#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Wednesday, September 23, 2009

தேயிலைதோட்ட தொழிலாளருக்கும் நல திட்ட உதவிகள் : அமைச்சர் ஆ.இராசா பெருமிதம்


குன்னூர்:

தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பயன் பெறும் வகையிலான பல்வேறு நல திட்ட உதவி களை முதல்வர் அறிவித்து செயல்படுத்தி வருவதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

நீலகிரி பொது தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் உறுப்பினராக உள்ளவர்கள் அமைப்பு சாரா நல வாரியத்தில் இணைக்கப்பட்டதை தொடர்ந்து இதற்கான உறுப்பினர் அட்டை வழங்கும் விழா கோத்தகிரி புயல் நிவாரண கூடத்தில் செப்டம்பர் 11-ஆம் தேதி நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட பொது செயலாளர் இரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.

இந்த விழாவில், மத்திய அமைச்சர் ஆ.இராசா சிறப்பு விருந்தினராக பங்கேற்று நல வாரிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கி பேசுகையில், “தமிழக அரசு பல்வேறு நல திட்ட உதவிகளை ஏழை, எளிய மக்களுக்கு செய்து வருகிறது. கூலி தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்களுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அரசு சார்பில் அமைப்பு சாரா நல வாரியம் ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் பல்வேறு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே ஏழை, எளிய மக்களின் மீது அக்கறை கொண்ட அரசு கலைஞர் அரசு தான். கலைஞர் காப்பீடு திட்டத்தின் கீழ் 51 நோய்களுக்கான சிகிச்சை அளிக்க ரூ.1 இலட்சம் நிதி வழங்கும் வகையில் உயிர் காக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் தான் உடல் ரீதியாக ஏற்படும் நோய் குறித்து அனைத்து தரப்பு மக்களுக்கும் தெரிய வந்துள்ளது” என்று கூறினார்.

”நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலும் தேயிலை தொழிலை சார்ந்த தொழிலாளர்களே அதிகம் உள்ளனர். இவர்களுக்கு மாநில அரசின் நல திட்ட உதவிகள் கிடைக்க பெறவில்லை என்று கிடைத்த தகவலின் பேரில் தமிழக முதல்வரிடம் இதுகுறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
எனவே திருமண உதவி திட்டம், மகப்பேறு உதவி திட்டம் மட்டுமின்றி மாநில அரசின் அனைத்து நல திட்ட உதவிகளும் கிடைக்கும் வகையில் தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த மாவட்ட மக்களின் நலனுக்காக என்றும் நான் பாடுபட தயாராக உள்ளேன். அனைத்து தரப்பு மக்களும் தங்கள் குறைகளை தெரிவித்து பயன் பெற வேண்டும்” என்றும் அமைச்சர் ஆ.இராசா கூறினார்.

0 comments:

  ©Template by Dicas Blogger.

TOPO