#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Saturday, September 12, 2009

"3 ஜி சேவை” திசம்பர் 31-க்குள் செயல்படும்: அமைச்சர் ஆ.இராசா தகவல்

சென்னையில் வெள்ளிக்கிழமை நடந்த தகவல் தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கில் "இந்தியா 2009- 10: அலைவரிசையின் வளர்ச்சிப் பாதை' என்ற நூலை மத்திய அமைச்சர் ஆ. இராசா வெளியிட்டார். அந்த நூலுடன் ( வலமிருந்து) அமைச்சர் பூங்கோதை, மத்திய அமைச்சர் ஆ.இராசா, கருத்தரங்கின் தலைவர் மகாலிங்கம், இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பின் தேசியத் தொலைத் தொடர்புத் தலைவர் மனோஜ், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பின் தலைவர் சுவாமிநாதன்.
....................................................................................................................................................................
சென்னை:
தொலைத் தொடர்புத் துறையின் வளர்ச்சியான "3 ஜி சேவை” இந்த ஆண்டு திசம்பர் 31- ஆம் தேதிக்குள் செயல்படும் என்று மத்திய அமைச்சர் ஆ.இராசா தெரிவித்தார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை அன்று தகவல் தொழில் நுட்பம் தொடர்பான " கனெக்ட் 2009' கருத்தரங்கம் தொடங்கி யது. "இந்தியா 2009-10: அலைவரிசையின் வளர்ச்சி பாதை என்ற புத்தகத்தை மத்திய அமைச்சர் ஆ.இராசா வெளியிட்டார். அத்துடன், சிறந்த தகவல் தொழில் நுட்ப மற்றுமதியாளர்களுக்கான விருதை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் உரையாற்றுகையில், ”தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியில் ஊலக நாடுகள் வரிசையில், இந்தியா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. தொலைத் தொடர்புத் துறையின் வளர்ச்சியான "3 ஜி சேவை” இந்த ஆண்டு திசம்பர் 31- ஆம் தேதிக்குள் செயல்படும்.

தகவல் தொடர்புத்துறை தொடர்பாக கொள்கை முடிவுகள் எடுப்பது மத்திய அரசின் கையில் உள்ளது. மாநில அரசுகளும் தகவல் தொடர்புத் துறை கொள்கை முடிவுகள் எடுக்கக்கூடிய அதிகாரம் வழங்குவது குறித்து இந்தக் கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டு மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கும் பட்சத்தில் இது குறித்து அரசு பரிசீலனை செய்யும்” என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து பி.எஸ்.என்.எல். பங்கு விற்பனை குறித்து செய்தியாளர்கள் வினாவுக்கு ஆ.இராசா விடையளிக்கையில், "இந்திய அரசின் தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். பங்குகளைத் தனி யாருக்கு விற்பனை செய்வது தொடர்பாக தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். பேச்சு வார்த்தையின் முடிவில் பங்குகள் விற்பனை செய்வது தொடர்பாக அரசு முடிவெடுக்கும். பேச்சு வார்த்தை ஒரு வேளை பயனளிக்காமல் போனால் அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ஆலோசனை செய்வேன்” என்று தெரிவித்தார்.

0 comments:

  ©Template by Dicas Blogger.

TOPO