#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Wednesday, April 14, 2010

அம்பேத்கர், பெண்ணுரிமைக்காக போராடவில்லையா? : அமைச்சர் ஆ.இராசா பேச்சு

பெரியார் பேசிய அளவிற்கு, போராடிய அளவிற்கு அம்பேத்கரை ஒரு பெண்ணுரிமைப் போராளியாக அடையாளப்படுத்த முடியவில்லை என்று சொல்லுகிறார்கள். அம்பேத்கர் பெண்ணுரிமைக்காக தனியாகக் குரல் கொடுக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், அவருடைய குரல் வேறு விதமாக இருக்கிறது.

Rise and fall of Hindu women என்று ஒரு சிறு நூலை எழுதியிருக்கிறார். பெரியார் பெண் விடுதலையை பகுத்தறிவிலிருந்து - பகுத்தறிவுத் தளத்திலேயிருந்து பார்த்தார். அம்பேத்கர் ஜாதி ஒழிய வேண்டுமென்று விரும்பினார், பெரியாரைப் போலவே ஆய்வு செய்தார், எழுதினார், எல்லாம் உண்மைதான். ஆனால், விடுதலையை ஒரு ஆன்மீகத் தளத்திலிருந்து பார்க்க விரும்பினார். பவுத்தத்திற்குப் போனார். பவுத்தத்தில் பெண்களுக்கு எல்லா உரிமையும் இருந்தது. அதைவிட அம்பேத்கரை நாம் அறிந்துகொள்ளவேண்டிய ஒரு இடம். நான் அதற்குப் பின்னால் வருகிறேன்.

பெரியார் செய்த காரியத்தை, பிரச்சாரம் செய்த காரியத்தை அம்பேத்கர் மிகச் சாதுர்யமாக அரசியல் சட்டத்திலே கொண்டு வர முயற்சி செய்தார் என்பதை நான் அடுத்த ஓரிரு நிமிடங்களில் சொல்ல இருக்கிறேன். இந்த இடத்திலே வருகிற பொழுது Suppression of women, Mf Graded inequality, Prohibition of education, Prohibition of ower Ban on property, Suppression of women- இதுதான்.
இந்த இந்துயிசம் இந்த ஐந்து கோட்பாடுகளை வைத்திருக்கிறதே இதனுடைய விளைவு இந்த சமூகத்தில் மட்டும்தானா? அரசியலில் கிடையாதா என்றால் அரசியலில் இந்த சமூகத்தினுடைய அமைப்பின் சார்ந்த சாரம் எல்லா இடங்களிலேயும் ஒரு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.
பெருஞ்சித்திரனார் ரொம்ப அழகாகச் சொல்லுவார்- இந்த நாட்டினுடைய விடுதலையை நான் குறைவுபடுத்தவில்லை, நான் இந்திய அரசாங்கத்தினுடைய அமைச்சர், என்னுடைய காரில் தேசியக்கொடி பறந்துகொண்டிருக்கிறது. எனக்கு தேசப்பற்று இருந்தாக வேண்டும். ஆனால் வரலாற்றைச் சொல்லுகிற பொழுது சரியாகச் சொல்லவேண்டும் பெருஞ்சித்திரனார் சொல்லுகிறார்:
வெள்ளைக்காரர்களுக்கு வால்பிடித்தார்களா?
நல்லவேளை வெள்ளைக்காரன் வந்தான், நம்மையெல்லாம் காப்பாற்றினான், அவன் மட்டும் வராமல் போயிருந்தால் நாமெல்லாம் நரியாக, பூனையாக ஊளையிட்டுக்கொண்டிருந்திருப்போம். இதை நாம் மறுப்பதற்கில்லை. அதனால்தான் பெரியார் மீதும் அம்பேத்கர் மீதும் ஒரு மிகப்பெரிய குற்றச்சாட்டு இருக்கிறது. இவர்கள் வெள்ளைக்காரர்களுக்கு வால்பிடித்தார்கள். சுதந்திரம் வேண்டாம் என்று பெரியார் சொன்னார். அம்பேத்கர் இன்னும் வேகமாக ஒரு இடத்திலே சொன்னார். பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் இருக்கிற ஒற்றுமையைப் பார்க்க வேண்டும்.
பெரியார் சுதந்திரத்தைப் பற்றிப் பேசுகிற போது, வெள்ளைக்காரர்கள் கொள்ளைக்கார பிராமணர்களுக்கு எழுதிக் கொடுத்த மேட் ஓவர். - இந்த வார்த்தையை அய்யா அப்படியே சொல்லியிருக்கிறார்:
சுதந்திரம் என்பது வெள்ளைக்காரர்கள் கொள்ளைக்கார பிராமணர்களுக்கு எழுதிக் கொடுத்த மேட் ஓவர். நான் ஏற்றுக்கொள்ளவில்லை என்றார். இதைச் சொல்லுகிற போது 1947. ஆனால் இது 1937 , 39லேயே அம்பேத்கருக்கு ஒரு சங்கடம் வருகிறது.
இரண்டாம் உலகப்போர் வந்த போது அந்த இரண்டாம் உலகப்போரில் வின்சென்ட் சர்ச்சில் இங்கிலாந்தினுடைய பிரதமர். நம்முடைய நாடு அவருக்குக் கீழே இருக்கிறது. அவர் ஹிட்லரை எதிர்க்கவேண்டும் என்பதற்காக இந்தியத் துருப்புகளைப் பயன்படுத்துகிறார். யாருக்கு எதிராக? நாஜிப்படைகளுக்கு எதிராக. ஹிட்லருக்கு எதிராக இந்தியாவினுடைய துருப்புகளை அவர் பயன்படுத்துகிற பொழுது, காந்தி ஒரு கேள்வியை வைக்கிறார் காங்கிரஸ் சார்பில்.
என்ன கேள்வி என்றால் ``வின்சென்ட் சர்ச்சில் அவர்களே, உங்களுக்கு எதிரி ஹிட்லர், எங்களுக்கு அல்ல. இந்தப் போரில் எங்களுடைய சிப்பாய்களை, எங்களுடைய துருப்புக்களை, எங்களுடைய ஆயுதங்களை நீங்கள் பயன்படுத்தப்போகிறீர்கள். இந்த வெற்றிக்குப் பின்னால் எங்களுக்குக் கிடைக்கப் போவது என்ன?’’ என்று கேட்கிறார்.
What will be the benefit after the war, having deployed our sources? இது காந்தி வைக்கிற கேள்வி, வின்சென்ட் சர்ச்சிலுக்கு. வின்சென்ட் சர்ச்சில் ரொம்ப அமைதியாக பதில் சொன்னார்: To restore traditional Britain -நான் என்னுடைய மரபுமிக்க தொன்மைமிக்க பெருமை மிக்க பிரிட்டனை நான் மீண்டும் பெறுவதற்காகத் தான் போராடப் போகிறேன்.

எவ்வளவு பெரிய கொழுப்பு? காந்தியாருக்குக் கோபம். என்னுடைய சகோதரன் இரத்தம் இழக்கிறான். என்னுடைய சகோதரன் வாழ்வை இழக்கப்போகிறான். குற்றுயிரும், குலைஉயிருமாக இளம் மனைவிகளை இழக்கப்போகிற கணவனை என் கண்ணெதிரிலே பார்க்கிறேன். ஆனால் நீ சொல்லுகிறாய், To restore traditional Briton உன்னுடைய சிப்பாய்களை நான் கொல்லப்போகிறேன் என்று சொன்னால் இது உனக்குத் திமிரல்லவா என்று கேட்கிறார். இது யங் இண்டியாவில் வருகிறது.

காந்தியை தடுமாறவைத்த அம்பேத்கர்!
அடுத்தநாள் அம்பேத்கர் கேட்கிறார். Yes, the question that was asked by Mr.Gandhi is legitimate காந்தி கேட்கிற கேள்வி ரொம்ப நியாயமான கேள்வி. ஆனால் திரும்ப நான் கேட்கிறேன் காந்தியை. வின்சென்ட் சர்ச்சிலுக்கு சிப்பாயை அனுப்பிவிட்டு என்ன பயன் என்று கேட்கிறாயே? நான் கேட்கிறேன், இந்தியாவிற்கு சுதந்திரம் வேண்டுமென்று நீ கேட்கிறாயே, அந்த சுதந்திரத்திற்குப் பின்னால் எனக்கும் பிற்படுத்தப்பட்டவனுக்கும் பற, பள்ளனுக்கும் என்ன கிடைக்கப் போகிறது? What will be the social order after independence since you are fighting for independence? இந்தக்கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டு நீ அவனுக்குக் கேள் என்று அம்பேத்கர் கேட்டபோதுதான் காந்தி தடுமாறிப் போனார்.

இது வரலாறு. இதைத் தான் தந்தை பெரியார் வெள்ளைக்காரர்கள் கொள்ளைக்கார பிராமணர்களுக்கு எழுதிக்கொடுத்த மேட் ஓவர் என்று சுதந்திரத்தைச் சொல்கிறார்.

1 comments:

ஜிஎஸ்ஆர் April 14, 2010 at 12:45 PM  

இன்று தான் முதன் முதலாக தங்கள் தளத்தை பார்க்கிறேன் சரியான முறையில் தொகுத்திருக்கிறீர்கள்

என்றும் அன்புடன்
ஞானசேகர்

  ©Template by Dicas Blogger.

TOPO