#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Sunday, October 25, 2009

25 பைசாவில் போன் பேச வசதி : அமைச்சர் ஆ.இராசா தகவல்

அஞ்சல் அலுவலகங்களில் ‘உடனடி பன்னாட்டு பணப்பரிமாற்ற சேவை’ தொடக்க விழா 24.10.2009 அன்று கோவையில் நடந்தது. மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆ.ராசா புதிய சேவையை தொடக்கி வைத்தார். கோவை மேயர் வெங்கடாசலம், துணை மேயர் கார்த்திக், தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ., கந்தசாமி, மாநகராட்சி மண்டல தலைவர் பைந்தமிழ்பாரி, செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
............................................................................................................................................................

கோவை:
‘‘இந்தியா முழுவதும் தொலைபேசியில் 25 பைசாவில் பேசும் வசதி அடுத்த ஆண்டுக்குள் அறிமுகம் செய்யப்படும்,’’ என மத்திய அமைச்சர் ஆ.இராசா கூறினார்.

இந்திய அஞ்சல் துறை சார்பில், ‘உடனடி பன்னாட்டு பணிப்பரிமாற்ற சேவை’, அயல்நாட்டிற்கு பொருட்கள் அனுப்புவதற்கான ‘ஓர்முக கட்டண பெட்டி’ அறிமுக விழா கோவையில் 24.10.2009 அன்று நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஆ.இராசா பேசியதாவது:
”5 ஆயிரம் அஞ்சல் நிலையங்கள் நவீன தோற்றத்துடன் கணினிமயமாக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் பணியாற்றுவோர், வெளிநாட்டில் கல்வி கற்போர் உடனுக்குடன் பணப்பரிமாற்றம் செய்யலாம். உலகின் எந்த இடத்தில் இருந்து பணம் அனுப்பினாலும் ஒரு நிமிடத்தில் கிடைத்துவிடும். வெளிநாட்டுக்கு பொருட்கள் அனுப்ப ‘ஓர்முக கட்டண பெட்டிகள்’ ரூ.1000, ரூ.1500, ரூ.2500ல் கிடைக்கும். இதில் பொருட்களை வைத்து அனுப்பலாம். முதல்கட்டமாக கோவை, ஊட்டி அஞ்சல் நிலையங்களில் இவ்வசதி கிடைக்கும்’’ என்று கூறினார்.

“100 கோடி மக்கள் தொகையில் 42 கோடி பேர் தொலை பேசி இணைப்பு பெற்றுள்ளனர். கிராமப்புறங்களில் 40 சதவீதம் பேருக்கு தொலைபேசி வசதியை ஏற்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் தொலைபேசியில் 25 பைசாவில் பேசும் வசதி அடுத்த ஆண்டுக்குள் அறிமுகம் செய்யப்படும்’’ என்றும் அமைச்சர் ஆ.இராசா கூறினார்.

0 comments:

  ©Template by Dicas Blogger.

TOPO