#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Monday, June 29, 2009

தோட்ட தொழிலாளர்களுக்கு அரசு சலுகை கிடைக்க நடவடிக்கை : மத்திய அமைச்சர் ஆ.இராசா பேட்டி


நீலகிரி தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசின் அனைத்து சலுகைகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஆ.இராசா கூறினார்.

நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினரும், மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சருமான ஆ.இராசா பெரம்பலூரில் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது, ”தமிழக முதல்வர் கலைஞரால் அறிவிக்கப்பட்ட சிறப்பு திட்டமான இளம்பெண்களுக்கான திருமண உதவித்தொகை திட்டம், மகப்பேற்று காலத்தில் முன்பும் பின்பும் 6 மாதங்களுக்கு வழங்கப்படும் மகப்பேறு உதவித்தொகை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் வழங்கப்பட்டு வரும் உதவித்தொகைகள் நீலகிரி தோட்ட தொழிலாளர்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை. அங்கு பணிபுரியும் தோட்டத் தொழிலாளர்கள் அனைவரும் நாட்கூலியாக ரூ.100 முதல் ரூ.120 வரை பெறுவதால் அவர்களது மாத ஊதியம் ரூ.3 ஆயிரத்தை கடந்து, ஆண்டு வருமானம் அதிகரித்துவிடுகிறது. இதனால், வறுமைக்கோட்டுக்கு கீழ் வராத நிலையில் அவர்களுக்கு உதவித்தொகை எதுவும் கிடைப்பதில்லை. மற்ற மாவட்டங்களில் 5 ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்கூட வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர் என்று கூறி அரசு திட்டங்களை பெறுகிறார்கள். நாகர்கோயிலை சேர்ந்த ரப்பர் தொழிலாளர்களுக்கும் இதே நிலை உள்ளது. இதற்காக தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்த பிறகு ஆய்வு செய்து, தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் அனைவரும் பயனடைய வழிவகை செய்ய முடியும். இதுதொடர்பாக தமிழக முதல்வரிடம் பேச இருக்கிறேன்’’ என்று மத்திய அமைச்சர் ராசா கூறினார்.

இந்த நேர்காணலின்போது மாவட்டச் செயலாளர் துரைசாமி, பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் ம.இராஜ்குமார், பொதுக்குழு உறுப்பினர் பாடாலூர் சோமு, ஒன்றியச் செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, இராஜேந்திரன், தங்கராசு, வேப்பூர் வெங்கடாசலம், நகரச் செயலாளர் இராஜேந்திரன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் முகமதுபாரி, நடராஜன், கரிகாலன், காட்டுராசா, ஊராட்சித் தலைவர்கள் சரவணமூர்த்தி, இரவிச்சந்திரன், கலையரசன், சாந்தாதேவி குமார், குமார், நகராட்சித்தலைவர் இளையராஜா, நகரமன்ற உறுப்பினர்கள் கனகராஜ், கருணாநிதி, ஜெயக்குமார், மாரிக்கண்ணன் உட்பட பலர் உடனிருந்தனர்.

முன்னதாக பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் தனியார் கணினி மையத்தை மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ,இராசா திறந்து வைத்தார். சட்டப்பேரவை உறுப்பினர் ம.இராஜ்குமார் மற்றும் நிறுவன உரிமையாளர் அரிபாஸ்கர் கலந்துகொண்டனர்.

0 comments:

  ©Template by Dicas Blogger.

TOPO