#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Tuesday, May 18, 2010

முன்னாள் அமைச்சர் உடலுக்கு முதல்வர் கலைஞர், அமைச்சர்கள் அஞ்சலி

சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.கிருட்டினசாமி காலமானார். அவரது உடலுக்கு முதலமைச்சர் கலைஞர், மு.க.ஸ்டாலின், ஆ.இராசா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

உடுமலைப்பேட்டை அருகில் உள்ள கணியூரில் திராவிடப் பாரம்பரிய மிக்க குடும்பத்தில் பிறந்தவர் கே.ஏ.கிருட்டினசாமி. இவர் மறைந்த மூத்த அரசியல் தலைவர் கே.ஏ. மதியழகனின் இளைய சகோதரர்.

திராவிட மாணவர் இயக்கத்தில் தீவீரமாக ஈடுபட்ட கிருட்டினசாமி, 1972 முதல் 1978 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும், பின்னர் தமிழக மேலவை உறுப்பிரனராகவும், அமைச்சராகவும் பணியாற்றியவர். கடந்த சில மாதமாக உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கே.ஏ.கிருட்டினசாமி, செவ்வாய்க்கிழமை காலை சென்னையில் காலமானார். கே.ஏ.கிருட்டினசாமியின் இறுதி சடங்கு புதன்கிழமை நடைபெறுகிறது.

கருணாநிதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.இராசா ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். இறந்த கிருட்டினசாமியின் மகன் அருணுக்கு அவர்கள் ஆறுதல் கூறினர்.

0 comments:

  ©Template by Dicas Blogger.

TOPO