#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Tuesday, September 22, 2009

3-ஆவது கட்டமாக 67 அஞ்சலகங்கள் நவீனமயம் : அமைச்சர் ஆ.இராசா தகவல்

ஊட்டி-திருப்பூர் இடையேயான அஞ்சலக சரக்கு போக்குவரத்து சேவையை மத்திய தகவல் மற்றும் தொழில் நுட்ப துறை அமைச்சர் ஆ.இராசா, ஊட்டியில் தொடக்கி வைத்தார். மாநில கதர் வாரியத்துறை அமைச்சர் இராமச்சந்திரன், குன்னூர் சட்டப்பேரவை உறுப்பினர் சவுந்திர பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
........................................................................................................................................................................
ஊட்டி:

புராஜக்ட் ஏரோ திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மூன்றாவது கட்டமாக 67 அஞ்சலகங்கள் அதி நவீனமயமாக்கப்படும் என அமைச்சர் ஆ.இராசா தெரிவித்தார்.

இந்திய அஞ்சல் துறை சார்பில் அதி நவீன அஞ்சல் அலுவலகத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 27 அதிநவீன அஞ்சலகங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா ஊட்டியில் நடந்தது. தமிழக அஞ்சல்துறை தலைவர் சக்கரவர்த்தி வரவேற்றார். தமிழக கதர் வாரியத்துறை அமைச்சர் இராமச்சந்திரன், ஊட்டி சட்டப்பேரவை உருப்பினர் கோபாலன், குன்னூர் சட்டப்பேரவை உறுப்பினர் சவுந்திரபாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் குப்புசாமி, ஊட்டி நகராட்சி தலைவர் இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ.இராசா கலந்துகொண்டு 27 அதி நவீன அஞ்சலகங்களை நாட்டிற்கு அர்ப்பணித்து பேசுகையில், “புராஜக்ட் ஏரோ திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 27 அஞ்சலகங்கள் அதி நவீன அஞ்சலகங்களாக மாற்றப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டத்தில் மட்டும் ஊட்டி, அருவங்காடு உட்பட 9 அஞ்சலகங்கள் அதிநவீன அஞ்சலகங்களாக மாற்றப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள இரு துறைகள் சேவை செய்து வருகிறது. ஒன்று இரயில்வே துறை. மற்றொன்று அஞ்சல்துறை. இரயில்வே துறை சேவையும், லாபமும் ஈட்டி வருகிறது. ஆனால் அஞ்சல் துறை மட்டுமே லாபத்தை பார்க்காமல் சேவை செய்து வருகிறது.
இந்தியாவில் உள்ள 6 இலட்சம் கிராமங்களில் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் அஞ்சலகங்கள் உள்ளன. இவை மூலம் மக்களுக்கு அஞ்சல் துறை தொடர்ந்து உணர்வு பூர்வமாக சேவை செய்து வருகிறது’’ என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், ”தற்போது இந்தியாவிலுள்ள அஞ்சலகங்கள் ரூ.500 கோடி மதிப்பில் நவீன மயமாக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக 50 அஞ்சலகங்கள் நவீனமயமாக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த ஆட்சியில் 9 அஞ்சலகங்கள் தமிழகத்தில் நவீன மயமாக்கப்பட்டது. தற்போது இரண்டாவது கட்டமாக தமிழகத்தில் 27 அஞ்சலகங்கள் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. மூன்றாவது கட்டத்தில், 67 அஞ்சலகங்கள் நவீன மயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோட்ட தொழிலாளர்கள் உண்மையான பிரச்னை என்னவென்று தமிழக முதல்வருக்கு கொண்டு செல்லப்படாமல் இருந்தது. முதியோர் உதவித் தொகை, திருமண உதவித் தொகை போன்றவை கிடைக்காமல் இருந்தது. தற்போது இது தமிழக முதல்வரிடம் கொண்டு செல்லப்பட்டு சட்டத்தை திருத்தி தோட்ட தொழிலாளர்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.

இந்த நிகழ்வில் ஊட்டி நகராட்சி துணை தலைவர் இரவிக்குமார், வேளாண் விற்பனை குழு தலைவர் இளங்கோ, தேர்தல் பணிக்குழு செயலாளர் முபாரக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

1 comments:

ரவி September 23, 2009 at 2:55 PM  

Hi,

Please Bring 3G to India soon. We are way behind rest of the world in this.

also, Please look into VOIP Services misuse.

  ©Template by Dicas Blogger.

TOPO