#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Saturday, July 04, 2009

ஸ்பெக்ட்ரம் ஏலம் பற்றி அமைச்சர் குழு முடிவு : ஆ.இராசா தகவல்

புதுதில்லி,
செல்போன் சேவையில் 3-ஆவது தலைமுறைக்காக 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் பற்றி அமைச்சர்கள் குழு இறுதி முடிவு எடுக்கும் என்று மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ஆ.இராசா கூறினார்.
பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாள் அன்று மாநிலங்களவையில் வினா- விடை நேரத்தின் போது துணை வினாக்களுக்கு தகவல் தொலை தொடர்புத் துறை மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.இராசா விடை அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ’’ 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் தொடர்பாக தொலை தொடர்புத் துறை ஆணையத்துக்கும் (ட்ராய்) தொலை தொடர்புத் துறைக்கும் பல விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. குறிப்பாக ஏலத்தில் விடப்பட வேண்டிய ஸ்பெக்ட்ரம் பிளாக்ஸ், ஒதுக்கீடு செய்யப்படும் விலை மற்றும் நிருவாகக் கட்டணம் போன்றவற்றில் வேறுபாடுகள் உள்ளன. இதில் இறுதி முடிவு எடுப்பதற்காக மத்திய அமைச்சர்கள் குழு விரைவில் கூடும். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஊழல் அல்லது முறைகேடு நடப்பதற்கு வாய்ப்பு இல்லை’’ என்று அமைச்சர் ஆ.இராசா கூறினார்.

0 comments:

  ©Template by Dicas Blogger.

TOPO