#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Wednesday, August 19, 2009

பெரியாரும் அம்பேத்கரும் சுயபரிசோதனை செய்துகொண்ட தலைவர்கள்(2)

` பெரியார் அம்பேத்கர் : இன்றைய பொருத்தப்பாடுஎன்ற தலைப்பிலான கருத்தரங்கில் அமைச்சர் . இராசா பங்கேற்று ஆற்றிய உரையின் தொடர்ச்சி...

அம்பேத்கர் - பெரியார் இந்த இரண்டு தலைவர்களும் தன்னைப் பற்றி பரிசோதனை செய்து கொண்டவர்கள். சுயவிளம்புகை செய்து கொண்டவர்கள்.
குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்று சொன்னால், பெரியார் , ``நான் யார்? ஈ.வே.இராமசாமி என்கிற நான், திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகத்திலே இருக்கிற பிற சமுதாயத்தைப்போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்குகிற தொண்டினை மேற்போட்டுக்கொண்டிருக்கிறேன். இந்தத் தொண்டினைச் செய்வதற்கு எனக்கு யோக்கியதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் இதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் செய்து கொண்டிருக்கிறேன்’’

- இது பெரியார் தன்னைப்பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கிற சுய பிரகடனம்.
அதைப்போல் அம்பேத்கர் ஒரு இடத்தில் சொல்லுகிறார்:
I am not a worshipper of idol - நான் சிலைகளை, கடவுளை வணங்குகிறவன் அல்ல. I believe destruction of idols- நான் கடவுளை சிலைகளை அழிப்பதை ஒரு தொழிலாக நம்பிக்கையாகக் கொண்டிருக்கிறவன்.
என்று சொல்லிவிட்டு மீண்டும் அவர் சொல்லுகின்றார்: I hate Gandhi and his philosophy of Hinduism நான் காந்தியையும் அவர் சார்ந்திருக்கிற இந்துயிசத்தையும் வெறுக்கிறேன், ஏனென்றால் காந்தியைப் பாராட்டுவது என்பது வேறு, தேசத்திற்கு நலன் செய்வது என்பது வேறு, வேறு வேறு மட்டுமல்ல சில நேரங்களில் இவை எதிரும் புதிருமாக இருக்கின்றன என்று அவர் சொல்கிறார். I love India அதனால்தான் சொல்லுகிறார்: Gandhi and loving this nation are two distinct and different things and sometimes afford equally opposite என்று குறிப்பிடுகிறார். ஆக இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்தான் இரண்டு தலைவர்களும் இந்த மண்ணில் வாழ்ந்திருக்கிறார்கள்.

பெரியார் - அம்பேத்கர்: இயங்கிய தளம் வேறு


இன்னொன்று இன்றைக்குப் பெரியார் யார், அம்பேத்கர் யார் என்கின்ற சிந்தனையில் இந்த இரண்டு தளத்திலும் சில வேறுபாடுகளைக் கொண்டுவருகிறார்கள். பெரியாருக்குள்ளும் அம்பேத்கருக்குள்ளும் போகிற போது நாம் மிகத்தெளிவாக இருக்க வேண்டும். இரண்டு பேருக்கும் ஓர்மை உண்டு. இருவரும் ஒன்றாகச் சிந்தித்த இடங்கள் உண்டு. இரண்டு பேருக்கும் வேறுபாடுகளும் இருக்கிறது. நாம் மறுதலித்துவிட முடியாது.

பெரியார் எந்தப் பற்றுக்கும் ஆட்படாதவர், எந்தப் பற்றுக்கும் ஆட்படாத தன்னை திராவிட சித்தாந்தம் என்ற சட்டகத்துக்குள் வைத்துக்கொண்டது உண்மைதான். ஆனால் அம்பேத்கருக்கு அந்தக் கட்டாயம் தேவைப்படவில்லை. இன்னும் நான் சொல்லவேண்டுமென்று சொன்னால் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொள்வதற்கு தந்தைபெரியாருக்கு இரண்டு மூன்று காரணங்கள் இருந்திருக்கிறது. ஆனால் இந்திதான் இந்த மண்ணிற்கு ஆட்சிமொழியாக, பொது மொழியாக இருக்க வேண்டுமென்று பதிவு செய்தவர் அம்பேத்கர். வேறுபாடுதான். புரிந்து கொள்ள வேண்டும்.

I need a strong centre என்று சொன்னவர் அம்பேத்கர். மிக முக்கியமான இடத்திலிருக்கிற மய்ய அரசுக்கு அதிக அதிகாரங்கள் தேவை என்று சொன்னவர் அம்பேத்கர். ஆனால், மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் தேவை என்று போராடிய இயக்கங்களுக்கு தந்தையாக இருந்தவர் தந்தை பெரியார். இவையெல்லாம் இருக்கின்ற வேறுபாடுகள். ஒரு காலகட்டத்தில் `தமிழ்நாடு தமிழருக்கே’ என்று கேட்டவர் தந்தை பெரியார். அப்படிப்பட்ட பிரிவினையை அம்பேத்கர் ஒரு நாளும் ஏற்றுக்கொண்டதில்லை. ஏனென்றால் அந்தத் தளத்தில் அவர் இயங்குகிற போது, தலித் விடுதலை என்று வருகிறபோது அல்லது மானிட விடுதலை என்று வருகிறபோது இந்த பூகோள அமைப்பு என்கின்ற எல்லைக்கோடுகளைத் தாண்டி, தான் எந்த இனம் என்கின்ற அடையாளத்தைத் தாண்டிச் செல்ல வேண்டியிருந்தது. திராவிட இன அடையாளத்தைக்கூட தந்தை பெரியார் ஒரு பெருமைமிக்க அடையாளமாகச் சொல்லிக்கொள்ளவில்லை.

(தொடரும்... அடுத்து)
பெரியாரின் பார்வையில் நாட்டு பற்று - மொழி பற்று

0 comments:

  ©Template by Dicas Blogger.

TOPO