#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Tuesday, August 03, 2010

ஊட்டியில் ரூ.50 கோடியில் தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி பூங்கா: மத்திய அமைச்சர் ஆ.ராசா தகவல்

கோவை:


நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ரூ.50 கோடி செலவில் உலகத்தரம் வாய்ந்த தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி பூங்கா அமைக்கப்படும் என்று மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் .ராசா கூறினார்.

கோவை பீளமேட்டில் ரூ. 380 கோடி மதிப்பில் கட்டப்பட்ட "டைடல் பார்க்' பிரமாண்ட கட்டடத்தை தமிழக முதலமைச்சர் கருணாநிதி திங்கட்கிழமை மாலை திறந்து வைத்தார். இந்த விழாவுக்கு துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்றார். மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசா, மாநில தொழில்நுட்பத் துறை அமைச்சர் பூங்கோதை, தமிழக அரசின் தலைமை செயலாளர் சிறீபதி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

விழாவி்ல் பேசிய மத்திய அமைச்சர் ஆ.இராசா, ”மத்திய தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சராக பணியாற்ற வாய்ப்பு வழங்கியதற்காக முதலில் முதலமைச்சருக்கு நான் நன்றி கூறவே விரும்புகிறேன். கொங்கு மண்டலத்தில் தலைவர் கலைஞரின் ஆட்சி களத்திலும், அரசியல் களத்திலும் பதிவான பதிவுகள் எத்தனையோ இருந்தாலும், இந்த மாவட்டத்திற்கு இந்த தகவல் தொழில்நுட்ப பூங்காவை தந்த முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவில் நான் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக பொறுப்பு ஏற்றபோது, மத்திய அரசின் சார்பில் ஒரு தகவல் தொழில் நுட்ப திட்டம் வடிவமைக்கப்பட்டது. இந்த திட்டத்தை இந்தியாவில் எந்த மாநிலத்தில் நிறைவேற்றலாம் என்றபோது எந்த மாநிலத்தில் அதிகமான தொழில்நுட்ப பூங்காக்கள் உள்ளதோ? அதிலும் எந்த மாவட்டத்தில் அதிக அளவு தகவல் பரிமாற்றம், -கவர்னஸ் இருகிறதோ? அங்கு அமைக்கலாம் என்றபோது, அது தானாகவே தமிழ்நாடு பக்கம் வந்தது. அதிலும் இந்த மாவட்டத்தில் அமைத்து இருப்பது மிகவும் சிறப்பு. மேலும் இந்தியாவில் உள்ள அனைத்து தகவல் தொழில்நுட்பபூங்காக்களையும் இணைத்து இதன்காரணமாக உலகத்தரம் வாய்ந்த ஒரு ஆராய்ச்சி மையத்தை இந்தியாவில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த ஆராய்ச்சி மையம் ரூ.50 கோடி செலவில் ஊட்டியில் அமைக்கப்பட உள்ளது. அந்த மையத்தையும் நீங்கள் தான் திறக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

0 comments:

  ©Template by Dicas Blogger.

TOPO