#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Saturday, September 19, 2009

கல்வி, தொழில்துறைகளை வளப்படுத்த கூடுதல் முயற்சி : அமைச்சர் ஆ.இராசா பேச்சு

பெரம்பலூரில் புதிதாக கட்டப்பட்ட தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனையை மத்திய அமைச்சர் ஆ.இராசா திறந்து வைத்தார். நிறுவனர் சீனிவாசன்,செயலாளர் நீல்ராஜ், துணை தலைவர் கதிரவன், சட்டப் பேரவை உறுப்பினர் இராஜகுமார், திமுக மாவட்டச் செயலாளர் துரைசாமி மற்றும் பலர் உடனுள்ளனர்.
.........................................................................................................................................................................
பெரம்பலூர்:

பெரம்பலூரில் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை திறப்புவிழா 18-ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழாவிற்கு கல்வி நிறுவனங்களின் தாளாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். செயலாளர் நீல்ராஜ் வரவேற்றார்.துணைத்தலைவர் கதிரவன், இயக்குநர்கள் மணி, இராஜபூபதி, நிர்வாக அலுவலர் இராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வனிதா, மாவட்ட வருவாய் அதிகாரி பழனிச்சாமி, சட்டப்பேரவைறுப்பினர்கள் இராஜ்குமார், சிவசங்கர், சட்டப் பேரவை முன்னாள்உறுப்பினர் துரைசாமி, முன்னாள் சேர்மன் அட்சயகோபால், அரசு வழக்குரைஞர் இராஜேந்திரன், நகராட்சி துணைத் தலைவர் முகுந்தன், ரோவர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் வரதராஜன், நகர வர்த்தகர் சங்கத் தலைவர் பழனியாண்டி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

மருத்துவமனையை மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ.இராசா திறந்து வைத்து பேசுகையில்,”பொதுவாழ்வில் செல்வம் ஈட்டுவது அவரவரர் உரிமையாகும். அவ்வாறு ஈட்டக்கூடிய செல்வம் அறத்தின் பயனாக ஈட்டும்போது பிறருக்கும் அது இன்பத்தை தரக்கூடியதாக இருக்கும். பெரம்பலூர் மாவட்டத்தில் செய்யப்பட்ட பல்வேறு பணிகளுக்கும் காரணகர்த்தா முதல்வர் கருணாநிதி தான். எனது பிறந்தவீடான பெரம்பலூர் மட்டுமின்றி தற்போது புகுந்த வீடாக உள்ள நீலகிரியிலும் மக்கள் நலனுக் காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறேன். பெரம்பலூர் மாவட்டத்தில் கல்வி மற்றும் தொழில்துறைகளை வளப்படுத்த கூடுதல் முயற்சி எடுக்கப்படும்’’ என்று கூறினார்.

இந்த விழாவில் கல்லூரி முதல்வர்கள் தாயுமானவன், ஜெயராமன், அனுஷாபாஸ்கர், முத்தரசு, சுகுமார், வேல்முருகன், பாஸ்கரன், துணை முதல்வர்கள் அப்ரோஸ், முத்துமணி, நந்தக்குமார், செந்தில்குமார், டீன்கள் கண்ணன், சேகர் மற்றும் பலர் பங்கேற்றனர். மருத்துவமனை டீன் அரங்கநாதன் நன்றி கூறினார்.

0 comments:

  ©Template by Dicas Blogger.

TOPO