகளில் - கடந்த கால அமைச்சர்கள் கையாண்ட அதே நடைமுறையை அந்தத் துறையின் பின்பற்றியிருப்பதாகத்தான் அந்தத் துறையின் அமைச்சராக இருந்த ராசா திரும்பத் திரும்ப சொல்கிறார். அதனால்தான் கடந்த காலத்தில் என்ன நடைமுறை பின்பற்றப்பட்டது என்பதை அறிய உச்சநீதிமன்றம், கடந்த பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் இருந்தே சி.பி.ஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கின்றது. அத்தகைய விசாரணை நடைபெற்றால் உண்மை வெளிச்சத்துக்கு வந்துவிடும்.

கேள்வி: மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ஆ.ராசா மீது கட்சியும் நடவடிக்கை எடுக்கப் போகிறது என்று வெளியாகும் செய்திகள்...?

கலைஞர்:

இந்தக் கேள்விக்கு விளக்கமாக நான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியிலே பதில் கூறியிருக்கிறேன். ராசா குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், அதற்கு பிறகு கட்சி தயவு தாட்சண்யம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கும். அதுவரையில், நான் எதுவும் சொல்வதற்கில்லை. ராசா எந்தத் தவறும் செய்யவில்லை என்று தி.மு.க நம்புகிறது. அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கபடுகிற வரையில் நாங்கள் ராசாவை கைவிட தயாராக இல்லை என்று நான் கூறி, அது ஏடுகளில் வெளிவந்துள்ளது. ஆனால் குற்றவாளி என்று நிரூபிக்கபடாத நிலையிலேயே அவரை கட்சியிலிருந்து ஓரம் கட்டிவிட மாட்டார்களா என்று ஒருசிலர் நினைப்பதையும் நான் அறிவேன்.

கேள்வி: தேசியக் கட்சிகள் - மாநிலக் கட்சிகள் என அனைத்துத் தரப்பிலும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை தீவிரமாக கையில் எடுத்திருப்பதால், தமிழக சட்டமன்ற தேர்தலில் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறதே?

கலைஞர்:

சட்டமன்ற தேர்தலில் ஸ்பெக்டரம் பிரச்சனை தாக்கத்தை ஏற்படுத்தாதா, ஏற்படுத்த வேண்டும் என்று எதிர்கட்சிகள் ஆசைப்படுகின்றன. தமிழ்நாட்டில் கழக ஆட்சி தொடர்ந்து நிறைவேற்றி வரும் பல்வேறு நலத் திட்டங்களாலும், ஏழையெளியோர், நலிந்த பிரிவினர்க்கு செய்யப்படும் சலுகைகளாலும் கழக அரசுக்கு மக்களிடம் பேராதரவு இருப்பதை கண்டு, இதை எப்படி கெடுக்கலாம் என்று யோசித்து கொண்டிருந்த எதிர்கட்சியினர் ஸ்பெக்ட்ரம் பிரச்சனையைப் பயன்படுத்தியாவது ஏதாவது நடக்காதா என்று எண்ணுகிறார்கள். ஆனால் அவர்களின் எண்ணம் நிறைவேறாது.

உதாரணம் வேண்டுமென்றால், ஒரு சில மாதங்களுக்கு முன்பு அதாவது ஜூலையில் பிகார் மாநில முதலமைச்சர் மீது 1500 கோடி ரூபாய் ஊழல் புகார் சொல்லி சட்டசபையையே நடக்க விடாமல் ஸ்தம்பிக்க செய்த பிறகும் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மக்கள் எந்த அளவிற்கு அவருக்கு வாக்குகளை வழங்கினார்கள் என்பதை எண்ணிப் பார்த்தால், ஸ்பெக்ட்ரம் பிரச்சனை சட்டமன்ற தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.

கேள்வி:
மீண்டும் ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு தி.மு.க. அரசின் திட்டங்கள், தமிழகத்தின் பெரும்பான்மையான மக்களை அடைந்துள்ளதா? மக்களிடம் இத்திட்டங்களுக்கு கிடைத்துள்ள ஆதரவு, வரும் தேர்தலில் தி.மு.க.வை பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் அமர்த்தும் என நம்புகிறீர்களா?

கலைஞர்:

விலையை குறைக்க ஒரு அரசினால் என்னென்ன முயற்சிகள் எடுக்க முடியுமோ அத்தனையையும் தி.மு.கழக அரசு எடுத்து வருவதை நாட்டு மக்கள் நன்றாகவே அறிவார்கள். அலுவலர்களுக்கு, தொழிலாளர்களுக்கு விலைவாசி உயர்வை சமாளிப்பதற்காக ஊதிய உயர்வையும் சலுகைகளையும் அவ்வப்போது அளித்தும் வருகின்றோம். எனவே, தேர்தலில் எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடாது.

மக்களுக்கு தொடர்ந்து நன்மை செய்யும் நல்லாட்சி - மக்களின் நல்வாழ்வுக்காகவும், மேம்பாட்டுக்காகவும் திட்டங்களை தீட்டி செயல்படுத்தும் ஆட்சி - கழக ஆட்சி என்பதை தமிழ்நாட்டு அனைத்துத் தரப்பு மக்களும் நன்றாகவே அறிந்துள்ளார்கள், புரிந்துள்ளார்கள். எனவே, நல்லாட்சி மேலும் தொடர வேண்டுமென்ற நல்லெண்ணத்தோடு வரும் தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியை பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் அமர்த்துவார்கள் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
===============================================
(நன்றி: நக்கீரன் - டிசம்பர் 2010)
===============================================

Read more...

Monday, November 29, 2010

ஆ.ராசா எம்.பிக்கு தொகுதி மக்களின் உற்சாக வரவேற்பு

ஸ்பெக்ட்ரம் 2 ஜி அலைவரிசையை அமைச்சர் ஆ.ராசா, குறைந்த தொகைக்கு ஒதுக்கீடு செய்ததால் செல்போன் மற்றும் தொலைப்பேசி கட்டணம் மிக கணிசமாக குறைந்தது. இதனால், ஆத்திரமடைந்த சில அதிகார நிறுவன தொழிலதிபர்களின் தூண்டுதலின் பேரில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக கூக்குரலிட்டனர். அந்த ஆவேசப் பழித் தூற்றலுக்கு தகுந்த ஆதாரங்கள் இல்லை என்றாலும், ஜனநாயக நடைமுறைகள் சுமூகமாக நடைபெறுவதற்காக அமைச்சர் பதவியில் இருந்து ஆ.ராசா விலகினார்.


பதவி விலகிய பின் முதல் முறையாக தனது சொந்த தொகுதியான, நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தார். காலை 9.40 மணிக்கு சென்னையில் இருந்து கோவை பீளமேடு விமான நிலையத்திற்கு வந்த ஆ.ராசா எம்.பியை, தமிழக கதர் துறை அமைச்சர் ராமச்சந்திரன், குன்னூர் எம்.எல்.ஏ., சவுந்திரபாண்டியன், கோவை மாநகர தி.மு.க., செயலர் வீரகோபால், முன்னாள் எம்.பி., ராமநாதன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
நீலகிரி மாவட்ட கிராமங்களிலிருந்து 50க்கும் மேற்பட்ட வேன், கார் உள்ளிட்ட வாகனங்களில் வந்திருந்த தி.மு.க., காங்கிரஸ், திராவிடர் கழகம், பெரியார் இளைஞர் நற்பணி மன்றம், ஆதிதமிழர் பேரவை, அவினாசி – அத்திக்கடவு நிலத்தடிநீர் பிடிப்பு திட்டக் கூட்டமைப்பு, விழுதுகள் அமைப்பு, முத்திரையர் சங்கம், தொழிலாளர் முன்னேற்றச் சங்கம், அமைப்புச்சாரா தொழிலாளர் முன்னேற்றச்சங்கம், ஆதிவாசிகள் கூட்டமைப்பு, தோட்டத் தொழிலாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் விமான நிலையத்தில் திரண்டு நின்று வரவேற்பளித்தனர்.

மேலும் கோவையிலிருந்து உதகை வரை ஆங்காங்கே 10க்கும் மேற்பட்ட இடங்களில் கொட்டும் மழையில் மக்கள் திரண்டு வரவேற்பளித்தனர். பின், அவர் ஊட்டி புறப்பட்டு சென்றார்.

Read more...

Wednesday, November 24, 2010

நீலகிரி நாடாளுமன்ற தொகுதி மக்களின் மனம் விரும்பிய சேவகன் ஆ.இராசா!

மலை மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களாக மக்கள் தங்களுடைய மனவருத்தத்தைப் பதிவு செய்துள்ளனர். கொட்டும் மழையில் குடை பிடித்து ஆர்ப்பாட்டம், பேரணி. எங்கும் ஒருவிதமான அமைதி. இன்னும் சொன்னால் மலை மாவட்டத்தின் பொலிவில் ஓர் தொய்வு ஏற்பட்டாற்போல ஒரு நிசப்தம். ஆம். ஒரு வருட காலத்தில் தோன்றிய ஒளியாக எதிரிகள் கூட மெச்சும் அளவிற்கு நீலகிரி நாடாளுமன்ற தொகுதியின் மனம் விரும்பிய மக்கள் சேவகனாக பணியாற்றிய தலித் இன தகைமையாளன், தனது தொகுதி மக்கள் இயற்கைப் பேரிடரால் இன்னல் படுவது கண்டு இரவோடு இரவாக ஓடி வந்து குறை தீர்த்த அந்த குணக்குன்று. இன்று இனமானத்தின் பேரால் சாதிய பகையால் இன வெறியின் பலிகடாவாக வடநாட்டு வாலாக்களால் மாற்றப்பட்டு விட்டது.


ஜனநாயக படுகொலை செய்யும் முகந்திரமாக கொடநாட்டு கோமளவல்லியின் மயக்க வார்த்தைகளால் மதி மயங்கிய ஆதிக்க சக்திகளின் செயலால் எங்கள் வீட்டுப் பிள்ளை ராசாவின் அமைச்சர் பதவியை பறித்திடலாம். ஆனால் மலை மாவட்ட மக்களின் இதயத்தில் இருந்து என்றைக்கும் ராசாவைப் பிரித்திட எந்த கொம்பனாலும் முடியாது என்று உறுதியோடு கலைஞர், தளபதி எனும் போர்படையில் ஒரு தளகர்த்தராக விளங்கிய ராசாவின் மாண்புமிகு பறி போயிருக்கலாம். ஆனால் அவருடைய மானமிகுவைப் பிரிக்க எந்த ஆதிக்க சக்தியாலும் பார்ப்பன வெறியர்களாலும் முடியாது என்ற கோஷங்களும் விண்ணைப் பிளக்கின்றன.

ராசா அவர்கள் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினராகி 20 மாதங்கள் கடந்து விட்டது. இந்த 20 மாதத்தில் மாதம் ஒரு முறை தனது தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து அவர் சென்று வராத வீதிகள் இல்லை. தெருக்கள் இல்லை என்கிற அளவுக்கு ஒரு சாமானிய தொண்டனாக, உதகை வந்தால் யார் எந்த நேரத்தில் போய் பேசினாலும் அதுகுறித்து விவாதிக்கும் தோழனாக, இன்னும் தன் கட்சியினர் வந்து குறை சொன்னால் உடனடியாக உதவும் எண்ணம். எதிர்க் கட்சியினரை கூட அன்போடு பேசி அரவணைத்து பணியாற்றும் திறன். அரசாங்க விதிமுறை பிரச்சினைப் பற்றி பேசுகின்ற அதிகாரிகளிடம் பெருந்தன்மையுடன் பேசி ஆலோசனை வழங்கி அவர்கள் பணியாற்றிடும் ஊக்கம் பெற்று உத்வேகத்துடன் செயல்படுவதால் மலை மாவட்டம் மகத்தான வளர்ச்சி கண்ட மாவட்டமாக மாறிடும் சூழலில் ராசாவும், ராமச்சந்திரனும் சேர்ந்து மலை மாவட்டத்தில் அ.தி.மு.க.வை அடியோடு சாய்க்கின்றனர் என்ற அ.தி.மு.க.வினர் செய்த சூழ்ச்சி என்ன தெரியுமா? சென்னையில் இருந்த கோமள வல்லிக்கு கொடுத்த தகவல் அடுத்த முறை ராசா கோத்தகிரிக்கு வருகிறார், கொடநாட்டில் உள்ள காமராஜ் நகர், அண்ணா நகர் மக்களை பார்க்கப் போகிறார் என்றதும் கொடநாட்டு பார்ப்பனத்திக்கு உடம்பெல்லாம் எரிச்சலாக உடன்பிறவா சகோதரி துணையுடன் கொடநாடுக்கு பறந்து வந்துள்ளார். வந்த இடத்தில் கொங்கு மண்டலத்தை சேர்ந்த அ.தி.மு.க. வினர் துண்டு பிரசுரங்களை கோமளவல்லியின் முகத்தில் விட்டெறிந்து ஓடிய போது வெறுத்துப் போய் மாளிகைக்குள் முடங்கி விட்டவர். மூன்றாம் நாள் கிடா வெட்டி விருந்து போடத் தான் வெளியில் வந்தாராம். இவர் தான் ஒரு கட்சியின் தலைவியாக உள்ளார்.

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் ராசா அவர்கள் மேற் கொண்ட குறை கேட்பு நிகழ்ச்சிகள், தலைவர் கலைஞரின் சீரிய திட்டங்கள் மேற் பார்வை செய்தல் ஆகிய நிகழ்ச்சியில் ஒரு பத்திரிகையாளன் என்ற வகையில் ராசாவோடு சென்ற இடங்களில் எல்லாம் ராசா மீது இந்த மலை மாவட்ட மக்கள் அளப்பரிய அன்பு, கூடுகின்ற கூட்டமெல்லாம் அவரைப் பார்த்து பேசி விட்டு செல்லும் போது முகத்திலே ஒரு பொலிவு. பொது நிகழ்வுகள் மட்டுமின்றி தங்கள் குடும்பத்தில் ஒருவரிடம் பேசுவது போல, அவரும் நலம் விசாரிப்பதும் இது கலைஞரின் தம்பிகளுக்கே உரிய அன்பாகவே கருதப்படுகிறது.

இங்கே வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக எத்தனையோ பேர் இருந்துள்ளனர். தான் பாரத தேசத்தின் அமைச்சராக இருந்தாலும் தன் மக்கள், தனது தொகுதி என ஒரு சாமானிய தொண்டனாக, தோழனாக பழகிய ராசாவை பழி வாங்கப்படுவதை நீலகிரி மக்கள் ஒருபோதும் விரும்பிட மாட்டார்கள். நீலகிரி மக்கள் அமைதியானவர்கள். அதனால் தான் சாத்வீக அடிப்படையில் இது வரை அமைதிப் போராட்டங்கள் நடத்தினார்கள். மலை மாவட்டத்தில் உள்ள பார்ப்பன நாளேடுகளின் செய்தியாளர்கள் கூட ராசாவின் மீது ஏவப்பட்டுள்ள ஆரிய இன வெறியின் அஸ்திரத்தைக் கண்டு வேதனைப்படுமளவிற்கு அன்பு காட்டும் ராசா அடித்தட்டு மக்களின் உணர்வுபூர்வமான ஒரு மக்கள் சேவகனுக்கு மந்திரி பதவியை இனத்து வேஷம் காட்டி பறிக்கலாம். ஆனால் மலை மாவட்ட மக்களின் இதயத்தில் இருந்து, இரண்டறக் கலந்து விட்டு எங்கள் இல்லத்தின் பிள்ளை ராசாவை எந்த கொம்பனாலும், கோமளவல்லியாலும் பிரித்திட முடியாது.
====================================================
- உணர்வுகளை எழுதியவர்: ம.வெங்கடேஷ், நீலகிரி மாவட்டம்.
====================================================

Read more...

Sunday, November 21, 2010

அலைவரிசை ஒதுக்கீட்டில் இராசா தவறு செய்யவில்லை :‘டிராய்’ தலைவர் பேட்டி!


மத்திய அமைச்சர் ஆ.ராசாவை எப்படியேனும் பதவியிலிருந்து விலக்கிவிட வேண்டும் என்ற கெட்ட எண்ணத்துடன் பத்திரிகைகளும், ஊடகங்களும் எத்தகைய விஷமப் பிரச்சாரங்களிலும், புளுகுப் பிரச்சாரங்களிலும் ஈடுபட்டு வருகின்றன என்பதற்கு, இப்போது மேலும் ஒரு சான்று கிடைத்திருக்கிறது.

மத்திய தொலைத் தொடர்புத் துறையில் செயலாளராக இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான மாத்தூர் என்பவரை தேடிப்பிடித்து தங்களது விஷமப் பிரச்சாரத்திற்கு முட்டுக் கொடுக்க முனைந்திருக்கிறார்கள் அவர்கள்.

அவர்களுக்குப் பேட்டியளித்த அந்த மாத்தூர் எவ்வளவு பெரிய பொய்யானவர் என்பதும், எத்தகைய யோக்கிய சிகாமணி என்பதும், அவரது பேட்டியின்மூலமே நிரூபணமாகி இருக்கிறது.

ஜெயலலிதா உள்ளிட்ட ராசாவின் எதிரிகள் என்னென்ன பொய்க் குற்றச்சாட்டுகளை ராசாவுக்கு எதிராகக் கூறுகிறார்களோ, அவைகள் எல்லாம் உண்மைதான் என்று சித்தரிக்க முயன்றிருக்கிறார் மாத்தூர். அவர் தமது பேட்டியில்,
- ‘2 ஜி’ அலைக்கற்றை வரிசை ஒதுக்கீடு பற்றி நான் சொன்ன ஆலோசனைகளைப் புறக்கணித்துவிட்டார் அமைச்சர் ராசா. - ‘2 ஜி’ ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கியது தொடர்பான கோப்புகளில் நான் கையெழுத்திட வில்லை.
- எனது ஒப்புதலையும் ராசா பெறவில்லை.
- ஏலம் விடுவதன்மூலம் ‘2ஜி’ ஸ்பெக்ட்ரம் அலைவரிசைகளை ஒதுக்கீடு செய்யலாம் என்ற - எனது கருத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை ன்று குறிப்பிட்டிருக்கிறார். இதனை உடனடியாக மத்திய தொலைத் தொடர்புத்துறை திட்டவட்டமாக உரிய ஆவணங்களுடன் மறுத்து இருக்கிறது.
அதுமட்டுமின்றி -

- ‘2ஜி’ ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு உத்தரவில் மாத்தூர் கையெழுத்திட்டிருக்கிறார். அதனை நிருபிக்கும் ஆவணங்கள் இதோ என்று மாத்தூரின் கையெழுத்திட்ட ஆவணங்களையும் பத்திரிகைகாரர்களுக்கும், ஊடகங்களுக்கும் அளித்திருக்கிறது. அவரது பரிந்துரையின் அடிப்படையிலேயே ஸ்பெக்ட்ரம் ‘2ஜி’ அலைவரிசை ஒதுக்கப்பட்டிருக்கிறது.
- முன்னதாக ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஒதுக்கீடு செய்தது எப்படி என்பதற்காக, நடத்தப்பட்ட எல்லா ஆலோசனைக் கூட்டங்களிலும் மாத்தூர் கலந்து கொண்டார். கடைசியாக நடந்த கூட்டத்தில் அவர்தான் ஏற்கனவே ஸ்பெக்ட்ரம் அலைவரிசை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யலாம் என்ற பரிந்துரைகளையும் செய்தார்.

- 2008ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டது என்று அவர் இப்போது கூறுகிறார். அது முழுக்க முழுக்க தவறு.

- 2010 ஆம் ஆண்டு ‘3 ஜி’ ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஒதுக்கீட்டுக்குத்தான் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. மாத்தூர் உண்மைக்கு மாறான தகவலை வெளியிட்டிருக்கிறார் என்று தொலை தொடர்புத்துறை மறுப்பு தெரிவித்ததன் மூலம் மாத்தூர் முகத்திரையையும், அவரை அவ்வாறெல்லாம் புளுகத் தூண்டியவர்களின் முகத்திரை களையும் கிழித்துவிட்டது.
இதிலே இன்னொரு விஷயம் கூர்ந்து கவனிக்கத்தக்கது. தங்களது கற்பனை எந்தத் தொலைவிற்குப் போகிறதோ அந்த அளவிற்கெல் லாம் ரூபாய் 20 ஆயிரம் கோடியில் ஆரம்பித்து 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி வரை "ஊழலின்" தொகையை உயர்த்திக் கொண்டே போன ராசாவின் எதிரிகள் மூக்கை அறுப்பதுபோல இன்னொரு செய்தியும் வந்திருக்கிறது.

இந்தப் பிரச்சினையை எதிரிகள் முதன் முதலாக எழுப்பிய அந்த வினாடியில் இருந்து ஆ.ராசா ஒரு விஷயத்தை திருப்பித் திருப்பி சொல்லிக் கொண்டே இருக்கிறார். அது என்ன?
"ஸ்பெக்ட்ரம் அலை வரிசைகள் ஒதுக்கீடு செய்தது பற்றிய அதிகாரம் அமைச்சராகிய எனக்குக் கிடையாது. நானாக - எனது விருப்பத்திற்கேற்ப அலைவரிசையை ஒதுக்கீடு செய்து தீர்மானித்து விட முடியாது."
அந்த அதிகாரம் முழுக்க முழுக்க ‘டிராய்’ என்ற அமைப்பின் கையிலேயே உள்ளது. அதுதான் ஏலம்விடும் முறை யையும் விலை நிர்ணயம் உண்டா? இல்லையா? என்பதையும் தீர்மானிக்கும் சக்தி படைத்தது.

அலைவரிசை ஒதுக்கீட்டில் ‘டிராய்’ அமைப்பின் தீர்மானமே இறுதியானது. அது என்ன சொல்கிறதோ அதன்படிதான் தொலை தொடர்புத் துறை அமைச்சர்கள் அலைவரிசை ஒதுக்கீட்டை அமல்படுத்த முடியும். ஆக, முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற இந்த முறை 1999 ஆம் ஆண்டு முதல் டிராயின் வழிகாட்டுதலின்படி பிரமோத்மகாஜன், அருண்ஷோரி, தயாநிதிமாறன் போன்று எனக்கு முன்னரே அமைச்சர்களாக இருந்தவர்கள் அனைவராலும் கடைப்பிடிக்கப்பட்ட ஒன்றுதான்.

1999ல் ‘டிராயின்’ வழிகாட்டுதலின்படி அலைக்கற்றை வரிசை எந்த முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டதோ அதேமுறையில்தான் நானும் ஒதுக்கீடு செய்தேன்; எனவே, நான் எந்தத் தவறும் செய்யவில்லை; குற்றமும் இழைக்க வில்லை"
- என்று திரும்பத்திரும்ப மட்டுமின்றி மாநிலங்களவையில் இந்தப் பிரச்சினை குறித்து நடந்த விவாதத்தில் மேலும் எதிர்க்கட்சிகளுக்கு பதிலளித்து அழுத்தந்திருத்தமாக வலியுறுத்திக் கூறியிருக்கிறார்.

எனினும், ராசாவின் எதிரிகள் சாதாரணமான வர்களா? அவர்களுக்கு தலையில் மட்டும்தானா மூளை இருக்கிறது? முதுகில் தொங்கும் நூலிலும் மூளை படைத்தவர்களாயிற்றே. சும்மா இருப்பார்களா? ஆ.ராசா இந்த ஒதுக்கீட்டை தன்னுடைய விருப்பத்திற்கேற்றவாறு செய்திருக்கிறாரே தவிர, சட்ட அமைச்சகத்தின் ஆலோசனையைக்கூட புறந்தள்ளி விட்டார். ‘டிராய்’ என்ன சொல்லுகிறது என்பதற்காகக் கூட அவர் கவலைப்படவில்லை என்று இன்னொரு குற்றச்சாட்டை - இன்னொரு புளுகை அவிழ்த்து விட்டார்கள்.

மத்திய சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி; காங்கிரசுடன் கூட்டுச் சேர ஜெயலலிதா விருப்பம் தெரிவித்தபோது அளித்த பதிலில்,
இரண்டாவது தலைமுறை அலைவரிசை ஒதுக்கீடு குறித்து மத்திய தலைமை தணிக்கை அதிகாரியின் அறிக்கையை, எதிர்க்கட்சிகள் கூறுவதுபோல் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா மீதான கண்டனம் என்று கூறமுடியாது என்றும், அந்த அறிக்கை இறுதியான ஒன்றல்ல என்றும் ஆ.ராசாவின் எதிரிகளின் முகத்தில் கரி பூசுவது போலவும், மூக்கை உடைப்பது போலவும் கருத்துத் தெரிவித்திருக்கிறார். எனவே, சட்டத்துறையின் ஆலோசனையையும் ராசா கேட்கவில்லை என்று பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் நடத்தி வரும் இன்னொரு புளுகும் தகர்ந்து தரைமட்டாகி விட்டது.

டிராய் இந்த விஷயத்தில் என்ன சொல்கிறது. டிராய் சொன்னபடிதான் ராசா நடந்து கொண்டாரா அல்லது தனது விருப்பத்திற்கேற்ப நடந்து கொண்டாரா என்ற கேள்விக்கு பதில் அளிப்பது போல் - 2ஜி ஸ்பெக்ட்ரம் ராசாவால் ஒதுக்கீடு செய்தது பற்றி ஒரு தகவல் 13.11.2010 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்தத் தகவலை வெளியிட்டவரும் அல்ப சுல்பமானவரல்ல. அவர்தான் டிராய் அமைப்பின் தலைவர் ஜெ.எஸ்.சர்மா.
அவர் -
"2008 ஆம் ஆண்டு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில் விதிமுறைகள் எதுவும் மீறப்படவில்லை" - என்று குறிப்பிட்டிருக்கிறார்.

செய்தியாளர்களிடம் பேசிய டிராய் அமைப்பின் தலைவர் ஜெ.எஸ்.சர்மா, 2008 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட (அதாவது ராசாவால் வழங்கப்பட்ட) 2 ஜி ஸ்பெக்ட்ரத்திற்கு டிராய் அமைப்பு எந்த ஒரு விலையையும் நிர்ணயம் செய்யவில்லை. 6.2 மெகாஹட்ஸ்க்கு மேற்பட்ட அலைவரிசைக்கு மட்டுமே 3ஜி விலைக்கு இணையாக வசூலிக்க வேண்டுமென்று, இந்த 2010 ஆம் ஆண்டில்தான் ‘டிராய்’ பரிந்துரை செய்ததாகவும், 2008 ஆம் ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட அனைத்து 2ஜி ஸ்பெக்ட்ரத்திற்கும் 3ஜி விலையில் மதிப்பீடு செய்து, அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக குற்றஞ் சாட்டுவது சரியல்ல.
என்றும் தெரிவித்திருக்கிறார்.

ஆக, 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டை நடத்துவது எப்படி என்பதைச் சொல்வதற்கு அதிகாரம் படைத்த டிராயின் தலைவரே ராசாவின் செயல்பாடு சரிதான் என்று நற்சான்றிதழ் வழங்கிவிட்டார்.
அதுமட்டுமின்றி,

இப்போது அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நஷ்டம் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி என்று பினாத்து கிறார்களே! அதை எப்படி கற்பனையாகக் கண்டு பிடித்தார்கள் என்பதையும் டிராய் தலைவர் அம்பலப்படுத்தியுள்ளார்.

இப்போது 3ஜி அலைக்கற்றை வரிசைக்கு டிராய் புதியதாக விலை மதிப்பீடு செய்து அறிவித்தது. 2010ல் அறிவிக்கப்பட்ட அந்த விலையோடு 2008ல் ஒதுக்கப்பட்ட விலையை ஒப்பிட்டு இதே மாதிரி செய்திருந்தால் அரசாங்கத்திற்கு 2008ல் இந்த 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அதிகமாகக் கிடைத்திருக்குமே! அந்தத் தொகை நஷ்டமாகிவிட்டதே! என்று கண்ணீர் வடிக்கிறார்களே, அது சரியல்ல என்பதை டிராயின் தலைவரே உறுதிபடக் கூறிவிட்டார்.

ஆ.ராசாவின் எதிரிகள் அவர் மீது கூறிய புளுகுகளும் நடத்திய விஷமப் பிரச்சாரங்களும் எத்தகையது என்பதை மாத்தூர் கையெழுத்திட்ட ஆவணங்களும் மத்திய சட்டத்துறை அமைச்சரின் கருத்தும், டிராய் தலைவரின் நற்சான்றிதழும் ஒரே நாளில் அடுத்தடுத்து உடைத்து பொடிப் பொடியாக்கி விட்டன.
அதனால் என்ன?
சிரங்கு பிடித்தவன் சொறிந்து கொண்டே இருப்பான். அவனை யார் தடுக்க முடியும்?

Read more...

முரசொலியில் வெளிவந்த கார்டூன்ஸ்

Read more...

Friday, November 19, 2010

பதவியை துறந்து விட்டு சென்னை திரும்பிய ஆ.ராசாவுக்கு எழுச்சிமிகு வரவேற்பு

சென்னை, நவ. 18 -

புதுடில்லியில் இருந்து திரும்பிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசாவுக்கு சென்னை விமான நிலையத்தில் மாநில அமைச்சர்கள் மற்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் தலைமையில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது.

நாடாளுமன்ற அலுவல்கள் முடங்கக் கூடாது என்ற நோக்கில் தி.மு.. தலைமை அறிவுறுத்தியதை ஏற்று மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்த .ராசா சென்னை திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் மேளதாளங்கள் முழங்க எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, அமைச்சர்கள் பரிதி இளம்வழுதி, என்.செல்வராஜ், தமிழக அரசின் புதுடில்லி பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன் உள்ளிட்டோரும் ராசாவை வரவேற்றனர்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற தொண்டர்கள் ராசாவுக்கு ஆதரவாகவும், ஜெயலலிதாவை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர்.



Read more...

Monday, November 15, 2010

(வீடியோ) மக்கள் மன்றத்தில் நிரூபிப்பேன்: ஆ.ராசா பேட்டி

சென்னையில் இருந்து டெல்லி திரும்பிய அமைச்சர் ராசா, பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்து தனது பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்தார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆ.ராசா, திமுக தலைவர் கலைஞர் கேட்டுக்கொண்டதை அடுத்து நான் என் பதவியை ராஜினாமா செய்திருக்கிறேன். அதற்காக என் மீதான குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டே என்று அர்த்தமல்ல. நான் எந்த தவறும் செய்யாதவன்.

அரசுக்கு ஏற்பட்டுள்ள தர்மசங்கடமான நிலையை தவிர்க்கவே ராஜினாமா செய்தேன். எதிர்க்கட்சிகளால் எந்த வித இடையூறும் இன்றி நாடாளுமன்றம் அமைதியாக நடைபெறவேண்டும் என்று ராஜினாமா செய்துவிட்டேன். ஆனால் நான் குற்றமற்றவன் என்பதை மக்கள் மன்றத்தில் நிரூபிப்பேன்.


இந்த துறைக்கு நான் பொறுப்பேற்றுக்கொண்டது முதல் உண்மையாக உழைத்திருக்கிறேன். என் முயற்சியால்தான் வாடிக்கையாளர்கள் 70 கோடியை தாண்டியிருக்கிறார்கள். நான் இந்த தேசத்திற்கு என் கடமையை சரியாக செய்திருக்கிறேன் என்பதை கூறிக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்தார்

Read more...

கலைஞர் விளக்கம்: ஆ.ராசா பதவி விலகல்

தி.மு.. தலைமைக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளரும், பிள்ளை பிராயத்தில் இருந்து தன்மான இயக்கத்தின் வழி பற்றி நடந்து வருபவரும், ந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, அண்ணல் அம்பேத்கர் போன்ற அரசியல் சமுதாய சீர்த்திருத்த தலைவர்கள் காட்டிய வழியில் தொடர்ந்து செல்பவரும், என் உள்ளம் கவர்ந்த தம்பிமார்களில் ஒருவராக விளங்கி வருபவரும்; பழைய திருச்சி மாவட்டம் - பெரம்பலூர்ப் பகுதியில் பட்டிக்காட்டுப் பொட்டலில் பூத்து குலுங்கிவரும் புரட்சியாளருமான அருமைத் தம்பி இராசா அவர்கள் - தன்னை வெற்றி பெற வைத்த தொகுதி மக்களுக்கும், அந்த வாய்ப்பை வழங்கிய தலைமைக் கழகத்திற்கும் என்றேன்றும் நம்பிக்கைக்குரியவராகவும்; ஏற்றுக் கொண்ட பணியில் நேர்மை, நியாயம், கடமையுணர்வு ஆகியவற்றை தொடர்ந்து கடைப்பிடித்து; “தலித்” இனத்தின் தகத்தகாய கதிரவனாகவும் விளங்குபர் என்பதை இந்த நாட்டு மக்கள் அனைவரும் தெளிவாக அறிவார்கள்.


அவரை மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலக்க வேண்டுமென்று திட்டமிட்ட முயற்சி பல நாட்களாக நடைபெற்று; ஜனநாயகக் கூடங்களில் சந்தைக் கடை இரைச்சல் மேலிடவும்; நாட்டு மக்களுடைய பிரச்சினைகளை விவாதித்திடவும், அணுகிடவும் முடியாத அளவிற்கு ஜனநாயக மன்றங்களின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்திடவுமான செயல்கள் தொடர்ந்து ஓராண்டுக் காலமாக நிகழ்த்தப் பெற்று வருகின்றன.

அவர் மீது என்ன பழி சுமத்தப்படுகிறது என்று பார்த்தால்; 1999 முதல் மத்தியில் உள்ள தகவல் தொழில்நுட்பத் துறை 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை எந்த முறையை கையாண்டு அளித்து வந்ததோ. அதே முறையைத்தான் தம்பி இராசா பின்பற்றினார் என்றெல்லாம் அளிக்கப்பட்ட விளக்கங்கள் எதையும் ஏற்றுக் கொள்ளாமல், அவர் இராஜினாமா செய்தே தீர வேண்டும் என்றும் பிடிவாதம் செய்து - நாடாளுமன்ற அவைகளையே நடக்க விடாமல் செய்து வருகிறார்கள். எல்லோராலும் நடத்தப்படுகிற குழப்பம் அல்ல; குழப்பத்தை உருவாக்க பலர் தேவையில்லை; சிலரே போதும்; அந்தச் சிலரால் இன்று இந்தியாவில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் நிர்வாகத்தையும், பாராளுமன்ற நடவடிக்கைகளையும் தடைப்படுத்துவதன் மூலம் முழுவதும் ஸ்தம்பித்துப் போகக் கூடிய சூழலை உருவாக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் பாராளுமன்ற ஜனநாயகத்தை - அதன் மாண்பை, அதன் நடுநிலையைத் தழைத்திடச் செய்யவும், தக்க வைத்திடவுமான பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது. பேரறிஞர் அண்ணா அவர்கள் அந்த ஜனநாயக நெறியிலேயேதான் நம்மையெல்லாம் வளர்த்து ஆளாக்கியிருக்கிறார். அந்த நெறிக்கே விபத்து ஏற்படும்போது, அந்த விபத்திலேயிருந்து இந்திய ஜனநாயகத்தை, குறிப்பாக, பாராளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாக்கும் பொறுப்பு நமக்கிருகிறது.

அதனை நிலைநாட்டிடும் வகையில் பாராளுமன்ற உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் இருக்கின்ற தம்பி ஆ.இராசா அவர்கள்; அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதென்று முடிவெடுத்து அவருக்கும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இன்றிரவே (14.11.2010) தனது அமைச்சர் பதவி விலகல் கடிதத்தை இந்திய பிரதமரிடத்திலே தம்பி இராசா அவர்கள் வழங்கிடுவார் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.


Read more...

இந்து நாளேட்டில் ஆ.ராசாவின் பேட்டி (நவம்பர் 14 இதழில் வெளியானதன் தமிழாக்கம்)

கேள்வி : இந்தியத் தலைமைத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையிலிருந்து கசிந்ததாகக் கூறப் படும் பகுதி, அலைக் கற்றை ஒதுக்கீட்டில் உங்களது கொள்கை மூலமாக வும், மேலும் பல நிறு வனங்களை அறிமுகப் படுத்தியதன் மூலமாக வும், சில உரிமை நிபந்த னைகள் சில வற்றில் மாற்றங்கள் மூலமாகவும், அரசுக்கு ரூ.1.77 லட்சம் கோடி இழப்பு ஏற்படுத்தி விட்டதாகக் கூறப்படுகி றதே. தங்களால் விளக்க முடியுமா?


அமைச்சர் ஆ.இராசா : தற்போது எழுப்பப் பட்டுள்ள பிரச்சினைகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். முதலாவ தாக அரசுக்கு ஏற்பட்டு விட்ட தாகக் கூறப் படும் இழப்பு, இரண்டாவதாக நடை முறைத் தவறுகள்.

மத்திய அமைச்சரவையால் பரிசீலிக்கப் பட்டு நாடாளுமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப் பட்ட 1999ஆம் ஆண்டு தேசியத் தொலைத் தொடர்புக் கொள்கை ஏலமுறையிலிருந்து (94ஆம் ஆண்டு கொள்கை) வருவாய்ப் பங்கீட்டு முறைக்கு (99ஆம் ஆண்டு கொள்கை) மாற அதிகாரம் அளிக்கிறது. கசிந் துள்ள தணிக்கை அறிக்கை நாங்கள் ஏல முறையைக் கடைப் பிடித்து 3 ஜி படகில் கணக்கு ரீதியிலான பயணம் மேற்கொண்டி ருக்க வேண்டும் என்று கூறுகிறது. எனவே, தற் போது ஏற்பட்டுவிட்ட தாகக் கருதப்படும் இழப் புகணக்கிடப்பட்டுள்ள தற்கான அளவு கோலே சரியானதல்ல.

இங்கே நமக்குள்ள பிரச்சினை அரசியல் சட்ட ரீதியிலான ஒரு அமைப் பான தலைமைத் தணிக்கை அதிகரிக்கும் மற்றொரு அரசியல் சட்ட ரீதியிலான அமைப்புகளான மத்திய அமைச்சரவை, மற்றும் நாடாளுமன்றம் ஆகியவற்றிற்கு இடையிலான அபிப்ராய பேதம் (கருத்து வேறுபாடு ) ஆகும்.

தணிக்கை அதிகாரி, அமைச்சரவை, நாடாளு மன்றம் மற்றும் மற் றொரு அரசியல் சட்ட ரீதியிலான அமைப்பான தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணை யம், மற்றும் திட்டக் கமிஷன் ஆகியவற் றோடு ஒப்புக்கொள்ள முடியாததது போலத் தோன்றுகிறது. இப்படிப் பட்ட நிறுவன முறை மீறலுக்கு நீதித் துறை மூலமாகவோ அல்லது நாடாளுமன்ற அமைப்பு மூலமோ தீர்வு காணப் பட வேண்டும் என்பது எனது கருத்து.

கேள்வி: இந்தக் கொள்கையால் இழப்பு ஏற்பட்டு விட்டதாக எதிர்க்கட்சிகள் கூறும் ரூ.1.77 லட்சம் கோடி பற்றி?

அமைச்சர் ஆ.இராசா : 2 ஜி அலைக்கற்றை ஏன் ஏலம் விடப்படவில்லை என்ற அடிப்படைக் கேள் விக்கு ‘இந்து’ நாளேட்டில் எனது முந்தைய பேட்டி யில் விளக்கியுள்ளேன். மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து நாடாளு மன்றம் ஏற்றுக்கொண்ட 1999 ஆம் ஆண்டு தேசியத் தொலைத் தொடர்புக் கொள்கை ஆவணம் மறுப் பதால், 2ஜி அலைக்கற் றையை ஏலத்தில் விட முடியாது.
நாடாளுமன்றம்தான் கொள்கையை திருத்த முடியும்

பத்தாவது ஐந்தாண்டுத் திட்டம், பதினொறாவது ஐந்தாண்டுத்திட்டம், தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) ஆகியவையும் 99 ஆம் ஆண்டு கொள்கை யின்படியே உள்ளன. 99 ஆம் ஆண்டு கொள்கை யில் ஏதாவது திருத்தம் தேவையென்றால் அதை நாடாளுமன்றம் மட்டும் தான் செய்ய முடியும்.
புதிய ஒருமைப் பயன் பாட்டு சேவை உரிமங்கள் மற்றும் 2ஜி அலைக் கற்றை வழங்குவதற்கான தற் போதைய கொள்கை 2003 ஆம் ஆண்டு நவம்பர் முதல் எந்தவித மாறுத லும் இன்றி, வெளிப் படையான கொள்கை யாக இருந்து வருகிறது. 2003 அக்டோ பர் 31 அன்று மத்திய அமைச்ச ரவையால் ஒப்புதல் அளிக் கப்பட்டக் கொள்கை யிலிருந்து எந்த விலகலும் இல்லை. 2003 நவம்பர் முதல் இன்றுவரை அடுத் தடுத்து வந்த அரசு களால், உரிமங்கள் வழங்குதல், அலைக் கற்றை ஒதுக் கீடு செய்தல், கட்டணங்கள் ஆகியவற் றிற்கான நடைமுறைக் கொள்கை கடை பிடிக்கப் பட்டு வந்துள்ளது.

61 சதவிகித மக்களுக்கு செல்போன் வசதி
அரசின் தொலைத் தொடர்புத் துறைக்கான வரிகள் மற்றும் ஒழுங்கு முறைக் கொள்கை முன் னேற்றுவதற்காக இருந்து வந்துள்ளது, இருக்கிறது. அதில் வருவாய் ஈட்டுதல் என்பதற்கு இரண்டாவது இடம்தான் தரப்பட்டுள்ளது. இவை இத்துறையில் முன்னெப்போதும் கண்டிராத வளர்ச்சிக்கும், தொலைத்தொடர்பு அடர்த்தியில் மிகப்பெரும் தாவுதலையும் கண்டுள் ளது என்பதால் இந்தக் கொள்கைகள் மாற்றப்படவில்லை ( அதாவது, உலகிலேயே இரண்டாவதாக தற்போது 70 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் உலகிலேயே மிகக்குறைந்த கட்டணங் களில் செல் போன் வசதி யைப் பெற்றுள்ளனர் -) கிராமப்புறங்களில் 2010 செப்டம்பர் மாதம் அது 28.46 சதவீதமாகவும், கிராமப்புறம் மற்றும் நகர்ப் புறம் சேர்ந்து மொத்த தொலைத்தொடர்பு அடர்த்தி 60.99 சதவீத மாக உயர்ந்துள்ளன. ( அதாவது 100 இந்தியர் களில் சுமார் 61 பேருக்கு செல்போன் வசதி கிடைத் துள்ளது). தற்போது மொத்தம் உள்ள தொலை பேசிகளின் எண் ணிக்கை 72.3 கோடி ஆகும். இது 11வது ஐந்தாண்டுத் திட் டத்தின் இலக்கான 60 கோடிக்கும் அதிகமாகும்.

மேலும், அரசின் மிக அதிகமான வரி இல்லாத வருவாய் இத்துறையில் வருடாந்திர உரிமக் கட் டணமும், அலைக்கற்றை கட்டணமும் ஆகும். 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை அரசு வருவாய்ப் பங்கீட்டு முறை மூலமாக ரூ.77,038 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

6.2 மெகா ஹட்ஸ்க்கு மேலானஅலைக்கற்றை ஒதுக்கீட்டில், இதன் காரணமாக அரசுக்கு ரூ.36,729 கோடி இழப்பு ஏற்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. என்னு டைய அமைச்சரவையில் உள்ள விவரங்களின்படி, ஒட்டுமொத்த வருவாயில் ஒரு சதவித வருவாய் பங்கீடு என்ற அடிப்படையில் நிர்ணயிக்கப் பட்ட சந்தாதாரர் அடித் தளத்தை அடைந்த தொலைத் தொடர்பு சேவை நிறுவனத்தின் வேண்டுகோளுக்கு இணங்க 6.2 மெகா ஹட்ஸ்க்கு மேல் 10 மெகா ஹட்ஸ் வரை கூடுதல் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யும் முடிவை அப்போதைய அமைச்சர் பிரமோத் மகாஜன் 2002 ஜன வரி 31 அன்று எடுத்தார்.

அடுத்த அமைச்சர் அருண்ஷோரி 6.2க்கு மேல் 21 மெகா ஹட்ஸ் ஒதுக்கீடு செய்தார். தயாநிதிமாறன் 38.8-ம் நான் 12.6 மெகா ஹட்சும் ஒதுக்கீடு செய்தோம். நான் ஒதுக்கீடு செய்தபோது, 6.2 மெகாஹட்ஸ் என்பது ஒப்பந்த கலவை மிஞ்சி இருப்பதால் 6.2 மெகா ஹட்சுக்கு மேலான அலைக்கற்றைக்கு அர சால் நிர்ணயிக்கப்படும் கட்டணம் வசூலிக்கப் படும் என்று ஒரு விதியை வகுத்தேன்.

இது நான் எனக்கு முன் இருந்தவர்கள் மீது குற்றம் சுமத்துகிறேன் என்றோ, அவர்கள் மீது பொறுப்பை சுமத்து கிறேன் என்றோ அர்த்த மாகாது, 1999 முதல் நடைமுறை முழுவதும் தொடர்ந்து வந்துள்ளது.
எதிர்க்கட்சிகள் விவாதத்தில் பங்கேற்காதது ஏன்?
இழப்பு என்று கருதப் படுவதற்கு எந்தவிதமான தர்க்க ரீதியிலான அடிப் படையும் கிடையாது. அது பொருத்தமான கணக்கீட்டு முறையும் ஆகாது. கொள்கை மற்றும் செயல் முறையில் ஏற்பட்டிருக்கலாம், வந் திருக்கலாம் என்றெல் லாம் வழிகிடையாது என்பதால் ஊடகங்களின் அடிப்படையில் இழப்பை கணக்கிட முடியாது.

எதிர்க் கட்சிகள் விவாதத்தில் பங்கேற்றால் அவை அம்பலமாகிவிடும் என்பதால், அவர்கள் நாடாளுமன்றத்தை முடக்குகிறார்கள்.

கேள்வி :- ஆனால் நீங்கள் அரசுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தி விட்டீர்கள் என்பது குற்றச் சாட்டு . . . . ?

அமைச்சர் ஆ.இராசா:- தொலைத் தொடர்புத் துறையில் ஒரு ஏகபோக சுயநல கும்பலை (உயசவநட) நான் உடைத்து விட்டேன் என்பதால் இந்தக் குற்றச் சாட்டுகள் கூறப்படு கின்றன என்று நம்புவ தற்கு எனக்கு உறுதியான காரணங்கள் உள்ளன. 1999 முதல் நான் பொறுப்பு ஏற்பதற்குச் சில நாட் களுக்கு முன்பு வரை இந்த ஏகபோக சுயநல கும்பலுக்குள் இதே கொள்கை நடை முறைப் படுத்தப்பட்டு வந்த வரை யில், எந்த அமைச் சரும் விமர்சிக்கப்பட வில்லை. 1998-99 ஆம் ஆண்டுக் கான தலைமைத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை யைப் பாருங் கள்; அது அப்போதிருந்த உரி மங்களை நிர்ணயிக் கப்பட்ட கட்டண முறை யிலிருந்து வருவாய்ப் பங் கீட்டு முறைக்கு மாற்றிய கொள்கையைக் கடுமை யாக விமர்சித்தது. அதில் பல கடுமையான கண்ட னங்கள் இருந்தன. ஆனால் தலைமைத் தணிக்கை அமைப்புக்கே தெரிந்த காரணங்களை 2000-ம் ஆண்டு முதல் அது மவுன காட்சியாக விளங்கி, அடுத்தடுத்து அளித்த அறிக்கைகளில் அது அமைச்சகத்தை எப்போதும் கேள்வி கேட்டதில்லை.

உரங்கள், பெட்ரோ லியப் பொருட்கள், பொது விநியோக முறை யின் கீழ் வழங்கப்படும் அரிசி போன்றவற்றிற்கு அரசு மானியங்கள் தரும் உதாரணத்தைப் பயன் படுத்தி, இந்த இழப்பு கருத்தியலானது, உண்மை நிலையை அடிப்படை யாகக் கொண்டது அல்ல (nடிவiடியேட) என்பதை நான் விளக்குகிறேன். இந்தப் பொருட்களின் சந்தை விலைகளை எடுத்துக் கொண்டு, அவை மிகக் குறைந்த விலைகளில் (அரசு மானி யத்தால்) விற்கப்படுவதால் அரசுக்கு இவ்வளவு ஆயிரம் கோடி இழப்பு என்று சொன்னால், அதை ஏற்க முடியுமா?

அறிவார்ந்த காரணங் களின் அடிப்படையில் ஒரு கொள்கை இருக் கிறது. அவ்வப்போது மாறிவிடும் பிரச்சினை களை முடிவு செய்ய சட்ட ரீதியிலான ஒரு அமைப்பு உள்ளது. எனவே தொலைத் தொடர்புக் கொள்கை தீர்ப்பின்படி, வருவாய்ப் பங்கீட்டு முறைதான் எங்களுக்கு உள்ளது.

கேள்வி:- அலைக் கற்றைப் பிரச்சினையில் நீங்கள் ஏன் சட்ட அமைச் சகம் நிதி அமைச்சகம் ஆகியவற்றின் சேவை களைப் பயன்படுத்த வில்லை? நீங்கள் பிரதம ரின் ஆலோச னையையும் பொருட் படுத்த வில்லை என்றும் ஒரு குற்றச்சாட்டு உள்ளதே?
அமைச்சர் ஆ. இராசா:- சட்ட அமைச்சகத்தின் ஆலோசனை தானாக வருவதில்லை. இருப்பில் உள்ள அலைவரிசை மிகக் குறைவாக இருப்பதால், வந்த ஏராளமான விண் ணப்பங்களை எப்படிக் கையாள்வது என்ற குறிப் பிட்ட பிரச்சினையில் எங்கள் அமைச்சகம் சட்ட அமைச்சகத்துக்கு ஒரு குறிப்பு அனுப்பியது. அந்தக் குறிப்பிலேயே நாங்களும் சில வழி முறை களைக் குறிப் பிட்டிருக்கி றோம். இதன்மீது அபிப்பி ராயத்தைக் கூறுவதற்கு மாறாக, சட்ட அமைச்ச கம் இதை அமைச்சர்கள் குழுவிற்கு அனுப்புமாறு ஆலோசனைக் கூறியது. இந்த ஆலோசனை அலைக்கற்றை விலை நிர்ணயிப்பு டனோ அல்லது வருவாய்ப் பங்கீட்டு அளவிலேயோ தொடர்புடை யது அல்ல. அலைக் கற்றை இருப் பைப் பொறுத்து முதலில் வந்த வர்களுக்கு முதலில் சேவை என்று இப் போதுள்ள கொள்கை அடிப்படையில் எங்கள் துறை செல்ல விரும்பிய தால் இது பிரதமரிடம் விளக்கப் பட்டது.

2001 ஆம் ஆண்டு நிர் ணயிக்கப்பட்ட நுழைவுக் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டிய தேவை உள்ளது என்று தொலைத் தொடர்புத் துறை செயலாளருக்கு நிதித்துறை செயலாளர் ஒரு கடிதம் எழுதினார். நுழைவுக் கட்டணம் நிர்ணயிக்கும் அதிகாரம் தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத் திடம் (டிராய்) தான் உள்ளது. 2007 -ம் ஆண்டு டிராய் நுழைவுக் கட்ட ணத்தை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று மிக உறுதியாக, அறுதி யிட்ட பரிந்துரையை அளித்ததாலும், ஏற் கனவே அந்தக் கட்ட ணத்துக்கு நிதித்துறை அமைச்சகத்தின் பிரதி நிதியும் உறுப்பினராக உள்ள தொலைத் தொடர்பு கமிஷன் ஒப்பு தல் அளித்துள்ள தாலும், டிராய் பரிந்துரையை மேற்கோள் காட்டி தொலைத் தொடர்புத் துறை செயலாளர் நிதித் துறை செயலாளருக்கு பதில் அனுப்பினார் - அத் துடன் அந்த சுற்று முடிந்தது.

அதுபோலவே, அலைக் கற்றை ஒதுக்கீடு மற்றும் சந்தாதாரர் விதி முறை தொடர்பாக பிரத மர் சில குறிப்புகளை அனுப்பி னார். உத்தேசிக்கப்பட் டிருந்த அனைத்துப் பிரச் சினைகள் மற்றும் விதி முறைகள் ஆகியவை பிரத மருக்கு அனுப்பப்பட்டு அது வந்து சேர்ந்ததற் கான பதிலும் வந்தது. கேபினட் அமைச்சர்கள் ஒருவருக் கொருவர் கடி தங்கள் எழுதிக்கொள் வது, கேபினட் அமைச்சர் கள் பிரதமருக்கு கடிதங் கள் அனுப்புவதும் சாதா ரண வழக்கம் தான். எனக்கும் பிரதமருக்கும் இடையில் கடிதப் போக்கு வரத்து இருந்தது என் பதை மட்டும் அடிப்படை யாக வைத்து நான் பிரதமரின் ஆலோசனை யைப் பொருட்படுத்த வில்லை என்று ஊகிக்க முடியாது.
கடைசி தேதி என்பது அர்த்தமற்றது

கேள்வி :- உரிமங்கள் பெறுவதற்கான கடைசி தேதியை நீங்கள் ஏன் அப்பட்டமாக மாற்றினீர்கள்?

அமைச்சர் ஆ.இராசா:- முதலில் விண்ணப்பித்த வர் முதலில் பரிசீலிக்கப் படுவதால், முதலில் வந்த வருக்கு முதலில் சேவை என்ற கொள்கை கடை பிடிக்கப்படும் வரை, கடைசி தேதி என்பது அர்த்தமற்றது. அலைக் கற்றை இருப்பின் தோராய மதிப்பீடு மற்றும் 2009 செப்டம்பர் 25 அன்று செய்திக் குறிப்பு வெளியிடப்பட்ட வரை யில் பெறப்பட்ட விண் ணப்பங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், அந்தத் தேதி வரையில் பெறப் பட்ட விண்ணப்பங்களின் முதல் தொகுதி பரிசீலிக் கப்பட்டது. ஏதாவது விண்ணப்பம் புறக்கணிக் கப்பட்டதா அல்லது பின் னுக்குத் தள்ளப்பட்டதா என்பதுதான் கேள்வி.

மீதமுள்ள விண்ணப் பங்கள் அலைக்கற்றை இருப்பைப் பொறுத்து பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். மீத முள்ள விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட வில்லை என்பது ஊட கத்துறையில் உள்ள சில தவறான கருத் தாகும்.

பொதுமக்கள் பயனடைந்துள்ளனர்

கேள்வி :- நீங்கள் இலக்கிடப்பட்டுள்ளீர் கள் என்று நினைக்கிறீர் களா?

அமைச்சர் ஆ.இராசா:- தொலைத் தொடர்புத் துறையில் மாற்றங்கள் கூடாது என்று விரும்பும் ஒரு பெரிய (ஆதரவு திரட் டும்) கும்பல் இருப்ப தாக நினைக்க நான் நிர்ப்பந் தக்கப்படுகிறேன். உதா ரணமாக (செல் போன் சேவையை எண்கள் மாறா மல் ஒரு சேவையிலிருந்து மற்றொரு சேவைக்கு மாற்றிக் கொள்ளும்) எண் சேவை மாற்ற முறைக்கு எதிரானவர்கள் சிலர் உள்ளனர். என்னைக் குறி வைத்து பிரகடனப்படுத்தி யுள்ள ஏகபோக சுயநல கும்பல் (ஊயசவநட) ஒன்று உள்ளது. அதற்கு ஊடகத் துறையின் மீது செல் வாக்கு உள்ளது. அதனி டம் மிகப் பெருமளவு நிதி ஆதாரங்களும், பணமும் உள்ளன. இந்த நிகழ்வுகள் சில அரசியல் கட்சிகளால் தி.மு.க.வுக்கு கெட்ட பெயரைத் தேடித் தரப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் மக்கள் பயன டைந்துள்ளனர் என்ற உண்மை உள்ளது. அது என்னாலும் அரசாலும் நிர்ணயிக்கப்பட்ட கொள் கைகளாலும், எடுக்கப் பட்ட முயற்சிகளாலும் ஆகும்.

கேள்வி:- கொடுக்கப் பட்ட 122 உரிமங்களில் 85 தகுதி நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாத நிறு வனங்களுக்குச் கொடுக் கப்பட்டுள்ளது ஏன்?

அமைச்சர் ஆ.இராசா:- இதுவும் தெளிவற்ற கருத்து, தலைமை தணிக்கை அதிகாரி அரசி யல் சட்ட ஷரத்து 149 க்கு அப்பால் அதி காரங்களை அபகரிக்க முயலவோ, அரசியல் சட்ட ரீதியில் உச்சநீதி மன்றத்திற்கும், உயர்நீதிமன்றத்திற்கும் முறையே அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள 32 மற்றும் 226வது பிரிவு களின் கீழ் பிரச்சினை களை முடிவு செய்யவோ முயலக்கூடாது. விண் ணப்ப தேதியில் கம்பெனி கள் பதிவாளரிடம் குறிக் கோள் மாற்றப் பிரிவு, நிகர மதிப்பு, கம்பெனியின் பெயர் ஆகியவை காண் பித்தால் அது தொடர் பாக தணிக்கை அதிகாரி அறிக் கையில் தகுதி யின்மை என்று கூறப்பட் டுள்ளது என்பதை விளக்க வேண்டும். நாங்கள் சுய மாக அளிக்கப்படும் சான்றை அடிப்படை யாகக் கொள்கிறோம். கம்பெனிகள் பதிவாளர் பதிவேட்டில் பதிவு செய் வது என்பது ஒரு நடை முறை. அந்தப் பதிவாள ரிடம் முந்தைய தேதியில் பதிவு செய்யப்படுவது, அதற்கான தீர்மானம் முறையாக நிறை வேற்றப் பட்டு கம்பெனி செயலா ளரால் சான்றிதழ் அளிக் கப்பட்டிருந்தால், எந்தவிதமான சட்ட சிக்க லும் இல்லை என்று சட்ட அமைச்சகம் தற் போது கருத்து தெரிவித் துள்ளது.

கேள்வி : 99 ஆம் ஆண்டு புதிய தொலைத் தொடர்புக் கொள்கை தவறான கொள்கை என்று ஏற்றுக் கொள் வீர்களா?

அமைச்சர் ஆ.இராசா:- இல்லை. அந்தக் கொள்கையின் தீர்ப்பினுடைய வடிவமும், உணர்வும், நிகழ்ந்து வருகிறது. அரசில் கட்சி நிலைமை மாறுவதால் கொள்கைகள் மாற்றப்படக் கூடாது. 99ஆம் ஆண்டு கொள்கை தேசிய ஜனநாயகக் கூட் டணி அரசால் உருவாக் கப்பட்டது. இதை பா.ஜ.க. தலைமையிலான அரசு வடிவ மைத்தது என்ப தால் மட்டும் அதை நான் மாற்ற விரும்பவில்லை. அப்போதைய அரசின் தொலைநோக்குப் பார்வை சரியானது என்று நான் நாடாளுமன் றத்திலேயே பேசியிருக் கிறேன்.
சட்டம் தன் கடமையைச் செய்யட்டும்

கேள்வி : தணிக்கை அதிகாரியின் எதிரான கருத்தைத் தொடர்ந்து என்ன நடக்கிறது? நீங்கள் ராஜிமானா செய்வீர் களா?

அமைச்சர் ஆ.இராசா : அரசியல் சட்டத்தின் கீழ் தணிக்கைக் கான ஒரு நிறுவனமான தலைமை தணிக்கை அதிகாரியை நான் மதிக்கிறேன். இருப் பினும், முறையான நடை முறை தீர்க்கப்படும் வரை யில், ஒரு தணிக்கையரைத் தண்டிக்கவோ அல்லது அரசின் கொள்கை களைப் பற்றி முடிவுக்கு வரவோ தணிக்கை அதிகாரி அறிக்கையை நீதிமன்ற தீர்ப்பாக எடுத் துக் கொள்ள முடியாது.

மேலும், நாடாளு மன்றத்தின் மூலம் 2000 ஆம் ஆண்டில் வைக்கப் பட்ட தலைமை தணிக்கை அதிகாரியின் 1998 - 99 ஆம் ஆண்டுக்கான அறிக் கையிலும் இதுபோன்ற கருத் துக்கள் கூறப்பட்டி ருந்தன. பொதுக்கணக்கு குழுவோ, நாடாளு மன்றமோ, கொள்கையை மாற்ற முடிவு எதுவும் செய்ய வில்லை. பொதுக் கணக்கு குழுவிடமிருந்து எந்த விதமான ஆலோ சனையும், நடவடிக் கையும் வராத நிலையில், அதற்குப் பின்னர், 2010 ஆம் ஆண்டு வரையில் தலைமைத் தணிக்கை அதிகாரி எந்தத் தவறை யும் கண்டுபிடிக்க வில்லை. இதை தணிக்கை அதிகாரிதான் விளக்க வேண்டும்.

பொது வாழ்க்கையில் குற்றச்சாட்டுகளும் எதிர்க் குற்றச்சாட்டுகளும் சகஜமானவைதான். நீதிபதி வி.ஆர்.கிருஷ் ணய்யர் கூறியது போல, ‘மிக உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் சட்டத்துக்கு மேலானவர்கள் இல்லை, மிகத்தாழ்ந்த நிலையில் இருப்பவர்கள் சட்டத்துக்கு கீழான வர்கள் இல்லை’. சட்டம் தன் கடமையைச் செய் யட்டும். ஒரு கறையுடன் நான் வெளியேற விரும்ப வில்லை.

இவ்வாறு மத்திய அமைச்சர் ஆ.இராசா பேட்டியளித்தார்


Read more...

Saturday, November 13, 2010

”நான் செய்தது தவறா?” : ஆ.ராசா

தெளிவான சொற்கள்... அழுத்தமான வாதங்கள்... தடுமாற்றமில்லாத குரல்... இவைதான் ஆ.ராசாவிடன் நக்கீரன் பேசியபோது வெளிப்பட்டவை.


ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டதாகவும், பிரதமர் உட்பட நிதியமைச்சகம் - சட்ட அமைச்சகம் ஆகியவற்றின் பரிந்துரைகளை கேட்காமல் தன்னிச்சையாக செயல்பட்டதாகவும் 2001-ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திலேயே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கியதால் அரசுக்கு 1 லட்சத்துவ 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு என்றும் மத்திய தலைமைக் கணக்கு தணிக்கை நிறுவனத்தின் அறிக்கை தெரிவிப்பதாக எதிர்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில், இந்த குற்றச்சாற்றுகள் பற்றி விரிவாகவே நம்மிடம் பேசினார் மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா.

மத்திய கணக்குத் தணிக்கை துறை என்பது ஒரு நிறுவனம். அது தனக்கு கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அறிக்கை தயாரித்து மத்திய அரசுக்கு அளிக்கிறது. இந்த விவகாரத்தை பொறுத்தவரை, அறிக்கையின் சாராம்சம் என்ன என்பதை தலைமைக் கணக்குத் துறை அதிகாரி வினோத்ராய் வெளியிடவில்லை. அந்த அறிக்கை இன்னும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. சில ஊடகங்களும் எதிர்கட்சிகளும் மட்டும் உள்நோக்கத்துடன் இந்த விவகாரம் பற்றி தொடர்ந்து சர்ச்சைகளை உருவாக்கி கொண்டிருக்கின்றன. அடிப்படை ஆதாரமற்ற இந்த சர்ச்சைகள் குறித்து நான் பலமுறை விளக்கமளித்திருந்தாலும், இந்த சி.ஏ.ஜி.யை முன்வைத்து எழுப்பப்படும் குற்றச்சாற்றுகளுக்கு என் பதிலை அளிக்க விரும்புகிறேன்.

”இந்தியாவில் தேசிய தகவல் தொழில்நுட்பக் கொள்கை 1994-ஆம் ஆண்டில் முதன் முதலாக உருவாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2 ஜி ஸ்பெக்ட்ரம் எனப்படும் அலைக்கற்றைகள் ஏலம் விடப்பட்டன. அந்த எலத்தில் 3 நிறுவனங்கள் கலந்து கொண்டு அலைக்கற்றைகளை பெற்றன. அப்போது, ஒரு செல்போன் அழைப்புக்கான கட்டணம் 16 ரூபாயாக இருந்தது. இந்த நிலையில், ஏலம் எடுத்த 3 கம்பெனிகளும் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடுத்தன. அதாவது, தங்களுக்கு நட்டம் ஏற்பட்டிருப்பதாகவும், ஏலத்தொகையை கட்ட முடியாது என்றும், அதனை உரிய முறையில் சரி பண்ண வேண்டும் என்றும் கோரின. மனுவை விசாரித்த சுப்ரீம்கோர்ட்டும் இதை சரி செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. புதிய தகவல் தொழில்நுட்பக் கொள்கையை வகுக்கும்படியும் சொன்னது. அதன்படி, 1999ஆம் ஆண்டில் புதிய தகவல் தொழில்நுட்பக் கொள்கை உருவக்கப்பட்டது. அதில், ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விட வேண்டாம். ஸ்பெக்ட்ரம் பெறும் நிறுவனங்களிடம் லாபத்தில் பங்கு என நிர்ணயிக்கலாம். அதுதான் அரசுக்கு அதிக வருவாய் தரும் என்று மத்திய அரசு தனது கொள்கையை வகுத்தது. இதனடிப்படையில்தான் இந்தத் துறைக்கு பொறுப்பு வகித்த பா.ஜ.க. அமைச்சர்கள் பிரமோத் மகாஜன், அருண்ஷோரி ஆகியோரும் அதன் பின் பொறுப்பு வகித்த தயாநிதி மாறனும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்தார்கள். இதுதான் இப்போதும் தொடர்கிறது.

2007 ஆம் ஆண்டு நான் இந்த துறைக்கு பொறுப்பேற்ற போது, எஸ்.டி.டி. அவுட்கோயிங் கட்டணம் 2 ரூபாயாகவும், உள்ளூர் அழைப்புக்கான கட்டணம் 1 ரூபாய் 60 பைசாவாகவும் இருந்தது. அப்போது இருந்த செல்போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 33 கோடி. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும், கட்டணம் குறையவும் என்ன செய்யலாம் என ஆய்வும் ஆலோசனையும் நடத்தியதில் பயன்படுத்தபடாமல் நிறைய அளவில் ஸ்பெக்ட்ரம் இருப்பதையும் அதைப் பயன்படுத்தினால் வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள். அதன் மூலம் அரசுக்கு வருமானம் கூடும். அதேநேரத்தில், அதிகப் பயன்பாட்டின் காரணமாக வாடிக்கையாளர்களுக்கு கட்டணம் குறையும் என்பதை அறிந்தோம்.

இதையடுத்து, தொலைபேசி ஒழுங்கு முறை ஆணையம் (ட்ராய்) இது குறித்து பரிசீலித்து ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்கு பரிந்துரைத்தது. பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஸ்பெக்ட்ரத்தை புதிய நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்தால், தங்களின் ஏகபோக வியாபாரம் பாதிப்படையும் என நினைத்த சில நிறுவனங்கள் இதைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டன. ஆனால், பயன்பாட்டாளர்கள் குறைந்த கட்டணத்தில் செல்போன் வசதியை பயன்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து செயல்பட்டதால், புதிய நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

2 ரூபாயாக இருந்த எஸ்.டி.டி. கட்டணம் இப்போது வெறும் 40 பைசா. 1 ரூபாய் 60 பைசாவாக இருந்த உள்ளூர் அழைப்பு இப்போது 25 பைசாதான் - அதுவும் 10 பைசாவாக குறைய போகிறது.
இந்தியாவில் இப்போது தொலைபேசி, செல்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 72 கோடியே 50 லட்சம் பேர். பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரித்து, வாடிக்கையாளருக்கான கட்டணத்தை குறைய செய்து, அரசுக்கான வருமானத்தை கூடுதலாக்கியதுதான் நான் செய்த தவறு. இதுதான் அநியாயம் என்று எதிர்க்கட்சிகள் சொல்கின்றன. இதைத்தான் குற்றச்சாற்றாக முன்வைக்கிறார்கள்.

2007 இல் செய்யப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை 2001ஆம் ஆண்டுக்கான கட்டணத்திலேயே கொடுத்ததாகவும், குற்றம்சாற்றி கொண்டிருக்கிறார்கள். கட்டணம் நிர்ணயிப்பது எங்கள் துறை அல்ல. அது ட்ராய் என்கிற தன்னாட்சி பெற்ற தனியார் நிறுவனத்தின் பணி. 2007 இல் ட்ராய் வகுத்து கொடுத்த கொள்கையில் கட்டண உயர்வு செய்யப்படவில்லை. 2001 ஆம் ஆண்டுக்கான கட்டணமே நீடித்தது. அதன்படி ஒதுக்கினோம். இதில் எங்கள் தவறு எங்கே இருக்கிறது?

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக பிரதமருக்கு நான் எழுதிய கடிதமும், அவர் எழுதிய பதிலும் ஏற்கெனவே வெளியாகியிருக்கிறது. இந்த ஒதுக்கீடு தவறு என்றோ, இதை நிறுத்தி வையுங்கள் என்றோ அவர் ஒருவரி கூட குறிப்பிடவில்லை. ஒருசில நிறுவனங்களின் ஏகபோக ஆதிக்கத்தில் இருந்த செல்போன் சேவை இன்று இந்தியாவின் குக்கிராமம் வரைக்கும் கிடைக்க செய்திருப்பதுதான் என் தவறு. ஒரு வீட்டை விற்றால் ஒருமுறைதான் பணம் கிடைக்கும். அதையே வாடக்கைக்கோ, குத்தகைக்கோ விட்டால், குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து பணம் கிடைக்கும். அதுபோலத்தான் ஸ்பெக்ட்ரத்தை ஏல முறைக்கு பதில் லாபத்தில் பங்கு என்ற அடிப்படையில் ஒதுக்கீடு செய்து அரசுக்கு நிரந்தர வருமானம் கிடைக்க செய்திருக்கிறோம். இது தவறா? இது அநியாயமா?

சி.ஏ.ஜி. அறிக்கையை வைத்து எதுவும் முடிவெடுக்க முடியாது என்பதை சட்டம் தெரிவாக குறிப்பிடுவதை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெளிவாக சொல்லியிருக்கிறார். செல்போனை பயன்படுத்தும் சாதாரண மக்களுக்கு வசதியும், கட்டணக் குறைப்பு மூலமாக லாபமும் கிடைத்துள்ளது. மக்களுக்கு நன்மை தரும் திட்டங்களை செயல்படுத்தும்போது ஏற்படும் இழப்பை அரசு ஏற்றுக்கொள்வது வழக்கம். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மக்களுக்கும் லாபம் கிடைத்துள்ளது. அரசுக்கும் நிரந்தர வருமானம் வருகிறது. இதுதான் நான் செய்த தவறு என உள்நோக்கத்துடன் சொல்கிறார்கள்” என்றார் அமைச்சர் ஆ.ராசா விளக்கமாகவே...

- நக்கீரன் இதழில் வெளிவந்த பேட்டி

Read more...

Friday, November 12, 2010

தில்லியில் இந்திய மொழிகள் தொழில்நுட்ப பரவல் மையம் தொடங்கியது


இந்திய மொழிகளை மேலும் பல துறைகளில் பயன்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள இந்திய மொழிகள் தொழில்நுட்ப பரவல் மையத்தை தில்லியில் மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசா இன்று (12.11.2010) தொடங்கி வைத்தார்.
==========================================================

புதுதில்லி:

தில்லியில் தேசிய இ நிர்வாகம் ஆலோசனைக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.இராசா, இந்திய மொழிகள் தொழில்நுட்ப பரவல் மையத்தை தொடங்கி வைத்தார்.

www.tdil-dc.in என்ற புதிய இணையதளத்தையும் தொடக்கிவைத்து பேசிய அமைச்சர், இந்திய மொழிகள் தொழில்நுட்ப பரவல் மையம் வாயிலாக மொழிகள் மேம்பாட்டுக்கான வாய்ப்புகள் அதிகமாகும். பொது மக்களுக்கு இது மிகுந்த பயனளிக்கும். பல்வேறு துறைகளில் இந்திய மொழிகளை பயன்படுத்தும் வாய்ப்பும் இந்திய மொழிகள் தொழில்நுட்பம் மேலும் விரிவடையவும் இது உதவிகரமாக இருக்கும் என்று கூறினார்.

இந்த விழாவில் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் சச்சின் பைலட்டும் கலந்து கொண்டு பேசினார்.

Read more...

(வீடியோ) பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை: ஆ.ராசா பேட்டி

தொலைத்தொடர்புத்துறை கொள்கை வழிகாட்டுதல் படியே ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கப்பட்டதால், பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய அமைச்சர் ஆ.ராசா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக கூறப்படுவது தொடர்பாக அமைச்சர் ஆ.ராசாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்த காட்சிகள்:

Read more...

ஜெயலலிதாவுக்கு தகுதி இல்லை: ஆ.ராசா

தொலைத்தொடர்புத்துறை கொள்கை வழிகாட்டுதல் படியே ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கப்பட்டதால், பதவியை ராஜினாமா செய்ய முடியாது என்று மத்திய அமைச்சர் ஆ.ராசா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேச ஜெயலலிதாவுக்கு தகுதி இல்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக கூறப்படுவது தொடர்பாக அமைச்சர் ஆ.ராசாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ராசா, 2 ஜி ஸ்பெக்ட்ராம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்ட போது 1999-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட புதிய தொலை தொடர்பு கொள்கை வழிகாட்டுதல்களை கடை பிடித்தோம். சட்டத்தின்படி தான் அலைக்கற்றை ஒதுக்கீடு நடந்தது. சட்டத்துக்கு உட்பட்டே இதில் நான் பணியாற்றி உள்ளேன். அதை நாங்கள் நீதிமன்றத்தில் தெரிவிப்போம், நிரூப்பிபோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நான் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை. நான் பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை என்றார்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா என்னை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறி வருகிறார். இப்படி சொல்வதற்கு அவருக்கு எந்த தார்மீக உரிமையும் தகுதியும் கிடையாது. ஏனெனில் அவர் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாற்றுக்கள் உள்ளன. ஜெயலலிதா தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவே இப்படி கூறி வருகிறார். இந்தியாவிலேயே தன் மீதான ஊழல் குற்றச்சாட்டு வழக்கு விசாரணைகளை 10,12 ஆண்டுகளாக இழுத் தடித்து வரும் ஒரே தலைவர் ஜெயலலிதாதான். எனவே என்னை பதவியில் இருந்து நீக்க சொல்லும் அதிகாரம் அவருக்கு இல்லை என்றும் ஆ.ராசா தெரிவித்தார்.

2ஜி ஸ்பெக்ட்ராம் அலைக் கற்றை ஒதுக்கீடு தொடர்பாக மத்திய கணக்குத் தணிக்கைத் துறை தனது அறிக்கையில் என்ன சொல்லியுள்ளது என்று எனக்கு தெரியாது. அந்த அறிக்கை இன்னும் என் கைக்கு வரவில்லை. அந்த அறிக்கையை பார்த்த பிறகு கருத்துக்களை சொல்ல முடியும் என்றும் அவர் கூறினார்.

Read more...

Thursday, November 04, 2010

ரூ. 50 ஆயிரம் கோடி ஊழலோ ஊழல்: சின்ன குத்தூசி

பா.ஜ.க.வினருக்கு போராட்டம் ஒரு கேடா?
=============
மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாவைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் அறிக்கை விட்டிருக்கிறார்.

பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி ஏறத்தாழ பத்தாண்டு காலம் நடைபெற்றபோது அந்த ஆட்சியில் இதே தொலைத் தொடர்புத் துறையில் நடந்த இமாலய ஊழல்களை பொன். ராதாகிருஷ்ணன் மறந்திருப்பார் போலும். அவருக்கு தொலைத் தொடர்புத் துறையில் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் ஐம்பதாயிரம் கோடி ஊழல் நடந்ததை நினைவுபடுத்திட விரும்புகிறோம்.

ஊழலுக்கு ஒத்துழைக்க மறுத்த தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஜெகன் மோகனை அந்த இலாக்காவிலிருந்து மாற்றிவிட்டு ஊழலுக்கு துணை நிற்கிறவராக இன்னொருவரை (யஷ்வந்த் சின்கா) நியமித்து ஊழலை தாராள மயமாக்கிய நிகழ்ச்சியை மட்டுமே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
அது வருமாறு :-

பங்குப் பத்திர ஊழலை மெகா ஊழல் என்று அழைத்தனர் என்றால் செல்லுலர் ஊழலை மஹா மெகா ஊழல் என்றும் 20ஆம் நூற்றாண்டின் இணையற்ற ஊழல் என்றும் வர்ணித்தனர். நல்ல பிரதமர், ‘ஜென்டில்மேன் பாலிடிஷியன்’ என்று சான்றிழ்கள் வழங்கப்பட்ட வாஜ்பாயின் நேரடிப் பார்வையில் நடந்த ஊழல் இது.

1998ஆம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சி கவிழ்க்கப் பட்ட பின்னர் காபந்து சர்க்காரை நடத்திய போது மிகத் துணிச்சலோடு நடத்தப்பட்ட இந்த ஊழலைக் குடியரசுத் தலைவர், தில்லி உயர்நீதிமன்றம், தேர்தல் கமிஷன் என முக்கிய அரசமைப்புச்
சட்ட அங்கங்கள் கண்டித்துள்ளன; ஆட்சேபித்துள்ளன.

ஊழல் மூலம் பிரதமர் வாஜ்பாயிக்கு நெருக்கமானவர்கள், பிரதமர் அலுவலகத்தில் உள்ளவர்கள், பிரதமர் இல்லத்தைச் சேர்ந்தவர்கள் ரூ.300 கோடி அளவுக்கு லஞ்சம் பெற்றனர் என்று அவுட் லுக் பத்திரிகை செய்தி வெளியிட்டது. செல்லுலர் நிறுவனங்களுக்கு லைசென்ஸ் கட்டணச் சலுகை அளிக்கப்பட்டதால் பத்து ஆண்டுகளில் ரூ.50,000 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டது. இப்போது இந்த ஊழலின் அடிப்படைகளைக் காண்போம்.

1994ஆம் ஆண்டு தொலைபேசிக் கொள்கை அறிவிக்கப்பட்டபோது செல்லுலர் மற்றும் அடிப்படைத் தொலைபேசி வசதியை ஏற்படுத்தும் பணிகள் தனியாரிடம் அனுமதிக்கப் பட்டன. இதற்காகப் பகிரங்க டெண்டர்கள் கோரப்பட்டன. வட்டார வாரியாக உயர்ந்த ஒப்பந்தம் கோரியவர்களுக்கு காண்ட்ராக்ட் வழங்கப்பட்டது. சென்னை, மும்பை, தில்லி, கொல்கத்தா ஆகிய பெருநகரங்களில் செல்லுலர் தொலைபேசி வசதி செய்ய பத்து வருட காண்ட்ராக்ட் தரப்பட்டது. ஒவ்வொரு பெரு நகரத்திற்கும் இரண்டு கம்பெனிகளுக்கு காண்ட்ராக்ட் தரப்பட்டது. முதல் மூன்று ஆண்டுகளுக்குக் குறிப்பிட்ட அளவு லைசென்ஸ் கட்டணமும் எஞ்சியுள்ள ஏழு ஆண்டுகளுக்கு வெவ்வேறு கட்டண விகிதங்களும் நிர்ணயிக்கப்பட்டன.

உதாரணமாக, மும்பையில் செயல்படுகின்ற தனியார் தொலைபேசிக்காரர்கள் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது ஆண்டுகளுக்கு முறையே ரூ.3 கோடி, ரூ.6 கோடி, ரூ.12 கோடி லைசென்ஸ் கட்டணம் செலுத்த வேண்டும். நான்காவது ஆண்டு முதல், ஆண்டு ஒன்றுக்கு, ஒவ்வொரு நூறு தொலைபேசிக்கும் ரூ.5 லட்சம் செலுத்த வேண்டும். நான்கு முதல் ஆறாவது ஆண்டுகள் வரை குறைந்த அளவுக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.18 கோடி செலுத்தவேண்டும். ஏழாவது ஆண்டிலிருந்து பத்தாம் ஆண்டு வரை ஓர் ஆண்டுக்குக் குறைந்த அளவு கட்டணம் ரூ.24 கோடியாகும்.

அடிப்படைத் தொலைபேசி வசதிகளைச் செய்து தருகின்ற தனியாரைப் பொறுத்த வரையில், மொத்தமுள்ள பணிகளில் தொலைபேசித் தொடர்புகளில் பத்து சதவிகிதத்தைச் சமூக நல உதவியாகக் கிராமங்களில் செய்து தருவதாக அரசிடம் உறுதியளித்திருந்தனர்.

ஒப்பந்தம் செய்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஒட்டுமொத்தமாக எல்லா தனியார் காண்ட்ராக்டர்களும் லைசென்ஸ் கட்டணத்தைச் செலுத்தவில்லை. வாக்குறுதி அளித்தபடி கிராமப்புறங்களுக்கும் தொடர்பு வசதிகளைச் செய்து தரவில்லை. இந்தக் காண்ட்ராக்டர்கள் தொடர்ந்து லைசென்ஸ் கட்டணம் செலுத்தாததால் உயர்ந்து வந்த கட்டணப் பாக்கி குறித்து இந்தியக் கணக்குத் தணிக்கை அதிகாரி அடுத்தடுத்து கண்டனத்தை வெளியிட்டு வந்தார். தில்லி உயர்நீதி மன்றத்தில் இரண்டு பொதுநல வழக்குகளும் தொடரப்பட்டன.

காண்ட்ராக்டர்கள் குறித்துக் கடும் விமர்சனங்கள் எழுந்ததால் அவர்கள் ஒன்று சேர்ந்து சில சலுகைகளைக் கோரினர். தாங்கள் நஷ்டம் அடைந்து விட்டதாகவும் அதனால் கட்டணப் பாக்கியைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கோரினர்.

கட்டணம் செலுத்துவதற்கான கால அளவில் மாறுதல் செய்ய வேண்டும் என்றும் லைசென்ஸ் கட்டணம் எப்போது முதல் விதிக்கவேண்டும் என்பதில் மாற்றம் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் பாரதி செல்லுலர் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளர் சுனில் மிட்டல் அடிக்கடிப் பிரதமர் அலுவலகத்திற்குச் சென்று வருபவர் என்பதாலும் பிரதமரின் வளர்ப்பு மகளின் கணவரிடம் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாலும் தொலைபேசி காண்ட்ராக்டர்கள் பிரச்சினையைத் தீர்க்கும் பெரும் பணியை அவர் எடுத்துக் கொண்டார்.

இதற்கிடையே காண்ட்ராக்டர்கள் ஒன்று சேர்ந்து தங்களிடையே லஞ்சப் பணத்தைத் திரட்டினர். சலுகைக்கேற்றபடி லஞ்சம் தரத் தயாரானார்கள். தொலைபேசித் தொழிலில் ஈடுபட்டுள்ள எஸ்ஸார் என்ற பெரிய நிறுவனம் உள்துறை அமைச்சர் அத்வானிக்கு நெருக்கமாக இருந்தது என்றும் தெரிகிறது.

தொலைத் தொடர்புத்துறை 1999 செப்டம்பரில் தற்காலிகமாக வாஜ்பாய் பொறுப்பில் இருந்தது. அப்போது தனியார் தொலைத் தொடர்பு ஒப்பந்தக்காரர்களின் வஞ்சகமான கோரிக்கைகளை அமைச்சரவை ‘பரிசீலனை’ செய்தது. அதனைத் தொடர்ந்து, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த்சிங்கைப் பின்னிருந்து இயக்கும் சக்தியாகக் கொண்டு ஒரு தொலைத்
தொடர்புக் குழு அமைக்கப்பட்டது. தனியார் தொலைத் தொடர்பு காண்ட்ராக் டர்களுக்கு ‘உதவி’ செய்வதற்கான வழி வகைகளைக் கண்டுபிடிப்பதுதான் அந்தக் குழுவின் மிகப்பெரிய பணியாகும்.
அந்தக் குழு தனது பணியைச் செய்து கொண்டிருந்த போது ஜக்மோகன் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். புதிய அமைச்சரும் பிரதமர் அலுவலகம் தொடங்கி வைத்த ‘நற்பணியைத்’ தொடர்ந்து நிறைவேற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்ப்பு பொய்த்தது. ஒப்பந்தக் காரர்களின் கட்டணப் பாக்கி ரூ.300 கோடி என்ற அளவில் இருந்தது. ஆனால் அவர்களோ ரூ. 3.5 கோடியைத்தான் லைசென்ஸ் கட்டணமாகச் செலுத்தியிருந்தனர்.

மொத்தத் தொகையில் 20 சதவிகிதத்தைச் செலுத்த வேண்டும் என்று தொலைத் தொடர்புக் குழு கேட்டுக் கொண்டது. இது ஒரு தற்காலிக ஏற்பாடு என்று அட்டர்னி ஜெனரல் சோலி சோரப்ஜி தெரிவித்தார். ஆனால் ஒப்பந்தத்தின் ஷரத்துகளை மாற்ற வேண்டும் என்ற யோசனையை அட்டர்னி ஜெனரல் ஏற்கவில்லை.

1999 ஜனவரி 6ஆம் தேதி சோலி சோரப்ஜி இதுபற்றி எழுதிய குறிப்பில் லைசென்ஸ் தாரர்கள் பெரிய அளவு தொகையைக் கட்டணப் பாக்கியாக வைத்திருந்து விட்டு தவறான எதிர்பார்ப்பால் நிதி நெருக்கடி ஏற்பட்டுவிட்டது என்று கூறிப் பெரிய அளவில் தங்களுக்கு சாதகமான மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று கோருகிறார்கள். இவர்களின் கோரிக்கைகளை ஏற்றால் அரசாங்கத்தின் செயல்பாடுகள் தவறான சமிக்ஞையை - தகவலைப் பரப்பக்கூடியதாக அமைந்துவிடும். கட்டண பாக்கியாளர்களுக்கு உதவுவதாக, ஊக்கம் தருவதாக அரசின் செயல்பாடு அமைந்து விடக்கூடாது என்று தெரிவிக்கப் பட்டிருந்தது.

இந்தச் சலுகைப் பிரச்சினை தொடர்பாகப் பொதுநல வழக்கு தில்லி உயர்நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்த போது ஒப்பந்தக்காரர்களில் ஒருவர் நிருபர்களிடம் ஒரு தகவலை வெளியிட்டார். அதாவது ஜக்மோகன் அவரது பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதற்கு எத்தனை மணி நேரம் இருக்கிறது என்பதை எண்ணிப் பார்த்துக் கொண்டிருக் கிறார் என்பதுதான். அந்தத் தகவலும் தில்லி பத்திரிகையில் செய்தியாக வெளிவந்தது. இச்செய்தி வெளியான அடுத்த நாளே 1999 ஜூன் 8ஆம் தேதி ஜக்மோகன் நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு மாற்றப்பட்டுவிட்டார்.

அதன்பின்தான் தகவல் தொடர்புத் துறையைப் பிரதமர் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டார். தொலைபேசி காண்ட்ராக்டர் களுக்குக் கொண்டாட்டம் அதிகமானது. தனியாரின் கோரிக்கைகளை நிறை வேற்றும் வகையில் புதிய கொள்கையை வரையுமாறு பிரதமர் அலுவலகத்தில் உள்ள செயலாளர் ஒருவர் கேட்டுக் கொள்ளப்பட்டார்.

ஒப்பந்தத்தில் மாறுதல் செய்யக்கூடாது என்று அட்டர்னி ஜெனரல் சோலி சோரப்ஜி கூறியிருந்ததால் அவரது திருத்தப்பட்ட கருத்து இப்போது தேவைப்பட்டது. அதனால் பிரிட்டனில் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்த சோலி சோரப்ஜி வரவழைக்கப்பட்டார். புதிய கொள்கைக்கு ஏற்ற மாற்றுக் கருத்தைத் தரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார். சோரப்ஜியின் இந்தக் குறிப்பு மூலம் மத்திய அரசு தனியாருக்குச் சலுகை தர ஏற்கெனவே ஒப்புக் கொண்டுள்ளது என்ற உண்மை தெரிய வந்தது.

கட்டணத்தைச் செலுத்தியவர்களையும் செலுத்தாத வர்களையும் சமநிலையில் வைத்துப் பார்க்கும் போக்கு தவறானது. இந்தப் போக்குக் காரணமாக ஒழுங்காகக் கட்டணம் செலுத்துபவர்கள் இடையே கட்டணம் செலுத்தும் ஆர்வம் குறைந்துவிட்டது என்று சோரப்ஜி தனது குறிப்பில் தெரிவித்துள்ளார். சோரப்ஜியின் இந்தச் சந்தேகம் சரியானது என்பது நிரூபணமாகிவிட்டது. கோஷிகா உள்பட இரண்டு கம்பெனிகள் 20 சதவிகித பாக்கியையும் செலுத்தவில்லை. இந்தப் பாக்கியைச் செலுத்தியே தீரவேண்டும் என்று அமைச்சர் ஜக்மோகன் வலியுறுத்தினார். ஒப்பந்த நிபந்தனைகளை மாற்றுவதற்கு எதிர்ப்பையும் தெரிவித்தார்.

ஒப்பந்த நிபந்தனைகளை மாற்றுவதற்கு எதிராக ஜக்மோகன் 11 கேள்விகளை எழுப்பினார். அந்தக் கேள்விகள் வருமாறு :-

1. போட்டி முறையில் ஒருவரை ஒப்பந்ததாரராகத் தேர்ந்தெடுத்து அவருடன் ஒப்பந்தம் செய்து கொண்ட பிறகு, அந்த ஒப்பந்த உறுதி மொழிகளைக் கடைப்பிடிக்காமல் இருப்பது சட்டப்படியோ, அரசமைப்புச் சட்டப்படியோ, நிதி வருமான அடிப்படையிலோ, வணிக ரீதியாகவோ, ஒழுக்க ரீதியாகவோ நியாயமான செயலா?

2. அரசுக்குக் கிடைக்க வேண்டிய ரூ.4000 கோடி பாக்கியை வசூலிக்காமல் இருப்பது பற்றிப் பொதுமக்கள், பத்திரிகைகள், நாடாளுமன்றம், ஆடிட்டர் ஜெனரல், கோர்ட் ஆகியோர் என்ன நினைப்பார்கள்?

3. சில கம்பெனிகள் அவற்றின் பங்கு முதலீட்டை விற்று மிகப் பெரிய அளவுக்கு லாபம் அடைந்துள்ளன. அப்படி இருக்கும் போது அவர்களுடைய தொழில் நன்றாக நடைபெற வில்லை என்றால் இது சாத்தியமானதா? அந்தக் கம்பெனியில் சலுகைகளைக் கோரி இப்போது கொடுத்து வருகின்ற நிர்ப்பந்தம் தங்களது பங்கு முதலீட்டை அதிகரித்துக் கொள்வதற்கான தந்திரம் இல்லையா?
4. பெரும்பாலான அடிப்படைக் கட்டுமானப் பணிகளுக் கான முதலீடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் எதிர் காலத்தில் கிடைக்கக்கூடிய வருமானத்தைச் சேர்த்துக் கணக்கிட வேண்டிய நிலையில், சந்தாதாரர்களின் எண்ணிக்கை மிக விரைவாகக் கூடிக் கொண்டே போகின்ற நிலையில் இந்தக் காலகட்டத்தில் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டது என்று அந்தக் கம்பெனிகள் சொல்வது என்ன நியாயம்?

5. லைசென்ஸ்தாரர்கள் உண்மையில் நஷ்டம் அடைந்திருப்பார்களானால் அவர்களில் ஒருவர்கூட லைசென்சைத் திருப்பித்தர முன்வராதது ஏன்? ஒரு தொழில் முயற்சியில் நஷ்டமடைகிற யாராக இருந்தாலும் அந்தத் தொழிலைத் தொடர்ந்து செய்து நஷ்டத்தைப் பெருக்கிக் கொண்டே இருப்பார்கள் என்று சொல்வது அறிவுக்குப் பொருத்தமாக இருக்கிறதா?

6. தொழில் லாபமாக இல்லை என்றால் புதிய லைசென்ஸ்தாரர்களையும் டெலிலிங்க் 1998 மார்ச்சிலும், ஸ்ரீனிவாஸ் செல்காம் 1998 மே-யிலும் செல்லுலார் வசதித் தொழிலில் ஈடுபட முன் வந்திருப்பது எப்படி?

7. லைசென்ஸ்தாரர்கள் எதிர்பார்த்ததை விட கணக்கிட்டதைவிடக் கூடுதல் லாபம் பெற்றிருந்தார்கள் என்றால் தங்கள் லாபத்தை அரசிடம் தரத் தயாராக இருந்திருப்பார்களா?

8. தனியார் துறைகளின் சுதந்திர வர்த்தகத்தை ஆதரிப்பவர்கள் எப்படி அரசின் தலையீட்டை எதிர் பார்க்கிறார்கள்?

9. ஒவ்வொரு கம்பெனிக்கும் தனித்தனியே வெவ்வேறு வட்டாரங்கள் செயல்பாட்டுக்காகப் பிரித்துக் கொடுக்கப் பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு கம்பெனியும் தனித்தனியே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நிலையில் அவர்கள் ஒன்றுபட்டு ஒரே வகையான கோரிக்கையை எழுப்புவது நியாயமா?

10. லைசென்ஸ் விதிமுறைகள் உறுதியாகப் பின்பற்றப் படாவிட்டால் அது ஒரு தவறான முன்னுதாரணமாக ஆகிவிடாதா? வேறு துறைகளில் உள்ள தொழில் முனைவர்களும் ஒப்பந்த விதிகளை மீறும் வகையில், இதுபோன்ற கோரிக்கைகளை எழுப்புவார்களே? ஒப்பந்த நிபந்தனை களைச் சாதாரணமாக எடுத்துக் கொள்வதும் மீறுவதும் நடைமுறை ஆகிவிடாதா?

11. சந்தைப் பொருளாதாரத்தை ஏற்றுக் கொண்டுள்ள எந்த நாட்டிலாவது திறந்த ஒப்பந்தம் மூலம் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் தலையீடு நடைபெற அனுமதித்துள்ளனரா?

ஐக்மோகனின் இந்த 11 முக்கியமான கேள்விகள் தொலைபேசி ஒப்பந்ததாரர்களுக்கும் பிரதமர் அலுவலகத்தில் உள்ள காப்பாளர்களுக்கும் மிகுந்த சிக்கலைத் தந்தன. தங்கள் விருப்பப்படி ஆடவேண்டும் என்று ஜக்மோகன் கேட்டுக் கொள்ளப்பட்டார். ஆனால் அவர் மசியவில்லை. இதற்கு மாறாக 20 சதவிகிதப் பாக்கியைச் செலுத்தத் தவறிய இரண்டு கம்பெனிகளின் லைசென்சை ஜக்மோகன் ரத்து செய்து விட்டார். பெருநகரங்களில் உள்ள எட்டு மிகப்பெரிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டு வந்தார். இவைகளில் 1999 ஜனவரி 31ஆம் தேதி வரை பார்தி 28.74 கோடியும் பிபிஎல் 26.45 கோடியும், ஸ்டெர்லிங் 19.73 கோடியும் ஹட்சின்சன் 29.29 கோடியும் பாக்கி வைத்திருந்தன.

அமைச்சரின் உறுதியான நிலை பிரதமர் அலுவலகத்தில் உள்ளவர்களுக்கும் தொலைபேசி காண்ட்ராக்டர்களுக்கும் ஒரு தலைவலியாக உருவெடுத்துவிட்டது. இந்நிலையில் தான் தொலைத்தொடர்புதுறை அமைச்சர் பொறுப்பி லிருந்து, ஜக்மோகனை நீக்க நிர்பந்தங்களை உருவாக்கத் தொடங்கினர்.

அமைச்சரவை கூடிப் புதிய கொள்கைக்கு ஒப்புதலும் வழங்கிவிட்டது. தனியார் காண்ட்ராக்டர்கள் என்ற மிகப் பெரிய சுறா மீன்களின் முன்பு மத்திய அரசு சரணடைந்தது. இதற்கிடையே நிதித்துறை அமைச்சகத்தின் குறிப்பு, அமைச்சரவையின் ஒவ்வொரு நடவடிக்கையும் ஆட்சேபித்தது. ஆனால் அரசு ஆறுமாத காலத்திற்கு லைசென்சைப் புதுப்பித்ததோடு அக்கால கட்டத்திற்கான லைசென்ஸ் கட்டணத்தையும் தள்ளுபடி செய்தது. இந்த வகையில் அரசு கஜானாவிற்கு ரூ.400 கோடி இழப்பு ஏற்பட்டது. இதன் மூலம் பிரிட்டனைச் சேர்ந்த பார்த்த சிவசங்கரன் மற்றும் ஸ்விஸ் நிறுவனத்தைச் சேர்ந்த எஸ்ஸார், ஹாங்காங்கைச் சேர்ந்த ஹட்சின்சன் மற்றும் பிபிஎல் ஆகியவை பயன்பெற்றன.

தொலைத் தொடர்புத் துறையின் மொத்தப் பணப் புழக்கம் ரூ.12,000 கோடியாகும். இதில் 60 சதவிகிதம் 4 பெருநகரங்களின் தொலைபேசி காண்ட்ராக்டர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. லைசென்ஸ் கட்டணம் ஒழிக்கப்பட்டு லைசென்ஸ் தாரர்கள் வருவாய்ப் பங்கீட்டு முறைக்கு மாறிக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர். செயல்பட ஆரம்பித்த பின்னர் நான்காம் ஆண்டில் ஒவ்வொரு காண்ட்ராக்டரும் ஒரு சந்தாதாரருக்கு ரூ.6023 தரவேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது. இதன் மூலம் நான்காம் ஆண்டில் ரூ.300 கோடி நஷ்டம் என ஆரம்பித்து, பத்தாவது ஆண்டில் ரூ.50,000 கோடி வரை அரசுக்கு நஷ்டம் ஏற்படும் நிலை உருவாக்கப்பட்டது.

கிராமப்புறங்களில் தொலைபேசி உறுதி செய்து தருகிற சமூக நலச் செயல்பாட்டுத் திட்டத்தையும் ரத்து செய்து மத்திய அரசு தனியாருக்கு உதவியாகக் கரிசனத்துடன் செயல்பட்டுள்ளது. இந்நிலை தொலைத் தொடர்புத் துறை நஷ்டத்தையும் தனியார் காண்ட்ராக்டர்கள் கொள்ளை லாபத்தையும் அடையும் நிலையை உருவாக்கியுள்ளது. சோழியன் குடுமி சும்மா ஆடுமா?

தனியாரைக் காப்பாற்றும் வகையில் செய்யப்படும் முயற்சி தவறு என்று குடியரசுத் தலைவர் தந்த யோசனையை மீறி மூன்று ஆண்டுகள் கட்டாமல் இருந்த கட்டணப் பாக்கியையும் காபந்து சர்க்காராக இருந்த பா.ஜ.க. அரசு ரத்து செய்திருக்கிறது. இந்தப் பிரச்சினை குறித்து இடதுசாரிக் கட்சிகள் குடியரசுத் தலைவரைச் சந்தித்து சில சான்று ஆதாரங்களையும் வழங்கினார்கள். இதையடுத்து குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன், வேறு துறைக்கு மாற்றப்பட்ட ஜக்மோகனை அழைத்து இப்பிரச்சினை குறித்து கேட்டறிந்ததாகத் தெரிகிறது.

தனியாருக்கு மூன்று ஆண்டுக் கட்டணத்தை ரத்து செய்யக்கூடாது என்று தெரிவித்து குடியரசுத் தலைவர் கடிதம் எழுதியுள்ளார் என்றும் தெரிகிறது. இக்கடிதம் நிராகரிக்கப் பட்டது என்ற விவரம் சில பத்திரிகைகளில் வெளியானது. அப்படிச் செய்ததின் மூலம் அதிகாரபூர்வ மாகக் குடியரசுத் தலைவருக்குப் பதில் கடிதம் எழுதாமல் அவரை காபந்து சர்க்கார் அவமதித்துவிட்டது.

மொத்தத்தில் இந்த விவகாரத்தில் பல்லாயிரம் கோடி லஞ்சமாகப் பெறப் பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஜக்மோகனை மாற்றியது போல்தான் இப்பிரச்சினையில் ஒத்துழைப்புத் தராத நிதித்துறைச் செயலாளரும் மாற்றப்பட்டார் என்ற சந்தேகம் உருவெடுத்தது.

மக்களவைத் தேர்தலுக்கு முன்பு தேர்தல் நன்னடத்தை விதிமுறைக்கு மாறாக இதுபோன்ற சலுகையை அளித்துத் தேர்தலுக்குப் பெருமளவு நிதியை பா.ஜ.க. திரட்டுகிறது என்ற புகாரை அடுத்து தேர்தல் கமிஷனும் அமைச்சரவை செயலாளருக்கு இப்பிரச்சினை குறித்து கடிதத்தை அனுப்பியது.

இது குறித்துக் கேள்வி எழுப்பத் தேர்தல் கமிஷனுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்று பிரதமர் அலுவலகம் கேள்வி எழுப்பியது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ‘ஆர்கனைசர்’ பத்திரிகையும் தேர்தல் கமிஷனைக் கண்டித்து முழுப்பக்கக் கட்டுரையை வெளியிட்டது.

தனியார் தொலைபேசி உரிமையாளர்களுக்கு உதவியது சட்டப்படி சரி அல்லது தவறு என்பதைப் பொதுமக்களும் நாடாளுமன்றமும் தான் தீர்மானிக்க வேண்டும். அது தேர்தல் கமிஷன் அக்கறை காட்ட வேண்டிய விஷயமல்ல என்று ‘ஆர்க்கனைசர்’ எழுதியது. ஆனால் பா.ஜ.க.வோ இப்பிரச்சினை குறித்துப் பொதுமக்களிடமோ, ராஜ்யசபாவிலோ விவாதிக்க முன்வரவில்லை. இவ்விஷயத்தில் பா.ஜ.க. அரசு அவசரம் காட்டியது ஏன் என்று தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி வரியவா கேள்வி எழுப்பினார்.

அட்டர்னி ஜெனரலின் ஆலோசனையும் அதைக் கேட்டுச் செயல்படவேண்டும் என்று பிரதமர் வாஜ்பாய் அனுப்பிய கோப்பின் நகலும் பத்திரிகைகளுக்குக் கிடைத்துவிட்டன. அட்டர்னி ஜெனரலின் யோசனையை வாபஸ் பெறச் செய்தது ஏன்? கோர்ட்டில் தனது யோசனைக்கு மாறாக சோரப்ஜி வாதிட்டது ஏன்? இடையில் நடந்தது என்ன என்பதுதான் இந்த 50 ஆயிரம் கோடி ஊழல் பற்றிய கேள்விகள். என்று தலைசிறந்த எழுத்தாளரான தி.சிகாமணி தம்முடைய ‘ஊழலோ ஊழல்’ என்ற புத்தகத்தில் பா.ஜ.க. ஆட்சி காலத்து ஊழல்களை விரிவாக விளக்கி குறிப்பிட்டுள்ளார்.

- டெகல்கா அம்பலப்படுத்திய ராணுவத்துறை ஊழல்.

- யூ.டி.ஐ. நெருக்கடியில் பிரதமர் அலுவலகமே ஈடுபட்ட ஊழல்.

- கார்கில் போரின் போது ஆயுதம் வாங்கியதில் ஊழல்.

- சவப்பெட்டிகள் வாங்கியதிலும் ஊழல்

- பெட்ரோல் பங்கு ஒதுக்கீட்டில் ஊழல்

என்று பா.ஜ.க. ஆட்சி காலத்து ஊழல்களை அடுக்கி கொண்டே போகலாம். அப்போதெல்லாம் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான பா.ஜ.க. அமைச்சர்கள் பதவி விலக்கப் பட்டார்களா?

இராணுவத்துக்கு ஆயுதம் வாங்கியதில் ஊழல் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஜார்ஜ் பெர்ணான்டஸ் மட்டும் பதவி விலகினார். அவரையும் மூன்றே மாதங்களில் விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே ஊழல் குற்றச் சாட்டுக்கு ஆளான அதே இராணுவத் துறையில் மீண்டும் அமைச்சர் ஆக்கியதுதான் பா.ஜ.க. ஆட்சியின் ஊழல் வரலாறு.

இந்த லட்சணத்தில் ஆ.ராசா பதவி விலக்கப்பட வேண்டும் என்று பொன். இராதாகிருஷ்ணன் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறார்.

- தங்களது ஆட்சியில் இமாலய ஊழல்களை புரிந்த இவர்களுக்கு போராட்டம் ஒரு கேடா.

Read more...

  ©Template by Dicas Blogger.

TOPO