#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Saturday, September 26, 2009

சமஸ்கிருதம் படித்தால்தான் எம்.பி.பி.எஸ். அட்மிஷன் சட்டத்தை எதிர்த்தவர் அண்ணா : ஆ.இராசா பேச்சு


இந்துத்துவாவின் குணாம்சத்தில் ஒன்று: Prohibition of power - அதிகாரத்திற்கு வந்துவிடக்கூடாது என்று கவனமாக இருப்பது.

1930இல், 40 இல் நடந்ததெல்லாம் உங்களுக்குத் தெரியாது. பல மாணவர்களுக்குத் தெரியாது. இன்றைக்கு இருக்கிற அரசியலில் மாணவர்கள் எங்கெங்கோ போய்க்கொண்டிருக்கிறார்கள். திருவிழாவிலே குழந்தைகளை ஒரு நிமிடம் இடுப்பிலேயிருந்து தாய்மார்கள் கழட்டிவிட்டால் கிலுகிலுப்பைக்காரன் பக்கத்திலே ஓடிப்போகிற குழந்தையைப் போல் இன்றைக்கு இருக்கிற இளைஞர்கள் எங்கெங்கோ அரசியல் கட்சிக்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நான் சொல்ல விரும்புகிறேன் 1931 வரை இந்த மண்ணில் சமஸ்கிருதம் படித்தால் மட்டும்தான் எம்.பி.பி.எஸ் - இல் அட்மிஷன். பார்ப்பதற்குப் பைத்தியக்காரத்தனமாக இருக்கும். அண்ணா எழுதுகிறார்.

அண்ணா நேரடியாகச் சொன்னால் எடுக்காது என்று சொல்லி வேறுவிதமாக எழுதுகிறார்:
ரோமனசோ என்று ஒருவன் இருந்தான் ரஷ்யாவில், அவனுக்குத் தாய்மொழி இலத்தீன். ஆனால் இலத்தீன் படித்த அவனுக்கு மருத்துவக்கல்லூரியில் இடம் மறுக்கப்பட்டது. அதனால் அவன் இலக்கியத்திலே பின்னால் பெரிய ஆளாகி பெரிய நோபல் பரிசு பெற்றான். ஆனால் அவன் அப்போது வருந்தினான், எனக்கு இரஷ்ய மொழி தெரியவில்லை என்பதற்காக எம்.பி.பி.எஸ் சீட்
கொடுக்கவில்லையே என்று. உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும், ஒரு மொழி தெரியவில்லையே என்பதற்காக அந்த மண்ணிலே வாழுகிறவனுக்கு எம்.பி.பி.எஸ்ஸிலே சீட் இல்லையா என்று கேட்கிறாய் தம்பி, இங்கு மட்டும் என்ன வாழ்ந்தது? 1931 வரை எந்த ஜாதிக்காரனாக இருந்தாலும் சமஸ்கிருதம் தெரிந்தவனுக்கு மட்டும்தான் எம்.பி.பி.எஸ்ஸில் இடம் என்கின்ற சட்டத்தை உருவாக்கிய நாடு இந்த நாடு. எத்தனை மாணவர்களுக்குத் தெரியும்?

ஆக இது தெரியாமல் போன காரணத்தினால்தான் இன்றைக்கு நிழலிலே இருக்கின்றோம் என்கிற காரணத்தினால்தான் வெயிலின் வெப்பம் அறியாமல் நடந்து வந்த தலைவர்களையெல்லாம் நாம் மறந்துபோகின்ற அவலத்திற்கு நாம் ஆளாகியிருக்கிறோம். ஆகவே இது மூன்றாவது இடம்.
Prohibition of power -அதிகாரத்துக்கு வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள்.
மூன்று Ban on property - சொத்து வாங்கக்கூடாது என்பது இந்துயிசத்தினுடைய தத்துவம். நான்கு, பெண்களை சிறுமைப்படுத்துவது, பெண்களை அடக்கி வைப்பது. Suppression of women – மிகப்பெரிய குற்றச்சாட்டு ஒன்று இருக்கிறது. அம்பேத்கர் மீது. பெரியார் பேசிய அளவிற்கு, பெரியார் போராடிய அளவிற்கு அம்பேத்கரை ஒரு பெண்ணுரிமைப் போராளியாக அடையாளப்படுத்த
முடியவில்லை என்று சொல்லுகிறார்கள்.

அம்பேத்கர் அதற்காகத் தனியாகக் குரல் கொடுக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், அவருடைய குரல் வேறு விதமாக இருக்கிறது.

(தொடரும்...) அடுத்து,
பெரியார் - அம்பேத்கர் : வெள்ளையருக்கு வால்பிடித்தார்களா?

0 comments:

  ©Template by Dicas Blogger.

TOPO