#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Monday, November 01, 2010

உச்ச நீதிமன்ற கருத்து இறுதித் தீர்ப்பு அல்ல: ஆ.இராசா


உதகை:

ஸ்பெக்ட்ரம் 2 ஜி ஒதுக்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அண்மையில் தெரிவித்துள்ள கருத்துகள் இறுதித் தீர்ப்பல்ல என்று மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ. ராசா கூறினார்.

நீலகரி மாவட்ட வளர்ச்சிப் பணிகள் கண்காணிப்பு ஆணையம் சார்பில் உதகையில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சர் ஆ.இராசா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஊழல் நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் மத்தியப் புலனாய்வு அமைப்பின் நடவடிக்கைகளை உச்சநீதி மன்றம் கண்டித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஆ.ராசா, உச்ச நீதிமன்றத்தில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகள் இறுதித் தீர்ப்பு அல்ல என்றார்.

உச்சநீதிமன்ற கருத்து தொடர்பாக தமது வழக்கறிஞர்களுடன் ஆலோசித்த பின்னரே கருத்து கூற முடியும் என்று ஆ.ராசா குறிப்பிட்டார்.

0 comments:

  ©Template by Dicas Blogger.

TOPO