#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Tuesday, August 04, 2009

தேசிய அடையாள எண் ஆணைய உறுப்பினராக ஆ.இராசா நியமனம்
















தேசிய அடையாள எண் ஆணைய உறுப்பினராக தொலைத்தொடர்புத்துறை மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் .இராசா அவர்களை, பிரதமர் மன்மோகன் சிங் தேர்வு செய்து நியமித்துள்ளார்.

புது தில்லி:

இந்தியாவின் அண்டை நாடுகளாக உள்ள பாகிஸ்தான், சீனா, நேபாளம் உள்ளிட்ட நாடுகள் வழியாக நுழையும் தீவிரவாதிகளால் இந்தியாவுக்கு ஆபத்து இருப்பதாக இந்தியப் பாதுகாப்புத் துறை கருதுகிறது. இதனால், உள்துறை அமைச்சகத்தின் சார்பில் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் அடையாள எண் வழங்க நடுவண் அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக நந்தன் நிலேகனி தலைமையில் தேசிய அடையாள எண் ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணியை சிறப்பாக மேற்கொள்ள 10 பேர் கொண்ட உறுப்பினர் குழு அமைக்க முடிவெடுத்த பிரதமர் மன்மோகன் சிங், தேசிய அடையாள எண் ஆணைய உறுப்பினர் குழு பட்டியலை வெளியிட்டுள்ளார்.

இந்தக்குழுவில் தமிழகத்தை சேர்ந்த அமைச்சர்களான ப.சிதம்பரம், .இராசா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ” இந்திய குடிமக்கள் அனைவருக்கும் அடையாள எண் வழங்க தேசிய அடையாள எண் ஆணையம் உருவாக்கப்பட்டு, அதன் தலைவராக நந்தன் நிலேகனி நியமிக்கப்பட்டுள்ளார். அந்த ஆணையக் குழுவில் நடுவண் அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், .இராசா, சரத்பவார், வீரப்பமொய்லி, கபில்சிபல், சி.பி.ஜோஷி, எஸ்.எம்.கிருஷ்ணா, மாண்டேக் சிங் அலுவாலியா, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் உறுப்பினர்களாக இருந்து செயல்படுவார்கள்” என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஆ.இராசா மீது எதிர்கட்சிகள் ஊழல் புகார் கூறிவரும் நிலையில், அமைச்சரின் திறமையான செயல்பாட்டில் நம்பிக்கை கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், இந்தக் கூடுதல் பொறுப்பை வழங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

  ©Template by Dicas Blogger.

TOPO