#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Sunday, September 19, 2010

அனைத்து கிராமங்களிலும் ‘பிராட் பேண்ட்’ வசதி: அமைச்சர் ஆ.ராசா தகவல்

இந்தியாவின் அனைத்து கிராமங்களிலும் இன்னும் இரு ஆண்டுகளில் "பிராட் பேண்ட்" இணைப்பு வழங்கப்பட்டு விடும் என்று மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் அவினாசி அருகே பழங்கரையில் உள்ள ஐ.கே.எப். வளாகத்தில், பி.எஸ்.என்.எல். சார்பில் “வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தினருக்கு இலவச செல்போன் வழங்கும் திட்டம்” தொடக்க விழா 18ஆம் தேதி நடைபெற்றது. இத்திட்டத்தை தொடக்கிவைத்து பயனாளிகளுக்கு இலவச செல்போன்களை வழங்கி பேசிய மத்திய அமைச்சர் ஆ.இராசா,“. நான் 2007ஆம் ஆண்டு தொலைத்தொடர்பு துறை அமைச்சராக பதவியேற்கும் போது 30 கோடியாக இருந்த இணைப்பு, தற்போது 70 கோடியாக அதிகரித்துள்ளது. கிராமங்களில் இருந்த தொலைத்தொடர்பு அடர்த்தி 8லிருந்து 28 சதவீதமாகவும். நாட்டில் ஒட்டு மொத்தமாக 23லிருந்து 59 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது” என்றார்.

அடுத்த இரு ஆண்டுகளில் உள்ளூர் அழைப்புகளுக்கான கட்டணம் வெறும் 10 பைசாவாக குறையும். கடந்த மூன்றாண்டில் பல்வேறு வகையிலும் தொலைத்தொடர்புத் துறை ஒட்டுமொத்த வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் காரணமாக நாட்டிலுள்ள ஆறு இலட்சம் கிராமங்களில் 5.90 இலட்சம் கிராமங்கள் முழுவதும் தரைத் தொடர்பு வழியுடன் இணைத்துள்ள ஒரே நிறுவனம் பி.எஸ்.என்.எல். மட்டுமே ஆகும். சமீபத்தில் காஷ்மீரில் பெய்த அடைமழையின் காரமாக 'லே' என்ற நகரமே அழிவில் சிக்கியது. அப்போது அங்கு பல வகையில் உதவி செய்தது பி.எஸ்.என்.எல். தான் என்பது அப்பகுதி மக்களே கூறுகின்றனர் என்றும் அவர் கூறினார்.

”மத்திய தொலைத்தொடர்பு துறையின் விதிமுறைகளை தளர்த்தியதன் பயனாக தனியார் நிறுவனங்கள் தங்களுடைய லாபத்தில் 5 சதவீதத்தை கிராமப்புற தொலைத்தொடர்பு மேம்பாட்டுக்கு அளிக்க வேண்டும் என்ற விதி அமுல்படுத்தப்பட்டதால், தற்போது 18 ஆயிரத்து 500 கோடி ரூபாய் சேமிப்பாக உள்ளது. இதன் மூலம் அடுத்த இரு ஆண்டுக்குள் நாட்டிலுள்ள அனைத்து கிராமங்களும் கண்ணாடி இழை (ஆப்டிக் பைபர்) மூலம் இணைக்கப்பட்டு “பிராட் பேண்ட்” சேவை வழங்கப்படும். தற்போது அவினாசியில் முன்னோடி, சோதனை திட்டமாக வழங்கப்பட்டுள்ள இலவச மொபைல் போன் திட்டத்தின் தாக்கம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, படிப்படியாக நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்” என்று அமைச்சர் ஆ.இராசா தெரிவித்தார்.

0 comments:

  ©Template by Dicas Blogger.

TOPO