#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Friday, July 31, 2009

ஊட்டியில் கடும் மழை; மக்களை சந்தித்தார் அமைச்சர் ஆ.இராசா

நீலகிரி மாவட்டத்தில் கடும் மழை காரணமாக முகாம்களில் தஞ்சமடைந்துள்ள பொதுமக்களை அமைச்சர் ஆ.இராசா சந்தித்து நல உதவி பொருட்களை வழங்கினார்.



உதகையில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சேரம்பாடி, பந்தலூர், கூடலூர் பகுதிகளில் முகாம்களில் தஞ்சமடைந்துள்ள மக்களை நடுவண் தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சரும் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா சந்தித்தார். அங்கு தங்கியுள்ள குடும்பங்களுக்கு தேவையான அரிசி, கோதுமை, 3 ஆயிரம் ரூபாய் மற்றும் கம்பளி ஆகிய நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.

பின்னர் அமைச்சர் ஆ.இராசா, செய்தியாளர்களிடம் பேசுகையில், “ நீலகிரி மாவட்டத்தில் கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை நானும் மாநில கதர் துறை அமைச்சர் இராமச்சந்திரனும் மாவட்ட ஆட்சியரோடு கலந்து பேசிவிட்டு சந்தித்தோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு மற்றும் மாவட்ட தி.மு.க. சார்பில் அரிசி, கம்பளி, பணம் ஆகியவை வழங்கினோம். பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

1 comments:

குப்பன்.யாஹூ July 31, 2009 at 6:12 PM  

It is a good measure. well done Mr. Raaja, keep going.

  ©Template by Dicas Blogger.

TOPO