#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Tuesday, October 27, 2009

அமைச்சர் ஆ.இராசாவுடன் தென் கொரிய குழு சந்திப்பு


மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ. இராசாவை புது தில்லியில் தென் கொரிய குடியரசின் அதிபருக்கு ஆலோசனைகள் வழங்கக்கூடிய அமைப்பான எதிர்காலம் மற்றும் தொலைநோக்கு குறித்த அதிபர் கவுன்சிலின் தலைவர் டாக்டர் வாக் செங்-ஜன் சந்தித்துப் பேசினார்.
.........................................................................................................


புது தில்லி,
தகவல் தொழில்நுட்பத் துறையில் கூட்டுறவுக்கான வாய்ப்புகளை ஆராய்வதற்காக டாக்டர் வாக் செங்-ஜன் தலைமையிலான ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட தென் கொரிய குழுவினர் மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ. இராசாவை புது தில்லியில் சந்தித்துப் பேசினார்கள்.

தென் கொரிய குடியரசின் அதிபருக்கு ஆலோசனைகள் வழங்கக்கூடிய அமைப்பான எதிர்காலம் மற்றும் தொலைநோக்கு குறித்த அதிபர் கவுன்சிலின் தலைவர் டாக்டர் வாக் என்பது குறிப்பிடத்தக்கது. மின்னணு ஆளுமை, சைபர் பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ள மனிதவள மேம்பாடு, தகவல் தொழில்நுட்ப வன்பொருள் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

தகவல் தொழில்நுட்பத் துறை கூட்டுறவுக்காக இந்தியாவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையே 2001-ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் 2006-வுடன் முடிவடைந்து விட்டது. தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் துறையில் உள்ள ஆற்றல்களை பயன்படுத்திக் கொள்ள இந்த ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பிக்க இருநாடுகளும் விரும்புகின்றன. அதற்கு ஏற்ற வகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

0 comments:

  ©Template by Dicas Blogger.

TOPO