ராஜராஜ சோழனை உலக சரித்திரம் அங்கீகரிக்கவில்லை: தஞ்சை விழாவில் ஆ.இராசா பேச்சு
தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் நிறைவு அடைந்ததை கொண்டாட அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவின் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
விழாவில் பெரியகோவில் உருவம் பொறித்த சிறப்பு தபால் தலையை முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் மத்திய தொலைத் தொடபு துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ.ராசா வெளியிட்டார். அதை மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் பெற்றுக்கொண்டார்.
பின்னர் உரையாற்றிய அமைச்சர் ஆ.ராசா, சரித்திரம் படைத்த தமிழருக்கு அஞ்சல் தலை வெளியிடும் மரபில் ராஜராஜசோழனை நினைவு கூர்ந்து சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை வழங்கிய தலைவர் கலைஞருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். விழாவில் எனக்கு முன்பு பேசியவர்கள் அனைவரும் மண்னன் ராஜராஜனின் பெருமைகளை பேசி, அவற்றோடு தலைவர் கலைஞரை ஒப்பிட்டார்கள். ராஜராஜன் பல சாதனைகளை படைத்த போதிலும், உலக சரித்திரம் அவரை அங்கீகரிக்கவில்லை என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், கணக்கு பார்க்கும் நாள் அல்லது கணக்கு தீர்க்கும் நாள் என்ற ஒன்று உள்ளதென்று அண்ணாவை படித்தவர்களுக்கும், பெரியாரை படித்தவர்களுக்கும் நன்றாக தெரியும். அதன்படி இன்று கணக்கு தீர்க்கும் நாள். 1956 ஆம் ஆண்டிலே நடந்த அரசியல் மாநாடொன்றில், தலைவர் கலைஞர் தனது 30-ஆவது வயதில் திராவிடத்தின் உலகத் தொடர்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். அதில், தமிழன் சிங்களத்தை வென்றான்; சோழ தேசம் என்று சொல்லவைத்தான். உலக சரித்திரத்தில் நாகரீகம் கொடி கட்டி பறந்திட்ட தமிழர்கள் இன்று அதை இழந்து தவிக்கிறோம். இழந்த பண்பாட்டை , செங்கோலை மீண்டும் பிடிப்போம் என்று ஆவேசத்துடன் பேசியுள்ளார். பின்பு ஆட்சியில் அமர்வோம் என்பதை அறியாத வயதில் அது பற்றி தலைவர் கலைஞர் பேசியுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கவியரங்கம் ஒன்றில், சோழன் அழைக்கிறேன் வா; சோழ நில கவிஞனே வா என்று தலைவர் கலைஞர் குறிப்பிட்டார். ஆவணப்படுத்துதல், பல்கலைகள் அமைத்தல் ஆகியவை ராஜராஜனுக்கு சொந்தம் அவை கலைஞருக்கும் சொந்தம். கணக்கு தீக்கும் நாள் ஒன்று இனி உண்டு என்றும் தெரிவித்தார்.
1 comments:
பார்ப்பனர்களின் சூழ்ச்சிக்கு இராஜராஜ சோழன் கூட மறைக்கப்பட்டிருக்கிறார் ஆனால் அவரது புகழை பார்ப்பனர்களால் அழிக்கமுடியாது
Post a Comment