#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Saturday, August 14, 2010

வேதாந்திரி மகரிஷி அஞ்சல் தலை வெளியீட்டு விழாவில் அமைச்சர் ஆ.ராசா பேச்சு

சென்னை, ஜவஹார்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று வேதாத்திரி மகரிஷி நூற்றாண்டு மற்றும் சிறப்பு அஞ்சல்தலை வெளியீட்டு விழா நடைபெற்றது. வேதாத்திரி மகரிஷி உருவம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலையை முதலமைச்சர் கருணாநிதி வெளியிட, மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ.ராசா பெற்றுக்கொண்டார்.


இந்த விழாவில் அமைச்சர் ஆ.இராசா ஆற்றிய சிறப்புரை:

தத்துவஞானி வேதாந்தி மகரிஷி நூற்றாண்டு விழாவின் தலைவர் தமிழர்களின் தனிப்பெரும் தலைவர் கலைஞர் அவர்களே... இந்த விழாவில் முன்னிலை உரையாற்றிய அருள் செல்வர் பொள்ளாச்சி மக்கலிங்கம் அவர்களே... மதிப்பிற்குரிய அண்ணண் டாக்டர் பாலசுப்பிரமணி அவர்களே..., மேடையில் வீட்டிருக்கின்ற சான்றோர் பெருமக்களே...., விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்துள்ள அமைச்சர் பெருமக்களே.... அனைவருக்கும் வணக்கம்.

நாட்டுக்கு தன்னை அர்பணித்து கொண்ட அரசியல் தலைவர்கள், இந்தியாவின் பண்பாட்டு கலாசாரத்தின் அடையாள சின்னங்களாக விளங்கின்ற தொல்நிறுவனங்கள். இவைகளை நினைவூட்டுகின்ற விதமாகவும் பெருமை சேர்க்கின்ற விதமாகவும் தலைவர்களுக்கும் நிறுவனங்களுக்கும் அஞ்சல் தலை வெளியீட்டு விழாக்களை இந்திய அஞ்சல் துறை நடத்தி வருகிறது என்பதை அறிவீர்கள்.

அந்த வகையில் இந்திய தத்துவ மரபு என்ற பொருளில் இந்திய தத்துவத்துக்கும் மரபியலுக்கும் வலுசேர்க்கும் வகையில் பல்வேறு தத்துவங்களை வழங்கி இருக்கின்ற பல்வேறு தலைவர்களுக்கும் கடந்த காலங்களில் அஞ்சல் தலையை இந்திய அஞ்சல் துறை வெளியிட்டு மகிழ்ந்திருக்கிறது. இந்திய சிந்தனை மரபு போக்கில் வேதாந்தம் - சித்தாந்த என்ற இரண்டு பிரிவுகளில் வேதாந்தங்களை ஏற்றுக்கொண்டிருக்கின்ற வேதாந்தங்களாக இருந்தாலும், சாங்கியமாக இருந்தாலும், யோகமாக இருந்தாலும், பவுத்தமாக இருந்தாலும், ஜெயினமாக இருந்தாலும், இவைகளுக்கெல்லாம் மதிப்பளிக்க வேண்டும் என்ற உன்னத கொள்கை இந்திய அஞ்சல்துறைக்கு உண்டு. அந்த கொள்கையோடு, இந்த அஞ்சல் தலையை இந்திய அஞ்சல் துறை வழங்கியிருக்கிறது. இதில் சிறப்பு என்னவென்றால், வேதாந்திரி மகரிசிக்கு அஞ்சல் தலையை வெளியிடுகின்ற வாய்ப்பை பகுத்தறிவு தத்துவத்தின் தலைவர் கலைஞர் பெற்றிருக்கிறார்.

இங்கே பேசிய நிறுவன முன்னணி தலைவர்களெல்லாம் இந்த தத்துவம் கடவுள் கொள்கை சாராதது என்று குறிப்பிட்டு சொன்னார்கள். பெயரள்ளவோ கண்ணுக்குதான் கண்ணாடி. ஆனால், மூக்கு கண்ணாடி என்றாகிவிட்டது என ஒரு கவிஞன் சொன்னதை போல, வேதங்களை சார்ந்திருந்தாலும் சாராவிட்டாலும் பெயரென்னவொ வேதாந்திரி மகரிசி என ஆகிவிட்ட காரணத்தாலும் அது இந்திய பண்பாட்டு கூறுகளில் ஒன்றாக ஆகவேண்டும் என்ற அவசியத்தினாலும் இந்த அஞ்சல் தலை வெளியிடப்படுகிறது.

உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பே ஆலயமாம், தெள்ளத் தெளிந்தார்க்கு ஜீவன் சிவலிங்கம், கல்லபுலனைந்தும் காலா மணி விளக்கே என்ற தத்துவத்தை உலகிற்கே முன்மொழிந்தவர்கள் தமிழர்கள். அந்த தத்துவத்தை சார்ந்து இன்றைக்கு மகரிசிக்கு அஞ்சல் தலையை தலைவர் கலைஞர் வெளியிட்டிருக்கிறார்.

அத்வைதம் பெரிதா துவைதம் பெரிதா? வசிஸ்டா துவைதம் பெரிதா? என்ற ஆராய்ச்சிக்கு நான் போக விரும்பவில்லை. பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்று என்கிறது ஒரு தத்துவம். பரமாத்மாவும் ஜீவாத்மாவும் வெவ்வேறு என்கிறது ஒரு தத்துவம். சில நேரங்களில் பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்றாகவும் சில நேரங்களில் விலகி இருப்பதற்கும் பெயர் இன்னொரு ஒரு தத்துவம். எனவே அந்த தத்துவங்களுக்குள்ளே ஒற்றுமை இல்லாத போது, நான் மனிதர்களின் ஒற்றுமைக்காக கவலைபட்டு கொண்டிருக்கிற ஒருவன், அந்த தத்துவங்களை பற்றி கவலைப்படவில்லை என்று சொன்ன தலைவர்தான் நமது தலைவர் கலைஞர். அவர் இன்றைக்கு மனிதர்கள் புரிந்துகொள்ளவேண்டிய தத்துவத்தின் அடையாளமாக திகழ்ந்த மகரிசி அவர்களுக்கு அஞ்சல் தலையை வெளியிட்டிருக்கிறார்கள்.

அன்புதான் கடவுள் என்று சொன்னாலும், மனிதனுக்கு மனிதன் இடையே காட்டும் இரக்க உணர்வுதான் கடவுள் என்று சொன்னாலும், கள்ளமில்லா உள்ளம் அதுதான் கடவுளின் இல்லம் என்று சொன்னாலும், ஏழையின் சிரிப்பிலே காண்போம் என்று அண்ணா சொன்னாரே அதுதான் கடவுள் என்று சொன்னாலும், அப்படி பட்ட கடவுளோடு எனக்கு சமரசம் உண்டு என்று சொன்னவர் கலைஞர். அவரின் கரங்களால் இந்த அஞ்சல் தலை வெளியிடப்பட்டிருக்கிறது. உலக அமைதிக்கான நிகழ்ச்சி இது.

தொலைதொடர்பு வளர்ந்திருக்கிறது; தகவல் தொழில்நுட்பம் இன்றைக்கு வளர்ந்திருக்கிறது. இந்த வளர்ச்சியில் தொலைவிலுள்ள துருவங்கள் அருகே வந்துவிட்டன. கூப்பிட முடியாத தூரத்தில் இருக்கும் துருவங்கள் இணைந்து விட்டன. ஆனால் அண்டை வீட்டுக்காரன் அந்நியப்பட்டு போய் விட்டான். எனவே அமைதி இல்லை என்று ஒரு புது கவிஞன் சொன்னான். அந்த அமைதி வருவதற்கு இந்த அஞ்சல் தலை வெளியீடு பயன்படும் என்ற நம்பிக்கையில், தலைவர் கலைஞர் அவர்களை வணங்கி விடைபெறுகின்றேன்.

Read more...

Thursday, August 12, 2010

ஸ்பெக்ட்ரம் விவகாரம் : தம்பிதுரைக்கு அமைச்சர் ஆ.ராசா பதில்

மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, 3 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஏல முறையில் ஒதுக்கீடு செய்ததில் 70 ஆயிரம் கோடி வசூலாகி இருக்கிறது எனவும், 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை குறைந்த விலைக்கு அனுமதித்ததன் மூலம் அரசுக்கு 1 லட்சம் கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும் அதிமுக எம்.பி. தம்பிதுரை குற்றம் சாட்டினார்.


தம்பிதுரையின் குற்றச்சாட்டை மறுத்து பேசிய மத்திய தொலை தொடர்புத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஆ.ராசா, ’’பாஜக ஆட்சி நடைபெற்ற கடந்த 1999-ஆம் ஆண்டில் இருந்தே 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு ஏல முறையில் நடைபெறவில்லை. தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில்தான் ஒதுக்கீடு நடைபெற்றது. டிராய் அமைப்பின் சமீபத்திய பரிந்துரையில்கூட ஏல முறையை பரிந்துரைக்கவில்லை. 3 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு ஏல நடைமுறைகள், கடந்த மே மாதம் 19-ஆம் தேதியுடன் முடிவடைந்தது” என்று குறிப்பிட்டார்.

”பொதுத்துறை நிறுவனங்களான பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல். ஆகியவற்றுக்கு அதிக பட்ச ஏலத்தொகைக்கு சமமாக செலுத்தவேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்கூட்டியே ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதன்படி எம்.டி.என்.எல். நிறுவனம் டெல்லி மற்றும் மும்பை 3ஜி சேவையை ஏற்கனவே தொடங்கிவிட்டது. பி.எஸ்.என்.எல். நிறுவனம் 463 நகரங்களில் தனது சேவையை தொடங்கி உள்ளது. ஏலத்தில் எடுத்த நிறுவனங்கள், தங்கள் சேவையை தொடங்கியதும் 3ஜி சேவை கட்டணமும் குறையத்தொடங்கும். இரண்டு அலைவரிசைகளுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு என்னவென்றால், 2 ஜி அலைவரிசை குரல் சேவைக்கும், 3ஜி அலைவரிசை வீடியோ மற்றும் புள்ளிவிவர பரிமாற்ற சேவைக்கும் பயன்படுத்தப்படுகிறது’’ என்றும் அமைச்சர் ஆ.இராசா தெரிவித்தார்.

Read more...

Saturday, August 07, 2010

செல்போன்களில் வரும் தேவையற்ற அழைப்புகளை தடுக்க நடவடிக்கை : அமைச்சர் ஆ.ராசா உத்தரவு

புதுடெல்லி:


செல்போன்களில் வரும் தேவையற்ற அழைப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தொலை தொடர்பு துறை செயலாளருக்கு மத்திய அமைச்சர் ஆ.ராசா உத்தரவிட்டுள்ளார்.

செல்போன்களை வைத்திருப்பவர்கள். முக்கியமான வேலையில் இருக்கும்போது இன்சூரன்ஸ் வேண்டுமா?, கார் வேண்டுமா?, நிலம் வாங்குகிறீர்களா? என யாராவது பேசி தொந்தரவு செய்கின்றனர். இதுபோல, எண்ணற்ற எஸ்.எம்.எஸ். தகவல்களும் வருவது வழக்கம். சதாரண மக்கள் அனைவரும் இதை சகித்துக் கொண்டுள்ளனர். ஆனால், மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கே அத்தகைய அனுபவம் ஏற்பட்டது.

விலைவாசி பிரச்சினையால் பாராளுமன்றம் முடங்கியதால் அது குறித்து எதிர்க்கட்சி தலைவர்களுடன் திங்கள்கிழமையன்று காலையில் விவாதித்துக் கொண்டு இருந்தார். அப்போது, அவருடைய செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசியவர், வீட்டு கடனுதவி வேண்டுமா? என கேட்டார். இதனால், பிரணாப் முகர்ஜி கடுமையாக ஆத்திரம் அடைந்தார். எனினும், `இப்போது முக்கிய கூட்டத்தில் இருக்கிறேன். வேண்டாம்' என தெரிவித்தார். அவருடைய கோபமான தோற்றத்தை பார்த்து மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நிதி அமைச்சரிடமே வீட்டுக் கடன் வேண்டுமா? என கேட்டது போலவே, மத்திய அமைச்சர் அம்பிகா சோனி, பாரதிய .ஜனதா கட்சியின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடு, பிஜு ஜனதா தளம் எம்.பி. கலிகேஷ், காங்கிரஸ் எம்.பி. ரஷீத் ஆல்வி என பல்வேறு கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் எம்.பி.க்களும் பாதிக்கப்பட்டதாக புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து, வேண்டாத தொலைபேசி அழைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு தொலைத் தொடர்பு செயலாளர் பி.ஜே.தாமசுக்கு மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசா கடிதம் அனுப்பினார்.

அதில், ”உற்பத்திப் பொருட்கள் மற்றும் சேவைகள் போன்றவை டெலி மார்க்கெட்டிங் மூலமாக வழங்குவது, தற்போதைய காலகட்டத்தில் அதிகமாக இருக்கிறது. இதன் விளைவாக, தொலைபேசி வாடிக்கையாளர்களுக்கு தொந்தரவும், அசவுகரியமும் ஏற்படுகிறது. ஒவ்வொரு செல்போன் வாடிக்கையாளருக்கும் தேவையற்ற அழைப்புகள் வராமல் இருக்க தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் கண்காணித்து வருகிறது. எனினும், இத்தகைய தேவையற்ற அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ். தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. எனவே, இது தொடர்பாக அவசர கூட்டத்தை கூட்டி, தேவையற்ற அழைப்புகளை உடனடியாக தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்”. - என்று அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

Read more...

Tuesday, August 03, 2010

ஊட்டியில் ரூ.50 கோடியில் தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி பூங்கா: மத்திய அமைச்சர் ஆ.ராசா தகவல்

கோவை:


நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ரூ.50 கோடி செலவில் உலகத்தரம் வாய்ந்த தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி பூங்கா அமைக்கப்படும் என்று மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் .ராசா கூறினார்.

கோவை பீளமேட்டில் ரூ. 380 கோடி மதிப்பில் கட்டப்பட்ட "டைடல் பார்க்' பிரமாண்ட கட்டடத்தை தமிழக முதலமைச்சர் கருணாநிதி திங்கட்கிழமை மாலை திறந்து வைத்தார். இந்த விழாவுக்கு துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்றார். மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசா, மாநில தொழில்நுட்பத் துறை அமைச்சர் பூங்கோதை, தமிழக அரசின் தலைமை செயலாளர் சிறீபதி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

விழாவி்ல் பேசிய மத்திய அமைச்சர் ஆ.இராசா, ”மத்திய தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சராக பணியாற்ற வாய்ப்பு வழங்கியதற்காக முதலில் முதலமைச்சருக்கு நான் நன்றி கூறவே விரும்புகிறேன். கொங்கு மண்டலத்தில் தலைவர் கலைஞரின் ஆட்சி களத்திலும், அரசியல் களத்திலும் பதிவான பதிவுகள் எத்தனையோ இருந்தாலும், இந்த மாவட்டத்திற்கு இந்த தகவல் தொழில்நுட்ப பூங்காவை தந்த முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவில் நான் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக பொறுப்பு ஏற்றபோது, மத்திய அரசின் சார்பில் ஒரு தகவல் தொழில் நுட்ப திட்டம் வடிவமைக்கப்பட்டது. இந்த திட்டத்தை இந்தியாவில் எந்த மாநிலத்தில் நிறைவேற்றலாம் என்றபோது எந்த மாநிலத்தில் அதிகமான தொழில்நுட்ப பூங்காக்கள் உள்ளதோ? அதிலும் எந்த மாவட்டத்தில் அதிக அளவு தகவல் பரிமாற்றம், -கவர்னஸ் இருகிறதோ? அங்கு அமைக்கலாம் என்றபோது, அது தானாகவே தமிழ்நாடு பக்கம் வந்தது. அதிலும் இந்த மாவட்டத்தில் அமைத்து இருப்பது மிகவும் சிறப்பு. மேலும் இந்தியாவில் உள்ள அனைத்து தகவல் தொழில்நுட்பபூங்காக்களையும் இணைத்து இதன்காரணமாக உலகத்தரம் வாய்ந்த ஒரு ஆராய்ச்சி மையத்தை இந்தியாவில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த ஆராய்ச்சி மையம் ரூ.50 கோடி செலவில் ஊட்டியில் அமைக்கப்பட உள்ளது. அந்த மையத்தையும் நீங்கள் தான் திறக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

Read more...

தி.மு.க. ஒரு சமுதாய இயக்கம்: கலைஞர்

திராவிட முன்னேற்ற கழகம் என்பது ஒரு அரசியல் இயக்கம் மாத்திரம் மட்டும் அல்ல. அது ஒரு சமுதாய இயக்கம் என்று கோவையில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் கலைஞர் தெரிவித்தார்.


"டைடல் பார்க்' கை திறந்து வைப்பதற்காக தனி விமானம் மூலம் கோவைக்கு வந்த முதலமைச்சருக்கு விமான நிலையத்தில் இருந்து விழா நடைபெற்ற இடம் வரை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சாலையின் இரு புறங்களிலும் வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. ஏராளமான தொண்டர்கள் மேளம் கொட்டினார்கள்.

பிறகு மாலை 6.00 மணிக்கு கோவை வ.உ.சி., பூங்கா மைதானத்தில் நடந்த தி.மு.க.,வின் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் கலைஞர் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், யாராலும் நம்மை வீழ்த்த முடியாது. நாம் வீழ்த்தப்பட்டாலும் மீண்டும் எழக்கூடிய ஆற்றல் பெற்றவர்கள். திராவிட முன்னேற்ற கழகம் என்பது ஒரு அரசியல் இயக்கம் மாத்திரம் மட்டும் அல்ல. அது ஒரு சமுதாய இயக்கம். திராவிட முன்னேற்ற கழகம் நடத்துவது அரசியல் நிகழ்ச்சிகள் அல்ல. சரித்திர சுவடுகள். வரலாற்று ஏடுகள். அந்த வரலாற்று ஏடுகளிலேதான், கடந்த மாதம் அந்த ஏடு செம்மொழி ஏடாக இங்கே வெளிவந்தது. அந்த ஏடு மீண்டும் அரசியல் ஏடாக, திராவிடத்தை தட்டி எழுப்புகின்ற ஏடாக, இன்றைக்கு உங்களுக்கு படிக்க கொடுக்கப்பட்டு இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

இந்த பொதுக்கூட்டத்தில், துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் ஆ.ராசா, மாநில அமைச்சர் பொன்முடி, தி.மு.க.வில் அண்மையில் இணைந்த முத்துசாமி, சின்னசாமி உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.

முன்னதாக, மாலை 4 மணிக்கு கோவை பீளமேட்டில் நடந்த விழாவில் ரூ. 380 கோடி மதிப்பில் கட்டப்பட்ட "டைடல் பார்க்' பிரமாண்ட கட்டடத்தை தமிழக முதலமைச்சர் கருணாநிதி வைத்தார். இந்த விழாவுக்கு துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்றார். மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசா, மாநில தொழில்நுட்பத் துறை அமைச்சர் பூங்கோதை, தமிழக அரசின் தலைமை செயலாளர் சிறீபதி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

விழாவி்ல் பேசிய முதல்வர் கலைஞர், அரசியல் ஆனாலும், கலைத்துறையானாலும் என்னை வளர்த்தது கோவை என்று குறிப்பிட்டார். மேலும், தமிழகத்தில் அரசு விழாக்கள் எங்கு நடந்தாலும் ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் தமிழில் பேச வேண்டும் என்றும், தமிழ் தெரியாத வடமாநில அதிகாரிகள் தமிழில் பேச பயிற்சி எடுத்து கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

Read more...

  ©Template by Dicas Blogger.

TOPO