#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Wednesday, September 02, 2009

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட முதல் புத்தகம் : அம்பேத்கர் எழுதியது - அமைச்சர் ஆ.இராசா பேச்சு


Genesis, Mechanisism and Development of Caste in India என்ற கட்டுரையை அம்பேத்கர் எழுதுகிற போது அவருக்கு வயது 25. 25 வயதில் ஒரு இளைஞன் இப்படி ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை எழுத முடியுமா என்று இதுவரை யாருக்கும் தெரியாது. அவரால் பயன்படுத்தப்பட்ட மேற்கோள்கள் எவ்வளவு என்பதை இதுவரை ஆழம் பார்த்தவர்கள் இல்லையோ என எண்ணுகிற அளவுக்கு அம்பேத்கரினுடைய அறிவுநுட்பம் அந்த நூல்களில் வெளிப்படுகிறது.

இன்னும் சொல்லப்போனால் 1857 இல் 1856 இல் சிப்பாய்க் கலகம் நடந்த பொழுது மதவிவகாரங்களில் நாங்கள் தலையிட மாட்டோம் என்று வெள்ளைக்காரர்கள் இந்தியத் தலைவர்களுக்கு எழுதிக் கொடுத்தார்கள். பன்றிக் கொழுப்பை துப்பாக்கியிலே வைத்ததாகச் சொல்லப்பட்ட பொழுது அதை இஸ்லாமியர்கள் ஒப்புக்கொள்ள முடியாது என்று சொன்னபோது ஒரு மிகப்பெரிய இராணுவக் கலவரம் வெடித்தது. சிப்பாய்களுக்குள் கலகம் வந்த பொழுது வெள்ளைக்கார அரசாங்கம் ஒரு ஒப்புதலுக்கு வந்தது, உங்களுடைய மத விவகாரங்களில் நாங்கள் தலையிட மாட்டோம் என்று .

Genesis, Mechanisism and Development of Caste in India - ஜாதியினுடைய தோற்றமும் வளர்ச்சியும் அது இயங்குகிற முறையும் என்று ஒரு புத்தகத்தை அம்பேத்கர் 1916 இல் எழுது கிறார். இந்தியாவில் முதன்முதலாகத் தடைசெய்யப்பட்ட ஒரு புத்தகம் வெள்ளைக்கார அரசாங்கத்தால் உண்டு என்று சொன்னால் அதுதான் அந்தப் புத்தகம் இந்தியாவில் முதன்முதலாகத் தடைசெய்யப்பட்ட அம்பேத்கரின் புத்தகம்தான் வெள்ளைக்கார அரசாங்கத்தால் ஒரு இந்தியர் எழுதி முதன்முதலில் தடைசெய்யப்பட்ட புத்தகம். அந்தப் புத்தகத்தைத் தடைசெய்ய வேண்டுமென்று Privy Council என்று சொல்லப்படுகிற உச்சநீதி மன்றம் வரை சென்றனர். இன்றைக்கு உச்சநீதி மன்றம் டெல்லியிலே இருக்கிறது. ஆனால் அன்றைக்கு உச்சநீதி மன்றம் Privy Council என்று சொல்லப்பட்ட, இங்கிலாந்திலே இருந்த அந்த உச்சநீதிமன்றம் வரை சென்று அந்தப் புத்தகத்திற்குத் தடை வாங்கினார்கள் இங்கே இருக்கின்ற பிராமணர்கள். ஏனென்றால் அதிலேதான் ஜாதி எப்படித் தோன்றியது ? அது இயங்குகிற காரணத்தினால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன? என்று சொன்னார். அதிலே ஒரு இடத்திலே சொல்லுவார்: Hindus are the only people in the world whose relation between man to man has been consecrated as sacred, eternal and inviolative. உலகத்திலே வேறுபாடுகள் இருக்கிறது.

பிளாட்டோ எழுதிய `குடியரசே’ Division of Labour தான். Division of Labour என்பது வேறு , Division of Labourers என்பது வேறு. தொழிலைப் பிரிப்பதென்பது வேறு, தொழிலாளர்களைப் பிரிப்பதென்பது வேறு. மேலை நாடுகளில் தொழிலைப் பிரித்தார்கள்,

நான்கூட ஒருமுறை வெளிநாட்டிற்குச் சென்றிருந்தேன். வெளிநாட்டிற்குச் சென்றிருந்து, ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் அறையிலே நான் தங்கியிருந்த போது , திடீரென்று கதவைத் தட்டினார்கள் மாணவர்கள். மாணவர்கள் என்று தெரியாது. இளம் பிராயத்திலே இருக்கின்ற பெண்கள், ஆண்கள் எல்லாம் திடீரென்று கதவைத் தட்டினார்கள். உங்கள் அறையைச் சுத்தம் செய்யப் போகிறோம் என்று சொன்னார்கள். எனக்கு ஒரு சந்தேகம். யாரைப் பார்த்தாலும் நமது இந்தியன் புத்தி இருக்கிறதே நமக்குள் தெருக்கூட்டி என்றால் இப்படித்தான் இருப்பான், தோட்டி என்றால் இப்படித்தான் இருப்பான்., என்று நம்மையும் அறியாமல் நமது மூளைக்குள் இருக்கிற புத்தி அங்கே வெளியே வந்தது. நீங்களெல்லாம் யார்? உங்களுக்கு எவ்வளவு சம்பளம் தருகிறார்கள் என்று அவர்களைப் பார்த்து நான் கேட்டேன். அவர்கள் உடுத்தியிருந்த உடை, அவர்கள் வந்த நாகரீகம், அவர்கள் பழகிய பண்பாடு இவற்றையெல்லாம் பார்த்து எவ்வளவு உங்களுக்கு சம்பளம் என்று கேட்டேன்.

முதலில் அவர்கள் கேட்ட கேள்வி, Are you Indian? நீ ஒரு இந்தியனா? என்று கேட்டார்கள், பரிகாசத்தோடு. ஏன் என்று கேட்டேன். இந்தியாவில்தான் கூட்டுவதற்கும், கழுவுவதற்கும் ஒரு ஜாதி இருக்கிறது என்று கேள்விப்பட்டோம், நாங்கள் பக்கத்திலே இருக்கிற மருத்துவக் கல்லூரியின் மாணவர்கள், இந்த ஓட்டலைக் குத்தகைக்கு எடுத்திருக்கிறோம். ஒரு முறை பகலிலும், இரவிலும் சுத்தம் செய்து விட்டுப் போனால் எங்களுக்கு பாக்கெட் மணி இத்தனை டாலர் கிடைக்கிறது. இதைத்தான் நாங்கள் பெருமையாகக் கருதுகிறோம் என்று சொல்லுகின்ற மனப்பாங்கு அந்த நாட்டில் இருக்கின்றது.

எனவே அங்கு சலவைத் தொழிலாளி இருக்கிறான். ஆனால் பிறப்போடு அது முடிச்சுப்போடப்படவில்லை. அங்கே தச்சன் இருக்கிறான், ஆனால் பிறப்போடு அது முடிச்சுப் போடப்படவில்லை. அங்கே செருப்புத் தைக்கிற தொழிலாளி இருக்கிறான். ஆனால் அவன் பிறப்போடு முடிச்சுப் போடப்படவில்லை. இன்றைக்குச் செருப்புத் தைக்கிற தொழிலாளி நாளைக்குத் தன் தொழிலை மாற்றிக் கொள்ளுவார். அதனால்தான் சொன்னார், Division of Labour என்பது வேறு , Division of Labourers என்பது வேறு. அம்பேத்கர் சொல்லுவார்: Hindus are the only people in the world whose relation between man to man has been consecrated by the religion as inviolative and eternal மாற்ற முடியாது. ஒருமுறை ஒருவன் பிறந்து விட்டால் மாற்றமுடியாது. நீ இந்த ஜாதி என்று பிறந்து விட்டால் நான் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் மாற்ற முடியாது.

அய்யா கிண்டலாகச் சொல்லுவார். இந்து யார் என்று விளம்பரம் சொல்லுகிற போது, இந்து யாரென்று அரசியல் சட்டத்திலே, நம்முடைய இந்து லாவிலே சொல்லுகிறபோது, யார் இந்து என்று சொன்னால் அய்யா சொல்லுகிறார்:

எதுன்னு கேட்டா எதுன்னு நீ சரியாச் சொல்லனுமில்ல? எது மாடு இல்லையோ, எது கோழி இல்லையோ, எது கொக்கு இல்லையோ அதெல்லாம் ஆடு ன்னு சொன்னா அவன் பைத்தியக்காரன்ல? அது மாதிரின்னு சொன்னார். அதுவரைக்கும் புரியல நமக்கு.

அய்யா சொல்றார், இந்துன்னா யாருன்னு இவன் சொல்லணுமில்ல? Those who are not Muslims, those who are not Christians, those who are not Persians, those who are not Jews, they are Hindus. யாரெல்லாம் முகம்மதியன் அல்லவோ, யாரெல்லாம் கிறிஸ்துவன் அல்லவோ, யாரெல்லாம் பார்சியன் அல்லவோ, யாரெல்லாம் அவனல்லவோ, இவனல்லவோ அவனெல்லாம் இந்து.

இதைத் தாண்டி இன்னொருவன் பிறக்கமுடியாது இந்த மண்ணில். இந்த முடிச்சை கொண்டு வந்த சேர்த்த இழிவு , பெருமை எது என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அது இந்த இந்துமதத்திற்குத் தான் உண்டு.

இதைத்தான் தந்தை பெரியார் அவர்களும், அண்ணல் அம்பேத்கர் அவர்களும் ஒரே இடத்தில் நின்று சொன்னார்கள்.

( தொடரும்...) அடுத்து
பிராமணியத்திற்கும், இந்துத்துவாவிற்கும் வித்தியாசமில்லை

0 comments:

  ©Template by Dicas Blogger.

TOPO