#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Tuesday, October 27, 2009

எம்டிஎன்எல் நிறுவனம் ரூ.35.43 கோடி பங்கு ஈவுத் தொகை, மத்திய அமைச்சர் இராசாவிடம் வழங்கியது

புது தில்லி,

போட்டி சூழல் இருந்த போதிலும் மற்ற நிறுவனங்களைக் காட்டிலும் எம்டிஎன்எல் நிறுவனம் முந்தி நிற்க வேண்டும் என்று மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ. இராசா தெரிவித்துள்ளார். எம்டிஎன்எல் நிறுவனம் தனது சமூக கடமைகளை ஆற்றுவதற்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.

புது தில்லியில் எம்டிஎன்எல் வழங்கிய ரூ.35,43,72,740 தொகை பங்கு ஈவுத் தொகைக்கான காசோலை வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் கலந்து கொண்டு பேசினார். 25.09.2009 அன்று நடைபெற்ற எம்டிஎன்எல் நிறுவனத்தின் 23-வது ஆண்டு பேரவைக் கூட்டத்தில் ரூ.63 கோடி ஈவுத் தொகை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த ரூ.63 கோடியில் ரூ.35.43 கோடி இந்திய அரசுக்கு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பங்கு ஈவுத் தொகைக்கான காசோலையை வழங்கிய எம்டிஎன்எல் தலைவர் ஆர் எஸ் பி சின்கா, கடந்த ஆண்டு எம்டிஎன்எல் நிறுவனம் 40 சதவிகிதம் ஈவுத் தொகை அளித்தாகவும் தற்போது சம்பள உயர்வு போன்றவற்றால் செலவுகள் உயர்ந்ததால் பங்கு ஈவுத் தொகையை குறைத்து கொள்ள நேரிட்டதாகவும் தெரிவித்தார்.

0 comments:

  ©Template by Dicas Blogger.

TOPO