#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Monday, November 15, 2010

(வீடியோ) மக்கள் மன்றத்தில் நிரூபிப்பேன்: ஆ.ராசா பேட்டி

சென்னையில் இருந்து டெல்லி திரும்பிய அமைச்சர் ராசா, பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்து தனது பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்தார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆ.ராசா, திமுக தலைவர் கலைஞர் கேட்டுக்கொண்டதை அடுத்து நான் என் பதவியை ராஜினாமா செய்திருக்கிறேன். அதற்காக என் மீதான குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டே என்று அர்த்தமல்ல. நான் எந்த தவறும் செய்யாதவன்.

அரசுக்கு ஏற்பட்டுள்ள தர்மசங்கடமான நிலையை தவிர்க்கவே ராஜினாமா செய்தேன். எதிர்க்கட்சிகளால் எந்த வித இடையூறும் இன்றி நாடாளுமன்றம் அமைதியாக நடைபெறவேண்டும் என்று ராஜினாமா செய்துவிட்டேன். ஆனால் நான் குற்றமற்றவன் என்பதை மக்கள் மன்றத்தில் நிரூபிப்பேன்.


இந்த துறைக்கு நான் பொறுப்பேற்றுக்கொண்டது முதல் உண்மையாக உழைத்திருக்கிறேன். என் முயற்சியால்தான் வாடிக்கையாளர்கள் 70 கோடியை தாண்டியிருக்கிறார்கள். நான் இந்த தேசத்திற்கு என் கடமையை சரியாக செய்திருக்கிறேன் என்பதை கூறிக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்தார்

0 comments:

  ©Template by Dicas Blogger.

TOPO