#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Monday, July 06, 2009

உதகை நிழற்படச் சுருள் ஆலையை புனரமைக்க ரூ.30 கோடி நிதியுதவி : மத்திய அமைச்சர் ஆ.இராசா

கடந்த 4-ஆம் தேதி சென்னையில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா, தமிழக முதல்வர் கலைஞரை சந்தித்தார். அப்போது, மத்திய அமைச்சர் .இராசா உடனிருந்தார்.
-----------------------------------------------------------------------------------------------

உதகையிலுள்ள ஹெச்.பி.எப். பிலிம் தொழிற்சாலையை புனரமைக்க நிதியுதவி ரூ.30 கோடி ஒதுக்க வேண்டும் என மத்திய தகவல் தொலைத் தொடர்புத் துறை மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.இராசா வலியுறுத்தியுள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் (நிழற்படச் சுருள்) தொழிற்சாலை புதிய தொழில்நுட்பத்துடன் உற்பத்தியை தொடங்குவதற்காக ஏற்கெனவே கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி மத்திய பொதுத் துறை மறு சீரமைப்பு வாரியம் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் ரூ. 30 கோடியை வழங்கி இந்நிறுவனத்தின் தொடர் வணிகம் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண் டும் என மத்திய கனரக தொழில் துறை மற்றும் பொது நிறுவனங்களின் அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்கிடம், மத்திய தகவல் தொழி ல்நுட்பத்துறை அமைச்சர் ஆ.இராசா கேட்டுக் கொண்டுள்ளார்.

மறு சீரமைப்பு வாரியத்தின் பரிந்துரைகள் முழுவதையும் நடைமுறைப்படுத்துவதில் ஏற்படும் கால தாமதத்தை தவிர்க்கவும், தொழிற்சாலையின் வணிக இயக்கத்திற்கு தேவையான அடிப்படை நிதி ஆதாரத்தை பெற்று புதிய வணிக வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும், முதல் தவணையாக ரூ. 30 கோடி அத்தியாவசியமானதாக கருதப்பட வேண்டும் எனவும் வலியறுத்தியுள்ளார்.

மேலும், மறு சீரமைப்பு வாரியத்தின் பரிந்துரைகள் குறித்து விரிவாக துறை அதிகாரிகளோடு விவாதித்து, அதன் அடிப்படையில் ஒட்டு மொத்த தீர்வும் வழங்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் ஆ.இராசா கோரிக்கை விடுத்துள்ளார். இக்கோரிக்கைகளை பெற்றுக்கொண்ட மத்திய கனரக தொழில்துறை அமைச்சர், மறு சீரமைப்பு வாரியத்தின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு ரூ. 30 கோடியை முதற்கட்டமாக ஒதுக்க பரிசீலித்து ஆவன செய்வதாக உறுதியளித்துள்ளார்.

இந்த நிதியுதவியை பெறுவதன் மூலம் இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை நிறுவனம் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தனது புனரமைப்புப் பணிகளை உடனடியாகத் தொடங்க வழிவகுக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் ஆ.இராசா கூறினார்.

0 comments:

  ©Template by Dicas Blogger.

TOPO