#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Saturday, November 14, 2009

நீலகரி மாவட்டத்தின் சேத மதிப்பு ரூ.300 கோடி : அமைச்சர் ஆ.இராசா சேதி


நீலகிரி:

கனமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நீலகரி மாவட்டத்தின் சேத மதிப்பு 300 கோடி ரூபாய் என்று மத்திய அமைச்சர் ஆ.இராசா கூறியுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆங்காங்கே வெள்ளத்தால் மண் சரிவு ஏற்பட்டு, வீடுகள் இடிந்து மக்கள் இறந்துள்ளனர். நீலகிரி மக்களவை உறுப்பினரும் நடுவண் அமைச்சருமான ஆ.இராசா, மாநில கதர் துறை அமைச்சர் க.இராமச்சந்திரன் ஆகியோரின் மேற்பார்வையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சரிசெய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இது குரித்து நீலகிரியில் அமைச்சர் ஆ.இராசா, செய்தியாளர்களுக்கு அளித்த நேர்காணலில், “கடுமையான மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் ரூ.300 கோடி அளவுக்கு சேதமடைந்துள்ளது. மேட்டுப்பாளையம் - கோத்தகிரி - உதகமண்டலம் சாலையில் பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. 8 டன்னுக்கும் அதிகமான எடையுள்ள வாகனங்கள் இந்த சாலையில் அனுமதிக்கப்பட மாட்டாது’’ என்று கூறினார்.

அனைத்து சாலைகளையும் சீர்செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், மேட்டுப்பாளையம் - குன்னூர் சாலை சீரமைப்பிற்கு மத்திய அரசின் உதவி கோரப்பட்டுள்ளது என்றும்
16ஆம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வந்து செல்லலாம் என்றும் அமைச்சர் ஆ.இராசா கூறினார்.

0 comments:

  ©Template by Dicas Blogger.

TOPO